Categories: indialatest news

பலாத்காரம் செய்யப்பட்டு… நடுரோட்டில் வீசப்பட்ட பெண்… ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவலம்..!

ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து நடுரோட்டில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை அதிகமாகி கொண்டே செல்கின்றது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் அவர்களை மனிதர்களாக மட்டுமில்லாமல் இன்னும் இந்த சமூகம் மோக பொருளாகவே பார்க்கின்றது என்பதை நிரூபித்து வருகின்றது.

இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பாலியல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. கடந்த வெள்ளிகிழமை அதிகாலை 3.30 மணியளவில் டெல்லியின் சாராய் காலே கான் என்ற பகுதியில் பலாத்காரம் செய்யப்பட்டு சுயநினைவற்ற நிலையில் 34 வயதான பெண் ஒருவர் சாலையில் கிடந்திருக்கின்றார்.

ரத்தத்துடன் தோய்ந்த உடைகளுடன் மிக மோசமான நிலையிலிருந்து அவரை அந்த வழியாக வந்த கப்பற்படை ராணுவ அதிகாரி ஒருவர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விசாரித்ததில் அவர் ஒரு பட்டதாரி என்றும், அந்தப் பெண் ஒடிசாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு டெல்லி வந்து வேலைக்காக தனது தோழியின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

தோழிக்கும் இவருக்கும் சிறிய பிரச்சினை ஏற்படவே அந்த தோழி தன்னை வீட்டில் இருந்து வெளியேற்றியதால் எங்கு செல்வது என்று தெரியாமல் தெருவில் இருந்து இருக்கின்றார். இதை பார்த்த சிலர் அவரை கடத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சாலையில் வீசி சென்று இருக்கிறார்கள். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் உடல் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ramya Sri

Recent Posts

டிப்ளமோ, B.Com, BBA, CA படித்தவர்களுக்கு… மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…

3 hours ago

என்னடா கொடுமை இது…! முதல் நாள் நீண்ட ஆயுளுக்கு விரதம்… மறுநாள் மனைவி வச்ச விஷம்…!

கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…

4 hours ago

ஜெர்மன் வேலை வாய்ப்பு… தமிழக அரசின் சிறப்பு பயிற்சி…

ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…

4 hours ago

வாஸ்கோடாகாமா ரயிலில் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்… வைரல் வீடியோ..!

வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

4 hours ago

சிலிர்க்க வைத்த சிட்டி யூனியன் பேங்க் ஷேர்…அடிச்சிருக்கு பாருங்க லக்கி ப்ரைஸ்…

சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…

5 hours ago

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

5 hours ago