இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதிய டெஸ்ட் சீரிசின் போது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள், இஷாந்த் ஷர்மா மற்றும் ஜாகீர் கான் கமென்ட்ரி செய்து வந்தனர். கமென்ட்ரியின் போது இஷாந்த் ஷர்மா பகிர்ந்து கொண்ட சம்பவம் ஒன்றுக்கு ஜாகீர் கான் விளக்கம் அளித்து இருக்கிறார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 2014 பிப்ரவரி மாதம் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி தவற விட்ட கேட்ச் காரணமாக aஜாகீர் கான் தனது கிரிக்கெட்டில் இருந்து விடைபெற நேரிட்டது என்று ஜாகீர் கான் கூறியதாக இஷாந்த் ஷர்மா தெரிவித்தார்.
இந்த போட்டியின் போது விராட் கோலி பிரென்டன் மெக்கல்லம்-இன் கேட்ச்-ஐ தவற விட்டார். அதே இன்னிங்ஸ்-இல் மெக்கல்லம் 300 ரன்களை விளாசினார். இது குறித்து இஷாந்த் ஷர்மா கூறியதாவது..,
“நாங்கள் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி கொண்டிருந்தோம். ஜாகீர் கான் விசிய பந்தை எதிர்கொண்ட பிரென்டன் மெக்கல்லம் அடித்த ஷாட் கேட்ச்-ஆக மாறியது. எனினும், விராட் கோலி அதனை தவற விட்டார், இதைத் தொடர்ந்து மெக்கல்லம் 300 ரன்களை எடுத்திருந்தார். பிறகு உணவு இடைவேளையின் போது விராட் கோரி, ஜாகீர் கானிடம் மன்னிப்பு கேட்டார். ”
“இதற்கு ஜாகீர் கான் பரவாயில்லை, அவர் விக்கெட்டை எடுத்துவிடலாம் என்று கூறினார். மீண்டும் தேநீர் இடைவெளியின் போது விராட் மீண்டும் ஜாகீர் கானிடம் மன்னிப்பு கோரினார். மீண்டும் ஜாகீர் கான் கவலை இல்லை என்று பதில் அளித்தார். மூன்றாம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவெளியின் போது, விராட் கோலி ஜாகீர் கானிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டார், அப்போது பதில் அளித்த ஜாகீர் கான், நீ எனது கிரிக்கெட் கரியரை முடிவுக்கு கொண்டுவந்து விட்டாய் என்று தெரிவித்தார்,” என கூறினார்.
இஷாந்த் ஷர்மா பகிர்ந்த சம்பவம் குறித்து ஜாகீர் கான் விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவத்தை பொது வெளியில் கூறியதற்காக விராட் கோலி கவலை கொள்ளமாட்டார், அவர் எனது சிறுவயது நண்பர் என்று இஷாந்த் ஷர்மா தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்து ஜாகீர் கான் கூறியதாவது..,
“நான் அப்படி சொல்லவே இல்லை. இரண்டு வீரர்கள் தான் உள்ளனர், ஒருவர் கிரன் மோர். இவர் கிரஹாம் கூச்-இன் கேட்ச்-ஐ தவற விட்டார். அவர் அதே போட்டியில் 300 ரன்களை விளாசினார். அதன் பிறகு விராட் கோலி கேட்ச்-ஐ தவற விட்டு, மெக்கல்லம் 300 ரன்களை எடுத்தார். இதை தான் கோலியிடம் நான் கூறினேன். அவர் என்னை அவ்வாறு பேச வேண்டாம் என்று கூறினார், யாரும் இதனை விரும்ப மாட்டார்கள். கேட்ச் தவற விடப்பட்டது, பிறகு ரன்கள் எடுக்கப்பட்டது,” என்று தெரிவித்தார்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…