விக்கிரவாண்டியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக முன்னிலை வகுக்கின்றது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரபாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த பத்தாம் தேதி 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இதில் திமுக சார்பாக அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் சார்பாக டாக்டர் அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தல் களத்தில் போட்டியிட்டார்கள், மொத்தம் ஒரு லட்சத்து 95 ஆயிரம் பேர் வாக்களித்தனர் 82.47 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகி இருக்கின்றது,
அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. இன்று அதிகாலை ஆறு மணிக்கு வாக்கு எண்ணுவதற்கான பணிகள் தொடங்கியது.
காலை 7:30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகுத்து வருகின்றார்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…