Categories: indialatest news

அதானி, அம்பானியை ஏ1, ஏ2 எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி.. நாடாளுமன்றத்தில் அமளி…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி தலைமையிலான பாஜக அரசு பிரபல பிசினஸ் தான் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானிக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். ஆனால் அவையில் சம்பந்தப்படாதவர்களின் பெயர்களை ராகுல் காந்தி பயன்படுத்துவது முறையில்லை என அவை தலைவர் ஓம் பிர்லா தெரிவித்திருக்கிறார்.

இதனால் ராகுல் காந்தி அவர்களை ஏ1 மற்றும் ஏ2 எனக் குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். அதானி மற்றும் அம்பானி இருவரும் இந்தியாவின் மொத்த பணத்தையும் தங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.  அவர்கள் பெயர் இல்லாமல் பின்னர் அவர்களை எப்படி குறிப்பிட முடியும் என கேள்வி எழுப்பினார். இருந்தும் ஓம் பிர்லா அவரை தொடர்ந்து நிறுத்துமாறு கூறினார்.

இரண்டு தொழிலதிபர்கள் நாட்டையே தங்கள் வசம் வைத்துள்ளனர். அவர்கள் பெயரை என்னால் அவையில் எடுக்க முடியவில்லை என்றால் நான் அவர்களை ஏ1 மற்றும் ஏ2 என்று தான் குறிப்பிட வேண்டும். நான் அதானி மற்றும் அம்பானியை ஏ1 மற்றும் ஏ2 என்று அவையில் குறிப்பிடலாம் இல்லையா எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்த போது, ” கிரண் ரிஜிஜு ஏ1 மற்றும் ஏ2 ஐ பாதுகாக்கிறார், அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அதை செய்வார். அவருக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக ராகுல் கிண்டல் செய்தார்.

காங்கிரஸ் செயல்படுத்திய திட்டத்தை பாஜக தன்னுடைய சக்கரவியூகத்தால் தற்போது துவம்சம் செய்து வருகிறது. சக்கர வியூகத்தால் குருஷேத்திரப் போரில் அபிமன்யுவிற்கு என்ன நடந்ததோ தற்போது பாஜக அரசால் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சிறுகுறு  முதலாளிகளுக்கு அதுதான் நடந்து வருகிறது.

மேலும் பட்ஜெட்டில் ஓபிசி பிரிவினர் குறித்து எந்த திட்டமிடமும் இருக்கப்படவில்லை. பட்ஜெட்டின் அல்வா கிண்டும் நிகழ்வில் கூட அத்தகைய பிரிவினர் இடம்பெறவில்லை என்பதை புகைப்படத்தினை ஆதாரமாக வைத்து பேசினார். இது பாஜக உறுப்பினர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி அவையில் அமளியை உண்டாக்கியது. ஓம் பிர்லாவும் இதுக்கு கண்டனம் தெரிவித்தார். இதை தொடர்ந்து ராகுல் தன்னுடைய உரையில் இருந்து அம்பானி மற்றும் அதானி பெயர்களை எடுத்துக்கொள்ள ஒப்புக்கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

AKHILAN

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

15 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

19 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago