இந்திய மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 19 ஆம் தேதி துவங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த டெஸ்ட் போட்டி இரு அணிகளின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதுதவிர இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு களமிறங்கும் டெஸ்ட் போட்டி தொடராக இது அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியை ஒப்பிட்டு பேசும் சம்பவங்கள் பலமுறை அரங்கேறியுள்ளன. கிரிக்கெட்டில் ஜாம்பவான் வீரராக பார்க்கப்படும் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலியால் மட்டுமே முறியடிக்க முடியும் என்ற சூழல் நிலவுவதே இதற்கு காரணம் ஆகும்.
அந்த வரிசையில், விராட் கோலி மற்றொரு உலக சாதனையை படைக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. மேலும் இந்த சாதனையை அவர் இந்தியா வங்கதேசம் டெஸ்ட் தொடரிலேயே படைப்பார் என்றும் தெரிகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் 591 இன்னிங்ஸில் மொத்தம் 26,942 ரன்களை அடித்துள்ளார்.
அதன்படி இன்னும் 58 ரன்களை மட்டும் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையோடு, குறைந்த போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைக்க முடியும். வங்கதேசம் அணியுடன் இந்தியா இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில் ஒரு இன்னிங்ஸில் அரைசதம் கடந்தாலே விராட் கோலி இந்த சாதனையை படைத்துவிட முடியும்.
இது சாத்தியமாகும் பட்சத்தில் 147 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனைய விராட் கோலி படைப்பார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸில் 27,000 ரன்களை கடந்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. டெண்டுல்கர் தவிர ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், இலங்கையின் குமார் சங்கக்காரா ஆகியோரும் சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…