Categories: Cricketlatest news

மகளிர் டி20 உலகக் கோப்பை.. 10 ஆண்டுகளில் முதல் வெற்றி.. சம்பவம் செய்த வங்கதேசம்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் வங்கதேசம் அணி 16 ரன்களில் வெற்றி பெற்று அசத்தியது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போட்டியில் வங்கதேசம் அணி முதல் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றி மிகவும் எமோஷனலாக இருப்பதாக வங்கதேசம் அணியின் கேப்டன் தெரிவித்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்களையே எடுத்தது. எனினும், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட வங்கதேசம் அணி ஸ்காட்லாந்து அணியை 20 ஓவர்களில் 103 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. இதனால் வங்கதேசம் அணி 16 ரன்களில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பேசிய வங்கதேசம் அணியின் கேப்டன் நிகர் சுல்தானா ஜோதி, “பத்து ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றது மிகவும் எமோஷனலாக இருக்கிறது. இந்த வெற்றிக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.”

“எவ்வளவு சிறப்பாக கிரிக்கெட் விளையாடினாலும், போட்டியில் வெற்றி பெறாத வரை அதில் எந்த பலனும் இல்லை. மகளிர் கிரிக்கெட்டை பொருத்தவரை நீண்ட காலத்திற்கு பிறகு, நாங்கள் எதையோ செய்திருக்கிறோம் என்ற எண்ணம் கொண்டிருக்கிறோம்.”

“வங்கதேசத்தில் சரியான தருணத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன்பிறகு அதை வைத்தே முன்னேற வேண்டும் என்று நாங்கள் கூறுவோம். தற்போது நாங்கள் இன்னும் பெரிய விஷயத்தை அடைவதற்கு கனவு காணப்போகிறோம். இதேபோன்று எங்களால் இதைவிட இன்னும் சிறப்பாக சாதிக்க முடியும் என்று வங்கதேசத்தில் உள்ள ரசிகர்கள், குடும்பத்தார் மற்றும் எங்களுக்கு ஆதரவு தெரிவிப்போர் கனவு கொண்டுள்ளனர்,” என்று தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

சேட்டன் வந்தல்லே!…டிஸ்சார்ஜ் ஆகி வந்தல்லே!…வீடு திரும்பிய வேட்டையன்…

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக் கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகீட்சை முடிந்து அவர் நலமமுடன் வீடு…

32 mins ago

ஓட்டுநர் உரிமத்தில் மாற்றங்கள்.. ஆன்லைனிலேயே செய்யலாம்..

நாடு முழுக்க இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் அவசியமான ஆவணமாக இருந்து வருகிறது.…

46 mins ago

உங்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறதா? அப்போ இந்த தகவலை

இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத் தொகையை டிடிஎஸ்-ஆக வருமான வரித்துறையில் செலுத்தும் விதிமுறை அமலில்…

1 hour ago

மொத்தமா திருடிட்டாங்க.. இன்ஸடாவில் புலம்பி தள்ளிய ஆன்ட்ரே ரஸல்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஆன்ட்ரே ரசல். இவர் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 'டிரின்பாகோ…

2 hours ago

டோனி விளையாட நினைக்கும் வரை ரூல்ஸ் மாறிட்டே இருக்கும்.. முகமது கைஃப்

ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடருக்கான விதிகள் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும், ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் எத்தனை வீரர்களை…

3 hours ago

ஹர்பஜன் சொன்னது பொய்.. உண்மையை உடைத்த CSK பிசியோ

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் வெளுத்து வாங்கியுள்ளார். முன்னதாக எம்.எஸ்.…

4 hours ago