Categories: Cricketlatest news

களத்தில் சண்டை.. பவுலருக்கு சோக்-ஸ்லாம் போட்ட பேட்டர்.. வீடியோ வைரல்

கிரிக்கெட் களத்தில் வீரர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகம் நடைபெறுகிறது. களத்தில் வீரர்கள் கருத்து மோதல்களில் ஈடுபடுவது, கோபத்தில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதை பலமுறை பார்த்திருக்கிறோம். சமயங்களில் வீரர்கள் கையில் இருக்கும் பேட்-ஐ உயர்த்தி பந்துவீச்சாளரை மிரட்டுவது, பேட்-ஐ தூக்கி வீசுவது போன்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில், கோபப்பட்ட பேட்டர் பந்துவீச்சாளருக்கு சோக்ஸ்லாம் (ஒருவரை தூக்கி கீழே வீசுவது) போட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. களத்தில் பேட்டர் அவுட் ஆனதை அடுத்து மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட பந்துவீச்சாளர் மிகவும் ஆக்ரோஷமாக பேட்டர் அருகில் சென்று ஆர்ப்பரித்தார். ஒருக்கட்டத்தில் பேட்டர்-ஐ அவர் வெளியேறுமாறு கூறினார்.

அவுட் ஆனதும் அமைதியாய் களத்தில் இருந்து வெளியேற முற்பட்ட பேட்டர், பந்துவீச்சாளரின் ஆக்ரோஷத்தை கண்டு கோபம் அடைந்தார். இருவரும் வார்த்தைகளை விட்ட நிலையில் திடீரென கோபத்தின் உச்சிக்கு சென்ற பேட்டர், பந்துவீச்சாளரை அப்படியே தூக்கி கீழே சாய்த்தார். மேலும் அவரை கடுமையாக தாக்கவும் முற்பட்டார். இருவரையும், களத்தில் இருந்த வீரர்கள், அம்பயர்கள் தடுக்க முயற்சித்தினர்.

எனினும், முயற்சி பலனளிக்கவில்லை. ஒருக்கட்டத்தில் பேட்டை தூக்கி வீசிய பேட்டர், பந்துவீச்சாளரை தாக்க மீண்டும் முயற்சித்தார். இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. எம்சிசி வீக்டேஸ் பாஷ் XIX தொடரின் இறுதிப்போட்டியில் தான் இந்த மோதல் சம்பவம் அரங்கேறியது.

ஏரோவிசா கிரிக்கெட் மற்றும் ரப்டான் கிரிக்கெட் கிளப் அணிகள் இடையிலான போட்டியின் போது ரப்டான் கிரிக்கெட் கிளப் பேட்டர் காஷிஃப் முகமது மற்றும் ஏரோவிசா பந்துவீச்சாளர் நாசிர் அலி இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

17 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

18 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

21 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

21 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

22 hours ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago