Connect with us

govt update news

என்ன இந்த நாடுகளுக்கெல்லாம் செல்ல விசா தேவையில்லையா!..அது எந்தெந்த நாடுகள்னு தெரிஞ்சிகனுமா?..

Published

on

visafree countries

விசா என்பது வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்வதற்கு அனுமதிக்கும் ஒரு ஆவணம் ஆகும். வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இது மிகவும் முக்கியமான ஆவணமாகும். இந்த ஆவணங்கள் இல்லாமல் கூட நாம் பெரும்பாலான நாடுகளுக்கு செல்லலாம். ஒரு வேளை நாம் சில வேடிக்கைகளுக்காக வெளிநாடு செல்ல விரும்பினால் நாம் இந்த வகை நாடுகளுக்கு செல்ல திட்டமிடலாம். ஆனால் இந்த வகை நாடுகளில் நாம் எதிர்பார்க்கும் சிறப்பம்சங்கள் இருக்குமா என்பதை கூற முடியாது. அது என்னென்ன நாடுகள் எனப் பார்க்கலாம்.

பூட்டான்:

bhuttan

பூட்டான் என்பது மலைகள் மற்றும் சமவெளிகளை கொண்ட மிக அழகான நாடாகும். மேலும் இதன் இயற்கையின் அழகு தனித்துவம் வாய்ந்தது. இந்த நாட்டை இந்தியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து நாட்டினரும் விரும்புவர். இந்தியர்களை சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் விசா இல்லாமல் இங்கு அனுமதிப்பர். அதற்கு நாம் நமது அடையாள சான்றை அளிப்பது முக்கியம்.

ஃபிஜி:

fiji

மாலத்தீவுக்கு அடுத்தபடியாக தேன்நிலவு கொண்டாடுவதற்கு ஏற்ற இடம் ஃபிஜி ஆகும். இங்கு இந்தியர்கள் அதிக அளவில் வசிப்பதனால் இங்கு பெரும்பாலும் இந்தியர்களே சுற்றுலாவிற்கு வருவார்கள்.

பார்படாஸ்:

barbadous

இது ஒரு மிக சிறந்த கரீபியன் நாடு. இந்த நாட்டிற்கு பொதுவாக கோடைகால விடுமுறைக்கு மக்கள் செல்வர். எனவே சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் கோடை விடுமுறையை கழிக்க இந்த இடம் சிறந்த இடமாக கருதப்படுகிறது.

ட்ரினிடடு(Trinidad) மற்றும் டொபகோ(Tobago):

trinidad

இந்த நாடுகளில் பொழுது போக்கு மட்டுமல்லாமல் அங்கு செல்பவர்களுக்கு மன அமைதியை தரக்கூடிய ஒரு இடமாகவும் இது அமைந்துள்ளது. மேலும் இது நமது இந்தியாவில் உள்ள கோவாவை போன்று இருக்குமாம்.

நேபால்:

nepal

நேபால் என்பது பலரின் கனவு இடமாகவே இன்றளவும் உள்ளது. மேலும் இந்தியர்களுக்கு இந்த நாட்டில் செலவு என்பது மிகவும் குறைவே. எனவே இங்கு நாம் விசா என அழைக்கப்படும் தகுதி சீட்டு இல்லாமல் பயனிக்கலாம்.

மொரிஷியஸ்:

mauritius

மொரிஷியஸ் நாடும் பெரும்பாலும் ஜோடிகள் அதிகமாக விரும்பும் ஒரு இடமாகும். மேலும் இதன் கடற்கரை மற்றும் அடர்ந்த காடுகள் வழியாக பயணிப்பது மிகவும் நன்றாக இருக்கும். எனவே நமது பயணங்களை இனிமையானதாக்க இப்படியான இடங்களுக்கு சென்று நமது குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் நேரத்தை செலவிடலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

govt update news

குட் நியூஸ்..! ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு… சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு..!

