Connect with us

latest news

இந்த காரணங்களால்தான் நமது உடலில் இரத்த சர்க்கரையின் அளவு மாறுபடுகிறதா? வாங்க பார்க்கலாம்.

Published

on

fluctuation in blood sugar level

நமது உடலில் இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மாறுபடுவதால் நமக்கு சர்க்கரை நோய் எனும் தீரா நோய் உண்டாகிறது. இந்த நோய்க்கு நிரந்தர தீர்வு என்ற ஒன்று இல்லை. ஆனால் நாம் நம் அன்றாட உணவு பழக்க வழக்கத்திலும் வாழ்வியல் முறையிலும் சில மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இதனை நாம் வராமல் தடுக்கலாம். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

சர்க்கரையின் அளவு:

சாதாரணமாக நாம் உணவு சாப்பிடுவதற்கு முன் 100mg/dl யை விட குறைவான அளவு சர்க்கரைதான் நமது உடலில் இருக்க வேண்டும். இதன் அளவு 125mg/dl யை விட அதிகமாக இருந்தால் அதனை முழு சர்க்கரை நோய் எனவும் 100 முதல் 125mg/dl இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் அபாயம் உள்ளது எனவும் அறிந்துகொள்ளலாம்.

prediabates

prediabates

நீர்சத்து குறைதல்:

நமது உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவதால் நமது உடலின் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை அதிக செறிவு தன்மை உடையதாக மாற்றுகிறது. இதனால் நமது இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கின்றது.

dehydration leads to fluctuation of blood sugar level

dehydration leads to fluctuation of blood sugar level

சரியான விகிதத்தில் மருந்து எடுத்து கொள்ளாமல் போவது:

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க மற்றொரு காரணமாய் கருதப்படுவது சரியான அளவு மருந்து எடுத்து கொள்ளாமல் போவது. இவ்வாறு செய்வதால் நமது உடல் அந்த மருந்தினை ஏற்று கொள்ளாமல் நமது இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்கிறது. எனவே நாம் அவ்வபோது இரத்த சர்க்கரையின் அளவை கண்கானித்து அதற்கேற்றார்போல் சரியான விகிதத்தில் மருந்தினை எடுத்து கொள்ள வேண்டும்.

take correct dosage of drugs

take correct dosage of drugs

மற்ற மருந்தினை எடுத்து கொள்வதால்:

ஒருவேளை நாம் ஸ்டெராய்டு போன்ற மற்ற மருந்தினை எடுத்துகொண்டாலும் நமது இரத்த சர்க்கரையின் அளவு சீராக இல்லாமல் போகலாம். இந்த ஸ்டெராய்டு நாம் உண்ணும் சர்க்கரை நோயின் மருந்துடன் கலந்து விடுவதால் அதனை ஒழுங்காய் செயலாற்ற விடாமல் செய்கிறது.

take steroids leads to blood sugar fluctuation

take steroids leads to blood sugar fluctuation

மன அழுத்தம்:

மன அழுத்தம் என்பது ஒரு மிக மோசமான நோயாகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இவ்வாறு மன அழுத்தத்தில் இருப்பதால் அவர்களுக்கு ஹார்மோன் சுரப்பு அதிகமாகி அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும்.

stress cause bloodsugar fluctuation

stress cause bloodsugar fluctuation

தூக்கமின்மை:

தூக்கம் என்பது உடலுக்கு மட்டும் ஓய்வு தரும் விஷயம் அல்ல. தூக்கத்தினால் நமது உடலுக்குள் பல்வேறு உயிரியல் சார்ந்த செயல்களும் நடக்கின்றன. நாம் நன்கு தூங்குவதால் நமது உடலில் இன்சுலின் சீராக சுரக்கும். இதனால் சர்க்கரையின் அளவும் சீராக இருக்கும்.

sleeplessness

sleeplessness

எனவே நாம் நமது உணவு பழக்க வழக்கத்திலும் மற்றும் மனதையும் சரியானபடி வைத்துகொண்டால் நமக்கு தேவையில்லாத பல்வேறு நோய்களிலிருந்து விடுபடலாம்.

