கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான சண்டை மட்டும் ஓயவே ஓயாது போல. ஒவ்வொருவரின் வித்தியாசமான சண்டையை கேட்கும் போது இப்படிலாம் எப்படி தான் சண்டை வருது என யோசிக்க தோணும். அந்த வகையில் தற்போது இன்னும் சண்டை குறித்த நிகழ்வும் வெளியாகி இருக்கிறது.
மகாராஷ்ட்ரா மாநிலம் பால்கர் மாவட்டத்தினை சேர்ந்த சிஸ்னே கிராமத்தில் 23 வயதான பழங்குடி பெண் தன் கணவன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இவர் கணவர் ஒரு மீனவர் என்பதால் அடிக்கடி வெளியில் செல்வது வழக்கமாம். அதுப்போல ஞாயிற்றுக்கிழமை கணவர் நண்பர்களுடன் வெளியில் சென்று விட்டாராம்.
தன்னை அழைத்து செல்லாமல் போன கணவர் மீது அப்பெண்ணுக்கு கடும் கோபம் வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் தன்னுடைய புத்தியை இழந்தவர். மகளை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டு இருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அவ்வீட்டின் அருகில் இருந்தவர்கள் தகவல் அளித்த நிலையில் அப்பெண் மற்றும் மகளின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இக்கொலை குறித்த விசாரணையும் தொடங்கி நடந்து வருகிறது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…