Published

on

அம்மா உணவ ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் அம்மா உணவகம். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் இந்த அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இதில் காலை மதியம் என இரண்டு வேளையும் குறைந்த செலவில் மக்கள் உணவு சாப்பிட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது. காலையில் சாம்பாருடன் இட்லி ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டது.

மதியம் சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கும், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும் வழங்கப்பட்டன. இது தவிர வாரத்திற்கு ஒரு நாள் வரைட்டி சாதமாக புளி சாதம், தக்காளி சாதம் போன்றவை ஐந்து ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த உணவகம் கொரோனா காலத்தில் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்தால் அம்மா உணவகம் மூடப்படும் என்று தகவல் வெளியானது.

ஆனால் அம்மா உணவகம் தற்போது வரை இயங்கி வருகின்றன. சென்னை மாநகராட்சி முழுவதும் 392 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் மகளிர் சுய உதவி குழு சார்பாக பணிபுரியும் உறுப்பினர்களுக்கு நாள் ஒன்றுக்கு தினக்கூலி வழங்கப்படுகின்றது. இவர்களுக்கான ஊதியத்தை உயர்த்த இருப்பதாக சென்னை மாநகராட்சி தற்போது அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது “சென்னையில் உள்ள அம்மா உணவ ஊழியர்களுக்கு தினக்கூலி ஊதியத்தை உயர்த்தி உள்ளோம். இந்த ஊதிய உயர்வின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 3.07 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகின்றது. அதிமுக ஆட்சியில் இருந்த போது ஊதிய உயர்வு கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் அம்மா உணவக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு 5 கோடி நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

govt update news

வெளியானது க்ரூப்2 அப்ளிகேஷன்… யார் யார் விண்ணப்பிக்கலாம்? கடைசி நாள் உள்ளிட்ட முக்கிய தகவல்…

Published

on

By

தமிழக அரசின் 2327 காலி பணியிடங்களை நேரடியாக நிரப்பும் க்ரூப்2 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது. முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ந் தேதி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று(ஜூன்20) வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குரூப்-2 தேர்வு வாயிலாக உதவி லேபர் ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி, சார்பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட  507 காலியிடங்களும், குரூப்-2-ஏ தேர்வு வாயிலாக கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வணிகவரி உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1,820 காலியிடங்களும் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுகளுக்கான வயது வரம்பு, பட்டப்படிப்பு தகுதிகள் அடங்கிய  விளம்பரம் டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (ஜூன்20) தொடங்கி ஜூலை 19ந் தேதியுடன் முடிவடைகிறது.

முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ந் தேதி நடக்க இருக்கிறது. பொது அறிவில் 100 கேள்விகள் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு ஒன்னரை மதிப்பெண் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலி பணியிடத்துக்கு 10 பேர் விதம் முதல்நிலை தேர்வில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். மெயின் தேர்வு க்ரூப்2 மற்றும் க்ரூப் 2ஏ என தனி தனியாக நடத்தப்படும். இதுகுறித்து மேலும் தகவலை அறிய www.tnpsc.gov.in இணையத்தில் தெளிவான விளம்பரம் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

   

Continue Reading

govt update news

அட இது புதுசா இருக்கே..அப்போ இனி வங்கிக்கே போக வேணாமா?..கலக்குறீங்களே PNB..

Published

on

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தினால் நமக்கு பல செளகரியங்கள் கிடைக்கின்றன. இந்த தொழில்நுட்பங்களை அனைத்து நிறுவனங்களில் தற்போது உபயோகப்படுத்தும்படியும் அமைந்துள்ளன. இந்த தொழில்நுட்பத்தில் ஒன்றுதான் Meteverse என அழைக்கப்படும் மெய்நிகர் உலகம்.

metaverse facility

இந்த வசதியில் நாம் நமக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கி கொள்ளலாம். மேலும் இதன் மூலம் நாம் மற்றவர்களுடனும் தொடர்பினை வைத்து கொள்ளலாம். நாம் வாழ்ந்து கொண்டுருக்கும் உலகத்தினை கற்பனை உலகமாக மாற்றுவதற்கு Augmented Reality  மற்றும் அந்த கற்பனை உலகத்தில் நாம் உணர்ச்சிபூர்வமாக வாழ்வதற்கு Virtual reality என இவ்விரண்டையும் சேர்த்ததுதான் Metaverse  என அழைக்கப்படும் மெய்நிகர் உலகம்.

