இப்போ எல்லாமே நியூஸிலாந்து கையில தானா?…திகிலில் இந்திய ரசிகர்கள்?…

இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்திய ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்று
அசத்தியது. இதே போல இந்திய பெண்கள் அணியும் வாகை சூட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரகத்தில் பெண்கள் ஒருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து
வருகிறது. இந்திய அணி க்ரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

தகுதி சுற்றில் தனக்கான நான்கு போட்டிகளையும் விளையாடி முடித்து விட்டது இந்திய அணி. இரண்டு
போட்டிகளில் வெற்றி, இரண்டில் தோல்வி என இரண்டுக்கு – இரண்டு என்ற நிலையில் புள்ளிப் பட்டியலில்
இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது இந்திய அணி.

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில்,
வென்றால் தான் அரை இறுதியில் நுழைய வாய்ப்பு என்ற நிலையில் ஆஸ்திரேலியாவுடனான தனது தகுதி
சுற்றின் கடைசி ஆட்டத்தினை ஆடியது இந்தியா.

டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்தது ஆஸ்திரேலியா. நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் நூற்றி ஐமபத்தி ஓரு ரன்களை எடுத்து எட்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் கிரேஸ் ஹாரிஸ்
அதிகபட்சமாக நாற்பது ரன்களை எடுத்திருந்தார்.

பெர்ரி, மெக்ராத் ஆகியோர் முப்பத்தி இரண்டு ரன்களை
எடுத்திருந்தனர். இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங், தீப்தி ஷர்மா ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை
கைப்பற்றினர். ஷ்ரேயங்கா பட்டீல், பூஜா வாஸ்ட்ராகார், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ் ஆகியோர் தலா ஒரு
விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

நூற்றி ஐம்பத்தி இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம்
முதலே தடுமாறத் துவங்கியது. துவக்க வீரர்கள் ஷிபாலி வர்மா இருபது ரன்களும், மந்தனா ஆறு ரன் களை
மட்டும எடுத்து பெவிலியன் திரும்பினர். ஹர்மீத் ப்ரீத் கவுர் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரை சதமடிதார்.

Ind Nzl

ஐம்பத்தி நான் கு ரன்களை குவித்த நிலையில் அவரும் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். தீப்தி ஷர்மா
இருபத்தி ஒன்பது ரன்களை குவித்தார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீச இந்தியா நூற்றி நாற்பத்தி இரண்டு ரன்களை மட்டுமே எடுத்து ஒன்பது விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.

நேற்றைய தோல்வியை அடுத்து இந்திய அணியின் அரை இறுதி கனவு மங்கிப்போனது. மூன்று போட்டிகளில்
விளையாடி இரண்டு வெற்றிகளைப் பெற்றிருக்கும் நியூஸிலாந்து அணி, தனது கடைசி போட்டியில் வெற்றி
பெற்று விட்டால் இந்திய அணி வெளியேற்றப்படும்.

மாறாக அந்த தோல்வியைத் தழுவினால் ரன்-ரேட்
கணக்கீடு நடத்தப்படும். அதிலும் நியூஸிலாந்து அணி தனது கடைசி போட்டியில் தோல்வியைத் தழுவினாலும்
அந்த அணிக்கு அடுத்த சுற்றிற்கு செல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இதனால் இந்திய அணி அடுத்த சுற்றிற்கு செல்ல வேண்டுமானால், நியூஸிலாந்து மிகக் கடுமையான தோல்வியை அடைய வேண்டும். இந்திய அணி
எப்படியாவது அரை இறுதிக்குள் நுழைய வேண்டும் என்பதுவே இந்திய ரசிகர்களின் வேண்டுதலாக
இருந்து வருகிறது.

sankar sundar

Recent Posts

டிப்ளமோ, B.Com, BBA, CA படித்தவர்களுக்கு… மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…

1 hour ago

என்னடா கொடுமை இது…! முதல் நாள் நீண்ட ஆயுளுக்கு விரதம்… மறுநாள் மனைவி வச்ச விஷம்…!

கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…

1 hour ago

ஜெர்மன் வேலை வாய்ப்பு… தமிழக அரசின் சிறப்பு பயிற்சி…

ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…

2 hours ago

வாஸ்கோடாகாமா ரயிலில் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்… வைரல் வீடியோ..!

வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

2 hours ago

சிலிர்க்க வைத்த சிட்டி யூனியன் பேங்க் ஷேர்…அடிச்சிருக்கு பாருங்க லக்கி ப்ரைஸ்…

சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…

2 hours ago

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

3 hours ago