செயற்கை இனிப்பூட்டிகளில் இவ்வளவு ஆபத்துகள் இருக்கா!.. அப்போ கண்டிப்பா யூஸ் பண்ணாதீங்க!..

நமது நாட்டில் சர்க்கரையை என்பதை எந்த ஒரு நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தும் முதன்மை பொருளாகவே கருதுகின்றோம். அப்படியான சர்க்கரை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஒரு எதிரியாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு மாற்றாக நாட்டுசர்க்கரை, பனங்கற்கண்டு போன்ற இயற்கையான பொருட்களை நாம் பயன்படுத்தலாம். சமீப காலத்தில் ஆர்டிஃபிசியல் சுகர்(Artificial Sweetner)  என அழைக்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் மக்களை பெரிதும் கவர்கின்றன. இந்த வகை சர்க்கரைகளில் கலோரியானது மிகவும் குறைவு. அதனாலேயே மக்கள் பெரும்பாலும் இதனை விரும்புகின்றனர். இவ்வாறான இனிப்புகளை நாம் சாப்பிடுவதால் நமக்கு உடல் சார்ந்த பல பிரச்சினைகள் வருவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என பார்க்கலாம்.

artificial sweetners

உடல் எடை அதிகரிப்பு:

weight gain problems

செயற்கை இனிப்பூட்டிகள் பொதுவாக குறைந்த கலோரிகளை கொண்டிருப்பதால் இதனை உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பயன்படுத்துவர். ஆனால் உண்மை என்னவென்றால் இது உடலில் கலோரிகளை குறைப்பதால் நமது உடலிற்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் போவதால் நமக்கு அதிகப்படியான பசியையும், அதிக உணவினை உட்கொள்ளவும் செய்கிறது.

மனநிலை சம்பந்தமான பிரச்சினைகள்:

mood disorders

மூளையின் நரம்புகள் வழியாக மூளைக்கு செல்லகூடிய தகவல்கள் இதன் மூலம் பாதிக்கப்படுகிறது. இது மனிதர்களிடையே அவர்களில் நடத்தைகளையும் மனநிலைமையையும் மாற்றுகிறது. இது மூளையின் செரிடினின் எனும் வேதிபொருள் உருவாவதை குறைக்கிறது.

கல்லீரல் பாதிப்பு:

liver problems

இந்த வகை இனிப்பூட்டிகளை உபயோகிப்பதால் நமது கல்லீரலில் டிரைகிளிசரைடு எனும் வேதிபொருள் அதிக அளவில் சுரக்க செய்வதால் நமது கல்லீரலுக்கு இது தீங்காக அமைகிறது.

வயிறு சம்பந்தமான பிரச்சினைகள்:

stomach problems

செயற்கை இனிப்பூட்டிகள் நமது வயிற்றில் உள்ள சில வயிறு சம்பந்தமான நுண்ணுயிர்களின் அமைப்பினை மாற்றுவதால் இது நமது வயிற்றில் உப்பிசம், வயிற்றுபோக்கு போன்றவைகளை ஏற்படுத்துகிறது.

நோய்காரணிகளை அதிகப்படுத்துகிறது:

diabates

இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் டைப்-2 டயாபடிஸ், இதய நோய்கள், வளர்சிதை மாற்ற நோய்கள் போன்றவைகளை உண்டுபண்ணுகின்றன. மேலும் இது நரம்பு சம்பந்தபட்ட வேதிபொருட்களின் அமைப்பை மாற்றுவதனால் தலைவலி மற்றும் மைக்ரேன் என அழைக்கப்படும் ஒற்றை தலைவலியையும் உண்டுபண்ணுகின்றன.

எனவே எந்த ஒரு செயற்கையான பொருளை நாம் உபயோகிக்கும் முன் நமது குடும்பநல மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின் அதனை பயன்படுத்துவதே சிறந்ததாகும்.

amutha raja

Recent Posts

Gemini- Siri: கைகோர்க்கும் இரண்டு ஜாம்பவான்கள்.. கைகூடுமா திட்டம்?

ஆப்பிள் நிறுவனம் தனது ஏஐ ஆன siri-க்குப் புதிய வடிவம் கொடுக்க கூகுளின் Gemini உதவியை நாட இருப்பதாகத் தகவல்கள்…

1 day ago

ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த Sean Williams.. என்ன நடந்தது?

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டரான ஷான் வில்லியம்ஸ், தன் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். Sean Williams ஜிம்பாப்வே…

1 day ago

ஆண்ட்ராய்டு போன்களிலும் வந்துருச்சு OpenAI Sora.. இந்தியாவுக்கு எப்போ வரும்?

OpenAI நிறுவனம் தனது ஏஐ வீடியோ ஜெனரேட்டிங் செயலியான Sora செயலியை ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. OpenAI Sora செயற்கை…

1 day ago

iPhone 16 Plus: ஜியோ மார்ட்டின் அதிரடி விலைக்குறைப்பு… எவ்வளவு தெரியுமா?

ஐபோன் பயனாளர்கள் முன்னெப்போதும் கேட்டிராத அளவுக்கு iPhone 16 Plus-ல் மிகப்பெரிய விலைக் குறைப்பு ஆஃபரை ஜியோ மார்ட் கொடுக்கிறது.…

1 day ago

Google chrome பயனாளர்களுக்கு இந்தியா கொடுத்த எச்சரிக்கை!

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் Computer Emergency Response Team, அதாவது CERT-In, கூகுள்…

2 days ago

ISRO-வின் 4 டன் Bahubali ராக்கெட் – என்னவெல்லாம் ஸ்பெஷல்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பாகுபலி என்று பெயரிடப்பட்ட 4,410 கிலோ…

3 days ago