google news
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

latest news

விளையாட்டில் உலக அளவில் தமிழகம் சாதனை…துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்…

Published

on

Udhayanidhi Stalin

மதுரை மற்றும் விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். முப்பது மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் பேசிய போது விளையாட்டு துறையில் சர்வதேச அளவில் தமிழகம் சாதனை நிகழ்த்தி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் நடந்த விழாவில் பங்கேற்றார். அம்மாவட்டத்தில் உள்ள நானூற்றி ஐம்பது ஊராட்சிகளுக்கு ரூபாய்  இரண்டு கோடியே என்பத்தி ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்கினார்.

Sports

Sports

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற இரண்டாயிரத்து நூற்றி பதினோறு பேருக்கு ரூ42.96 லட்சம் மதிப்பிலான பரிசு தொகைகளையும், 255 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45.39 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும்.

முப்பது மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்கான வங்கிகடன் மானியம் என 2,846 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 95லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், தலைசிறந்து விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலமைச்சர் இந்த முறை பரிசு தொகையை மட்டும் ரூ.37 கோடியாக உயர்த்தி உள்ளார்.

தமிழ்நாட்டைச்சேர்ந்த வீரர் – வீராங்கனைகள் உலக அளவில் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா தங்கம் வென்றது. தெற்காசியாவிலேயே சென்னையில் எப்-4 கார் பந்தயம் நடத்தப்பட்டது. கன்னியாகுமரியை சேர்ந்த வீரர் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். விருதுநகரை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை பதக்கங்களை வென்று வருகிறார் என தமிழக வீரர்களின் சாதனைகளை சுட்டிக்காட்டி பேசி பெருமிதம் தெரிவித்திருந்தார்.

google news
Continue Reading

cinema

நடிகர் ரஜினியின் உடல் நிலை…விரைவில் நலனடைய குவியும் வாழ்த்துகள்…

Published

on

Rajinikanth

தமிழ் சினிமா மற்றுமன்றி இந்தியத் திரை உலகத்திலேயும் முன்னனி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பஸ் கண்டக்டராக இருந்தவர் தனது திறமையாலும், அசராத உழைப்பாலும் சினிவாவில் வானாளாவிய வெற்றி பெற்றவராக திகழ்ந்து வருபவர்.

“சூப்பர் ஸ்டார்” என அன்பாக அழைக்கப்பட்டு வருகிறார் ரஜினிகாந்த். இவர் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற பத்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த “வேட்டையன்” பட பாடல் வெளியீட்டு விழாவில் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி” படத்தில் நடித்து வருகிறார்.

Super Star Rajinikanth

Super Star Rajinikanth

ஓணம் பண்டிகைக்கு “வேட்டையன்” படப்பாடலுக்கு “கூலி” படக்குழுவினருடன் இணைந்து உற்சாகமாக நடனமாடிய வீடியோ வெளியாகி வைரலானது. “கூலி” படத்தில் நடித்து வரும் நிலையில் ரஜினிகாந்துக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டது.

இதனால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து தீவிர சிகீட்சை வழங்கப்பட்டு வருகிறது. தீவிர சிகீட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இவரின் உடல் நிலை குறித்து அவருக்கு சிகீட்சை அளித்து வரும் மருத்துவர்கள் கூறும் போது மருத்துவமனைக்குளே இருக்கும் போதும் அவர் சூப்பர் ஸ்டார் தான் என சொல்லியிருப்பதாக தமிழ் செய்தி சேனல் ஒன்றின் மூலம் வெளியாகியுள்ளது.

