நெல்லை மாவட்டத்தில் மூன்று வயதுக் குழந்தையை கொன்று வாஷிங் மிஷினில் அடைத்து வைத்த கொடூர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன் விரோதம் காரணமாக இந்த கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளதா? எனக் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி பகுதியைச் சார்ந்தவர் விக்னேஷ். கட்டுமான தொழில் செய்து வரும் இவருக்கு மூன்று வயதுள்ள சஞ்சய் என்ற மகன் இருந்துள்ளார்.
இன்று காலை சஞ்சய் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். வீட்டினருகே உள்ள அங்கன்வாடியில் பயின்று வரும் சஞ்சயை வழக்கம் போல அங்கன்வாடிக்கு அனுப்ப விக்னேஷ் தேடியிருக்கிறார். அப்போது திடிரென சஞ்சய் மாயமாகியிருக்கிறார்.
அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தும், தீவிரமாக தேடிப் பார்த்த பின்னரும் சஞ்சய் கிடைக்காததால் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார் விக்னேஷ். காவல் துறையினர் உதவியுடன் தனது மூன்று வயது மகன் சஞ்சயை தேடும் பணியில் ஈடுபட்டார் விக்னேஷ்.
அப்போது விக்னேஷின் எதிர் வீட்டில் வசித்து வரும் தங்கம் என்ற நற்பது வயது பெண்ணிற்கும் விக்னேஷின் குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்ததாக தெரிய வந்திருக்கிறது. தண்ணீர் பிடிப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் சஞ்சையை தங்கம் ஏதாவது செய்திருக்கலாமா? என்ற கோணத்தில் அவரது வீடு முழுவதும் தேடி இருக்கின்றனர். ஆனால் காவல் துறையினரால் சஞ்சயை அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை.
தீவிர விசாரணை நடத்தி, தேடுதல் வேட்டை முடுக்கிய காவல் துறையினர் தங்கத்தின் வீட்டிற்குள் சென்று மீண்டும் சோதனை செய்திருக்கிறார்கள்.
அப்போது தேடல் முயற்சியில் ஈடுபட்டிருந்த அனைவரும் அதிர்ச்சியடையும் படியான காட்சி காணப்பட்டிருக்கிறது. தங்கத்தின் வீட்டிலிருந்த வாஷிங் மிஷினில் சஞ்சய் சடலமாக கிடந்தது தெரிய வந்தது. பின்னர் ராதாபுரம் காவல் நிலைய போலீசார் தங்கத்தை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிராமான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றார்கள் போலீசார். மூன்று வயது குழந்தை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு வாஷிங் மிஷினில் அடைத்து வைக்கப்பட்ட துயர சம்பவம் அந்த பகுதி முழுவதையுமே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…