இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 19) நடைபெற இருக்கிறது. இதையொட்டி இந்திய அணி சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று நடைபெற்ற பயிற்சியில் இந்திய வீரர்கள் ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். சென்னை வானிலை வீரர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக நேற்றைய பயிற்சி மூன்று கட்டங்களாக நடைபெற்றன.
இதில் வீரர்கள் கடும் வெயிலிலும் வியர்வை வழிய தீவிர பயிற்சி செய்தனர். பயிற்சியில் வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தவும், அனைவரின் பங்களிப்பை அதிகப்படுத்தும் வகையிலும், இந்திய அணிக்கான ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் வித்தியாசமான பயிற்சிக்கு திட்டமிட்டு இருந்தார். அதன்படி இந்திய வீரர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒரு குழுவில் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்களும் மற்றொரு பிரிவில் பேட்டர்களும் இடம்பெற்று இருந்தனர்.
இரு குழுவுக்கும் தனித்தனி பயிற்சி போட்டி அடிப்படையில் நடத்தப்பட்டது. இதில் இரு குழுக்களில் எந்த குழு குறைந்த தவறு செய்தது என்ற அடிப்படையில் வெற்றியாளர் குழு தேர்வு செய்யப்பட்டது. அந்த வகையில், நேற்றைய பயிற்சி போட்டியில் விராட் கோலி அணி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது என ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் தெரிவித்தார்.
தற்போது இரு அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் நடைபெறுகிறது. தற்போதைய நிலவரப்படி இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலில் 68.52 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. வங்கதேசம் அணி 45.83 சதவீத புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
வங்கதேசம் அணியுடனான டெஸ்ட் தொடரை தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அதன்பிறகு இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என மொத்தம் பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…