ரஜினியின் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டு அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் தீவிரமான பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர். அதே போல ரஜினிகாந்த் விரைவில் நலன் பெற்று வரவேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

google news
Continue Reading

latest news

உதயநிதியை சந்தித்த நடிகர் சிவகார்த்திக்கேயன்…துணை முதல்வருக்கு வாழ்த்து…

Published

on

Udhayanidhi Sivakarthikeyan

தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் அன்மையில் செய்யப்பட்டது. விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். தமிழக ஆளுநர் முன்பு நடந்த பதவு ஏற்பு விழாவில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார். இதை தொடர்ந்து தமிழ்த் திரை உலகத்தை சார்ந்த பலரும் உதயநிதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்த் திரை உலகத்தில் முன்னனி நடிகராக இருந்து வருபவர் உதயநிதி, இவர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த “மாமன்னன்” படம் சமீபத்தில் வெளியானது. தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார் இவர். சந்தானத்துடன் இவர் இணைந்து நடித்திருந்த “ஒரு கல் ஒரு கண்ணாடி” படம் மிகப்பெரிய வெற்றியை இவருக்கு பெற்றுத்தந்தது. சந்தானத்துடன், உதயநிதி காமெடியில் கலக்கியிருந்தார்.

‘பார்த்தா’, ‘சரவணன்’ என்ற இந்த இரண்டு கதாப்பாத்திரங்களை தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் நிற்கும் அளவில் நடித்திருந்தனர் இந்த இருவரும்.

Udhayanidhi Soori Santhanam

Udhayanidhi Soori Santhanam

2021ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உதயநிதிக்கு தமிழக அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை வழங்கப்பட்டது.

அன்மையில் அமைச்சரவையில் மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அதில் உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட உதய நிதிக்கு நடிகர் சத்யராஜ் வீடியோ மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

நடிகர் சந்தானம், சூரி ஆகியோர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வந்திருந்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். துணை முதல்வராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினை தமிழ் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர்.

google news
Continue Reading

latest news

கன மழைக்கான வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் எது எது?…வானிலை ஆய்வு மையம் சொன்ன அப்-டேட்…

Published

on

Rain

குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேலடுக்கு வளி மண்டங்களில் குளிர்ச்சியான நிலை நிலவுவதன் காரணமாகவே தமிழகத்தில் மழை பெய்யத் துவங்கியது என்றும், இந்த மழை அடுத்த ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் சொல்லியிருந்தது ஏற்கனவே.

இந்த சூழலில் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக அடுத்தடுத்து பெய்து வரும் மழையினால் வெயில் வாட்டி வந்த இடங்களில் இதமான சூழல் நிலவுவதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் வட-கிழக்கு பருவ மழை துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்பொது பெய்து வரும் இந்த மழை பலரையும் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது.

RainFall

RainFall

கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகரைப் பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது.

மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு முப்பத்தி ஐந்து முதல் நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே ஐம்பத்தி ஐந்து கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

google news
Continue Reading

Cricket

டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…

Published

on

Ind vs Ban

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினல் விளையாட இந்தியாவிற்கு வந்துள்ள வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடந்த இந்தப் போட்டியில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டர்களான அஷ்வின் – ஜடேஜா இணை பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஜொலிக்க, வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா. இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது.

Test Series

Test Series

டாஸ் வென்று பங்களாதேஷை பேட்டிங் செய்ய வைத்தது இந்தியா, மழை குறுக்கீட்டின் காரணமாக போட்டி தடை பெற்று வந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முழுவதுமாக நடந்து முடிந்தது.

போட்டியை வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு இந்திய வீரர்கள் இருபது ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதைப் போல பேட்டிங்கில் அதிரடி காட்டினர். இந்திய அணி முன்னிலை பெற்று டிக்ளர் செய்ய தனது இரண்டாவது இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் தொடர்ந்தது வங்காளதேசம்.

ஐந்தாம் நாளான இன்று நூற்றி நாற்பத்தி ஆறு ரன்களை எடுத்து பத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம். தொன்னூற்றி ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது இந்தியா.

நாலு ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இருபத்தி ஒன்பது ரன்களை எடுத்து ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை பறிகொடுத்து விளையாடி வருகிறது இந்தியா. இந்த போட்டியில் வென்றாலும், டிராவில் முடிவடைந்தாலும் இந்திய அணி கோப்பையை தன் வசப்படுத்திக்கொள்ளும்.

 

google news
Continue Reading

Trending