இந்த வசதியினை தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Virtual Bank வசதியின் மூலம் நமக்கு பல வசதிகளும் கிடைக்கின்றன. இது இந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தினை கொடுக்கிறது. இந்த வசதியின் மூலம் வங்கிகளின் வசதியான பணத்தினை டெபாசிட் செய்வது, லோன் வசதிகள், Retail/MSME வாசதிகள், டிஜிட்டல் திட்டங்கள், அரசின் திட்டங்கள்  போன்ற வசதிகளையும் தனது வாடிக்கையாளர்களுக்கு Virtual Reality மூலம் பெற்று கொள்ளலாம்.

PNB virtual reality feature

இந்த வசதியினை அதன் வாடிக்கையாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அதாவது அலுவலகம், வீடு என எந்த இடத்தில் இருந்தும் நாம் உபயோகப்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த வங்கியானது 3டி வசதியுடன் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது.

Continue Reading

govt update news

ஒரு வழியா வந்துருச்சுப்பா..பெண்களுக்கான ரூ.1000 உதவி தொகையை எவ்வாறு பெறுவதுனு தெரியனுமா?..

Published

on

தமிழக முதலைமச்சர் தனது தேர்தல் வாக்குமூலத்தில் மாதமாதம் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித்தொகையாக அளிப்பதாக அறிவித்திருந்தார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஜுலை 10ஆம் தேதி வெளியிட்டார். இதன்படி கீழ்காணும் தகுதி உடையவர்கள் மட்டுமே இந்த உதவிதொகையை பெறலாம் எனவும் அறிவித்தார்.

application form sample

தகுதியானவர்கள்:

  • இந்த உதவி தொகையை பெற விரும்புவரின் ஆண்டு வருமானம் ரூ.2.5லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • வருடத்திற்கு நாம் உபயோகிக்கும் மின்சாரம் 3600 யூனிட்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வருமான வரி செலுத்துபவராக இருத்தல் கூடாது.
  • குடும்ப உறுப்பினர்கள் அரசாங்க பணிகளிலோ அல்லது பென்ஷன் வாங்குபவராகவோ அல்லது அரசியல் பிரமுகராகவோ இருத்தல் கூடாது.
  • மேலும் குடும்ப தலைவர் பெயரில் நான்கு சக்கர வாகனம் பதிவு செய்திருக்க கூடாது.
  • குடும்ப தலைவர் 5 ஏக்கருக்கு மேல் விளை நிலமும் 10 ஏக்கருக்கு மேல் வறண்ட நிலமும் இருத்தல் கூடாது.

குடும்ப தலைவிகளுக்கான வரையறைகள்:

  • இந்த உதவி தொகையை குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு மட்டுமே வழங்கப்படும். ஒருவேளை குடும்ப தலைவரின் பெயரில் குடும்ப அட்டை இருந்தாலும் பிரச்சனை இல்லை. அந்த அட்டையில் உள்ள குடும்ப தலைவி இந்த தொகையினை பெற்று கொள்ளலாம்.
  • குடும்ப தலைவி இல்லாத நிலையில் அந்த குடும்பத்தில் உள்ள 21 வயதினை கடந்த பெண்ணிற்கு இந்த உதவி தொகை வழங்கப்படும். இந்த வசதி திருநங்கைகளுக்கும் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளனர்.

