செப்டோ நிறுவனம் 100 கிராம் கொத்தமல்லிக்கு 130 ரூபாய் விலை போட்டு இருந்ததை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட zepto நிறுவனம் ஆதித் பலிச்சா மற்றும் கைவல்யா வோஹ்ரா என்ற 2 நண்பர்களால் துவங்கப்பட்ட ஒரு நிறுவனம். பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை 10 நிமிடத்தில் வீடுகளுக்கு டெலிவரி செய்வது இவர்களின் வேலை. மக்களுக்கு நெருக்கம் மிக்க மும்பையில் இந்த நிறுவனம் முதன்முதலாக தொடங்கப்பட்டது.
தற்போது நாடு முழுவதும் தற்போது பிரபலமடைந்திருக்கின்றது. அடிக்கடி இதில் ஆபர்களும் அறிவிக்கப்படும். இதனால் zepto ஆப்-பை பின்பற்றி வரும் பணியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆனால் சமீபத்தில் zepto வில் கொத்தமல்லியின் விலை தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
அரியானா மாநிலம் குருகுராமை பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் zepto-ல் 100 கிராம் கொத்தமல்லி விலை 131 விற்கப்படுவதை தனது போனில் ஸ்கிரீன்ஷாட் ஆக எடுத்து அதனை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். கடந்த ஜூலை எட்டாம் தேதி இந்த புகைப்படம் பகிரப்பட்ட நிலையில் உள்நாட்டில் பெறப்பட்ட மற்றும் பிரீமியம் நறுமணக் கொத்தமல்லி கட்டிங் விலை 100 கிராமுக்கு 131 ரூபாய் முதல் 141 ரூபாய் என விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.
மேலும் அந்த பதிவில் ‘உள்ளூர் விற்பனையாளர்களிடமிருந்து வாங்குவோம் அவர்கள் வளர உதவுவோம் என்று ஒருவர் கருத்து தெரிவித்திருக்கின்றார். மற்றொருவர் மலிவு மற்றும் அணுகல் ஆகியவற்றிற்கு இடையே ஒரு மெல்லிய கோடு என்று மற்றொருவர் கிண்டல் செய்து இருக்கின்றார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…
கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…
பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…
இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…