விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஜூலை 10) நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் முடுக்கிவிட்டிருக்கிறார்.
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி , கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மறைந்ததை அடுத்து, ஏப்ரல் 8-ம் தேதி அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் பரப்புரைகள் நேற்று மாலையோடு ஓய்ந்திருக்கும் நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருட்களை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் பென்சில், பேனா, மை உள்ளிட்ட 111 பொருட்கள் விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊழியர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.
மேலும், விக்கிரவாண்டியில் உள்ள தங்கும் விடுதிகள், வீடுகளில் தங்கி பரப்புரை மேற்கொண்ட வெளியூர் நபர்கள், கட்சி பிரமுகர்கள் தொகுதியில் தங்க அனுமதி இல்லை எனவும் அவர்கள் உடனடியாக வெளியேறும்படியும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருக்கிறார். மீறி, தங்கும் பட்சத்தில் தேர்தல் ஆணைய விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் சார்பில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…