Categories: Cricketlatest news

இளம் வீரரிடம் 2 முறை அவுட்.. நெட்ஸில் தடுமாறிய விராட்.. 2-வது டெஸ்டில் தேறிடுவாரா?

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று முடிந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (செப்டம்பர் 27) துவங்க இருக்கிறது. நாக்பூரில் நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில், இந்திய அணி தனது பயிற்சியில் ஈடுபட்டது. பயிற்சின் போது நெட்சில் பேட் செய்த விராட் கோலிக்கு இளம் வீரர் பந்துவீசினார்.

வேகப்பந்து வீச்சாளரை நெட்சில் எதிர்கொண்ட விராட் கோலி நான்கு ஓவர்கள் பேட் செய்தார். இளம் வேகப்பந்து வீச்சாளர் வீசிய நான்கு ஓவர்களில் விராட் கோலி இரண்டு முறை அவுட் ஆன சம்பவம் அரங்கேறியது. முன்னதாக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி அதிக ரன்களை குவிக்காதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், அவர் பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளரிடம் இரண்டு முறை அவுட் ஆன சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. லக்னோவை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜாம்ஷெட் ஆலம் தான் விராட் கோலிக்கு நெட்ஸில் பந்துவீசினார்.

இது குறித்து பேசிய ஆலம், “நான் விராட் கோலிக்கு 24 பந்துகளை வீசினேன். சுமார் 135 கி.மீ. வேகத்தில் வீசியிருப்பேன். இதில் அவரை நான் இரண்டு முறை அவுட் செய்தேன். கான்பூரில் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற போதிலும், நெட்ஸில் பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.”

“விராட் என்னிடம் வந்து, ‘நன்றாக பந்துவீசினாய், உனது வயது என்ன?’ என்றார். நான் அவரிடம் 22 என்றேன். அதற்கு அவர் ‘தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். அவரை அவுட் செய்ததும் நான் மிதக்க துவங்கினேன்,” என்று தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

17 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

18 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

21 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

21 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

22 hours ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago