Categories: indialatest news

என்னடா கொடுமை இது…! முதல் நாள் நீண்ட ஆயுளுக்கு விரதம்… மறுநாள் மனைவி வச்ச விஷம்…!

கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

வட இந்தியாவில் பல மாநிலங்களில் கர்வா சவுத் என்கின்ற பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. மனைவிகள் தங்களது கணவனின் நீண்ட ஆயுளுக்காக விரதம் இருந்து கொண்டாடப்படும் பண்டிகை. இந்து பெண்கள் கணவனுக்காக விரதம் இருப்பார்கள். இதன் மூலம் தங்களது கணவர்களின் ஆயுள் கூடும் என்பது அவர்களின் நம்பிக்கை. உத்திரபிரதேசத்தை சேர்ந்த பின் இந்த விரதத்தை முடித்த கையுடன் தனது கணவருக்கு விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், கௌசாம்பி மாவட்டம் இஸ்மாயில்பூர் பகுதியை சேர்ந்தவர் ஷைலேஷ் குமார். இவரின் மனைவி சவிதா. நேற்று தனது கணவன் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கர்வா சவுத் விரதத்தை மேற்கொண்டு இருக்கின்றார். மனைவியின் இந்த பிரார்த்தனைக்கு கணவர் ஷைலேஷ் குமாரும் உதவி செய்து இருக்கின்றார். மாலையில் இந்த விரதத்தை முடித்த பிறகு இருவரும் இணைந்து சாப்பிட இருக்கிறார்கள்.

இதில் கணவருக்கு தெரியாமலே மனைவி விஷம் கொடுத்திருக்கின்றார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே பக்கத்து வீட்டுக்கு சென்று வருகின்றேன் என்று கூறிவிட்டு சவிதா தப்பி சென்று இருக்கின்றார். அந்த உணவை சாப்பிட்ட கணவர் சைலேஷ் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

பிறகு அவரது சகோதரர் அக்கினேஷ் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் சவிதா வீடியோ ஒன்றை அனுப்பி இருக்கின்றார். அதில் எனது கணவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது. அதன் காரணமாகத்தான் அவரை விஷம் வைத்துக் கொண்டேன் என்று கூறுகின்றார். இதையடுத்து சவிதா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றது.

Ramya Sri

Recent Posts

டிப்ளமோ, B.Com, BBA, CA படித்தவர்களுக்கு… மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…

2 hours ago

ஜெர்மன் வேலை வாய்ப்பு… தமிழக அரசின் சிறப்பு பயிற்சி…

ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…

3 hours ago

வாஸ்கோடாகாமா ரயிலில் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்… வைரல் வீடியோ..!

வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

3 hours ago

சிலிர்க்க வைத்த சிட்டி யூனியன் பேங்க் ஷேர்…அடிச்சிருக்கு பாருங்க லக்கி ப்ரைஸ்…

சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…

4 hours ago

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

4 hours ago

ரேஸ்ல நாங்களும் இருக்கோம்!…கிரிக்கெட்டில் கெத்து காட்டும் இந்திய பெண்கள்…

ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…

5 hours ago