தனது காதலை ஏற்காத வாலிபரை பழிவாங்க முடிவு செய்து பெண் செய்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
கர்நாடக மாநிலம், யாதகிரி அம்பேத்கர் காலனியை சேர்ந்த நபர் நாகேஷ். இவரின் மனைவி சித்தம்மா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மாதத்தில் மீனாட்சி என்கின்ற பெண் குழந்தை இருக்கின்றது.. அதே பகுதியில் மைனர் பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகின்றார் இவருக்கு நாகேஷ் என்பவர் சித்தப்பா முறை ஆகின்றது. எல்லப்பா என்பவரும் அந்த சிறுமிக்கு சித்தப்பா முறை தான்.
இப்படி இருக்கும் நிலையில் முறை தவறி எல்லப்பாவை அந்த பெண் ஒரு தலையாக காதலித்து வந்திருக்கின்றார். இது குறித்த அவரிடம் காதலை தெரிவித்த போது என்னப்பா காதலை ஏற்க மறுத்து விட்டார். இதனால் அவரை பழிவாங்க எண்ணிய பெண் எல்லாப்பாவின் அண்ணன் மகளான மீனாட்சியை கிணற்றில் வீசி கொன்று இருக்கின்றார். இதையடுத்து குழந்தையை காணவில்லை என்று பெற்றோர்கள் தேடிய நிலையில் யாதகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த இவர்கள் குழந்தையை தேடி கண்டுபிடித்தனர். அங்கு உள்ள கிணறில் இருந்து குழந்தை பிணமாக மீட்கப்பட்டது. குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனை செய்த நிலையில் குழந்தையை யார் கொன்றது என்பது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்த விசாரணையில் எல்லப்பாவை ஒரு தலையாக காதலித்து வந்த அந்த பெண் தான் இப்படி ஒரு செயலை செய்து இருக்கின்றார். ஆனால் முதலில் அந்த பெண் தனக்கு ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடி இருக்கின்றார். பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தனது காதலை எல்லப்பா ஏற்காத காரணத்தினால் அவரை பழிவாங்குவதற்காக அவரது அண்ணன் மகளை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதி மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…