கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மகளிர் உரிமையாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என பெயரிடப்பட்டது.
2023ம் வருடம் மறைந்த முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி அன்று இந்த திட்டம் முதல்வர் ஸ்டாலினால் துவங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் இதற்காக விண்ணப்பித்தனர்.
அதில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள பேர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. எதிர்கட்சிகள் இதை கடுமையாக விமர்சனம் செய்தன. எனவே, நிராகரிக்கப்பட்டவர்கள் சரியான காரணத்துடன் மீண்டும் விண்ணப்பித்தால் அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்பின் பலரும் விண்ணப்பித்தனர். அதன் காரணமாக மேலும், 11 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது
இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக 2024 -25 ஆம் நிதியாண்டுக்காக தமிழக அரசு 13.722 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது. எனவே, விண்ணப்பாம் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல் முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்த பின் 30 நாட்களுக்குள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம்.
மதுரை மற்றும் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.…
தமிழ் சினிமா மற்றுமன்றி இந்தியத் திரை உலகத்திலேயும் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்தவர் தனது திறமையாலும்,…
கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாகவே தடுமாற்றத்தை சந்தித்து வந்தது சென்னையில் விற்கப்பட்டு வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின்…
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அன்மையில் செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக…
குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட்…