இந்த கோடை காலத்தில் காரில் ஏசி இல்லாமல் பயணம் செய்வது என்பது மிகவும் கடினமான விஷயம்தான். ஏசியானது நமது உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமல்லாமல் நமக்கு கோடை காலத்தில் ஏற்படும் உடல் பிரச்சினைகளையும் வரவிடாமல் தடுக்கிறது. நாம் வெளியில் செல்lம் போது காரில் ஏசி பயன்படுத்துகின்றோம். அப்படியான ஏசியானது நன்கு திறனுடன் இயங்க நாம் சில வழிகளை கடைபிடித்தால் நல்லது. இதனால் நமது காரின் ஏசியை நீண்ட நாட்கள் பாதுகாக்க முடியும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
காரின் உட்புற சூடான காற்றினை வெளியே அனுப்புதல்:
நாம் காரில் ஏசியை இயக்குவதற்கு முன் காரின் ஜன்னல்களை திறந்து வைத்துகொண்டு காரின் உட்புற சூடான காற்றினை வெளியே அனுப்பும்படி செய்தபின் ஏசியை இயக்கினால் அது ஏசிக்கு நீண்ட ஆயுளை கொடுக்கும். மேலும் ஏசி காரினை மிக விரைவாக குளிரவைக்கும்.
நேரடி சூரிய ஒளி படாமல் விடுவது:
காரினை சூரியஒளி படும்படியான இடத்தில் விடுவதால் காரின் உட்புறம் மிக விரைவாக சூடாகிறது. காரினை சூரிய ஒளி படாத இடத்தில் விடுவதால் காரின் ஏசியானது மிகவும் அதிக திறனுடன் இயங்கும். இதனால் கார் மிக விரைவாக குளிராகிறது.
ஏசியின் ஏர் கண்டன்சரை சுத்தமாக வைப்பது:
ஏசியின் கண்டன்சர் மற்றும் ஃபில்டர் ஏசியின் கூலிங் தன்மைக்கு மிகவும் இன்றியமையாததாகும். இதில் தேவையில்லாத அழுக்குகள் படியும். இந்த அழுக்கானது ஏசியின் திறனை குறைக்கிறது. எனவே இந்த கண்டன்சரை நாம் சுத்தமாக வைப்பதனால் நாம் ஏசியினை மிகவும் திறம்பட செயல்பட வைக்கலாம்.
ரீசர்குலேஷன் மோடை உபயோகிப்பது:
காரில் ஏசியினை ஆன் செய்தவுடன் ரீசர்குலேஷன் மோடை உபயோகிப்பதால் ஏசியானது வெளிக்காற்றை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. இதனால் நாம் சிறந்த கூலிங்கை அனுபவிக்கலாம். மேலும் காரின் ஏசியினை அடிக்கடி சரிவீஸ் செய்வதின் மூலமும் இதனை பாதுகாக்கலாம்.
ஆட்டோமேட்டிக் மோடினை உபயோகிப்பது:
காரின் உள்ள ஆட்டொமேட்டிக் மோடினை உபயோகிப்பதன் மூலம் காரின் வெப்பநிலை சமநிலையில் வைக்கப்படுகிறது. இது ஏசியில் உள்ள காற்றாடியின் வேகத்தினை கட்டுக்குள் வைக்கிறது. எனவே இவ்வாறான முறைகளை கையாள்வதின் மூலம் நாம் நமது காரின் ஏசியினை பாதுகாக்கலாம்.
தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…
தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…
வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…
நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…
இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…