Categories: indialatest news

கணவருக்கு வந்த திடீர் ஆசை… மூன்றாவது திருமணம் செய்து வைத்த இரண்டு மனைவிகள்…

பொதுவாக திருமணமான கணவர்கள் இன்னொரு பெண்ணை பார்த்தாலே கோபமாகி காளியாகும் பெண்கள் மத்தியில் இப்படியும் சில பெண்களா என ஆச்சரியப்படும் வகையில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.

ஆந்திரா மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தினை பெடபெயலு அருகே உள்ள கிராமத்தினை சேர்ந்தவர் பாண்டண்ணா. இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சாகேனி பர்வதம்மாவுக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் இத்தம்பதிக்கு குழந்தை பிறக்கவே இல்லை. 

குழந்தை ஆசையால் இன்னொரு திருமணம் செய்ய இருப்பதாக சாகேனியிடம் பாண்டண்ணா கூற அவரும் முழு மனதுடன் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து 2005ம் ஆண்டு பாண்டண்ணாவுக்கும், சாகேனி அப்பளம்மா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு இரண்டு வருடம் கழித்து 2007ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

இரண்டு மனைவி மற்றும் மகனுடன் ஒரே வீட்டில் தான் பாண்டண்ணா வசித்து வந்தார். இவருக்கு திடீரென இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை வந்தது. ஆனால் அவர் முதல் இரண்டு மனைவிகளால் குழந்தை பெற்றுகொடுக்க முடியாமல் இருந்தது. உடனே இன்னொரு பெண்ணை கணவருக்கு பார்த்துள்ளனர்.

வெகு விமரிசையாக பேனர் அடித்து கணவருக்கு மூன்றாவது திருமணத்தினை இரண்டு மனைவிகள் முன்னின்று நடத்தி வைத்து இருக்கின்றனர். இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதை பார்க்கும் பலர் ஆச்சரியமடைந்து இருக்கின்றனர்.

AKHILAN

Recent Posts

ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…

3 hours ago

நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…

தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…

3 hours ago

பி.எஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..

வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…

3 hours ago

தற்கால வீரர்களில் இவர் மட்டும் தான்.. மிரட்டி விட்ட விராட்..!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…

4 hours ago

குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம்..பன்னிரெண்டாம் தேதி சூரசம்ஹாரம்…

நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…

4 hours ago

இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை – ICC

இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…

4 hours ago