இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், தற்போதைய ஆஷஸ் தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார். இவரது ஓய்வு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றைய ஆஷஸ் போட்டியின் நான்காவது நாளில், வீரர்கள் அணிவகுத்து நின்று ஸ்டூவர்ட் பிராட்-க்கு மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுன்டர் யுவராஜ் சிங், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஸ்டூவர்ட் பிராட்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது..,
“அபாரமான டெஸ்ட் கிரிக்கெட் வீரரும், சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியவரும், உண்மையான லெஜன்ட் ஸ்டுவர்ட் பிராட்-க்கு வாழ்த்துக்கள். உங்களது பயணம் மற்றும் அர்ப்பனிப்பு மிகவும் ஊக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்த பெரும் இன்னிங்ஸ்-க்கு வாழ்த்துக்கள் பிராடி,” என்று தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது, ஸ்டூவர்ட் பிராட் தனது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை பெற்றார். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசிய ஸ்டூவர்ட் பிராட்-இன் ஒரே ஓவரில் இந்திய ஆல்வரவுன்டர் யுவராஜ் சிங் ஆறு பந்துகளையும் சிக்சர்களுக்கு பறக்க விட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் அத்தகைய சாதனை புரிந்த முதல் இந்தியர் என்ற பெருமையை யுவராஜ் சிங் பெற்றார்.
இவ்வாறு செய்த பிறகும், ஸ்டூவர்ட் பிராட் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து அபார வளர்ச்சியை பெற்றார். ஸ்டூவர்ட் பிராட் சர்வதேச கிரிக்கெட்டில் 850 விக்கெட்களை கைப்பற்றும் முனைப்பில் உள்ளார். 17 வருட கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரவதாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஸ்டூவர்ட் பிராட் அறிவித்தார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்டூவர்ட் பிராட் இதுவரை 602 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார். 167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் பிராட் 3 ஆயிரத்து 656 ரன்களை எடுத்து இருக்கிறார். இவரது சராசரி 18 ஆகும். இதில் 1 சதம், 13 அரைசதங்கள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடம், இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் ஸ்டூவர்ட் பிராட் இடம்பிடித்துள்ளார்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…