முதலமைச்சர் அறிவிப்பின்படி இந்த திட்டமானது வருகின்ற செப்டம்பர் மாதம் 15 நாள் முன்னாள் முதலமைச்சரான சி.என்.அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாள் அன்று நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டதின் கீழ் கிட்டதட்ட 1.5 லட்சம் பயனர்கள் விண்ணப்பிப்பார்கள் எனவும் தெரிகின்றது. இதற்கான சிறப்பு முகாம்களை ஆங்காங்கே உள்ள நியாய விலை கடைகளில் நடத்துமாறு மாவட்ட அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரேஷன் அட்டை இல்லாத எழைகள், பழங்குடியினர், மலைவாழ் மக்கள் போன்றவர்கள் இத்திட்டத்தி சேர அவர்களின் ஆதார் கார்டுகளை வைத்திருத்தல் அவசியம். இதற்கான விண்ணப்பத்தினை பெற கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.

https://drive.google.com/file/d/1aYZS89jJ4E-tWxMEKrFEPPLVfAncD3Kp/view?pli=1

Continue Reading

govt update news

போஸ்ட் ஆபிஸின் இந்த திட்டத்தினை பற்றி தெரியாம இருந்தா எப்படி?..3000 முதலீட்டில் 2 லட்சம் வரை பயனடைய செய்யும் பொன்னான திட்டம்..

Published

on

இந்திய தபால் நிலையங்களில் மக்கள் பயனடையும் வகையில் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன அதில் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது தொடர்வைப்பு சிறுசேமிப்பு திட்டம். போஸ்ட் ஆபிஸின் RD திட்டங்கள், கஷ்டபட்டு சம்பாதித்த பணத்தை சிறுக சிறுக சேமிப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நம்பிக்கை அடிபடையில் முதன்மையானதாக விளங்குகிறது.

மாதந்தோறும் சிறு தொகையை(குறைந்த பட்சம் ரூ.100/-) தொடர்ந்து சில ஆண்டுகள் போஸ்ட் ஆபிஸில் தவறாமல் கட்டி, டெப்பாசிட் முதிர்வு காலத்தில் அசல் மற்றும் வட்டியை திருப்பி பெற்று கொள்ளலாம்.

இதில் நமக்கு முக்கியமான மற்றும் சந்தோஷமான விஷயம் என்னவென்றால் RD-யின் வட்டி விகிதத்தை 6.2 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. சிறுசேமிப்பின் லாபம் அதிகப்படும்.

save money through RD scheme

இவ்வட்டி விகித உயர்வினால் ஐந்தாண்டு திட்டத்தில் நீங்கள் மாத தவனையாக ரூ.2000/-, ரூ3000/- மற்றும் ரூ.4000/- செலுத்தும்போது உங்களுக்கு கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

மாதத்தவனையாக ரூ.2000/-யை ஐந்தாண்டுகள் செலுத்தினால் முதிர்வு காலத்தில் நீங்கள் செலுத்திய தொகையான ரூ.1,20,000/- மற்றும் வட்டிதொகையான % 21,983/- யும் சேர்த்து ரூ.1,41,983/- கிடைக்கும்.

மாதத்தவனையாக ரூ.3000/- யை ஐந்தாண்டுகள் செலுத்தினால் முதிர்வு காலத்தில் நீங்கள் செலுத்திய தொகையான ரூ.1,80,000/- மற்றும் வட்டிதொகையான  ரூ.31,972/- யும் சேர்த்து ரூ.2,12,972/- கிடைக்கும்.

மாதத்தவனையாக ரூ.4000/- யை ஐந்தாண்டுகள் செலுத்தினால் முதிர்வு காலத்தில் நீங்கள் செலுத்திய தொகையான ரூ.2,40,000/- மற்றும் வட்டிதொகையான  ரூ.43,968/- யும் சேர்த்து ரூ.2,83,968/- கிடைக்கும். ஆஹ! நாமும் போஸ்ட் ஆபிஸ் RD ல் நாம் சம்பாதித்த பணத்தை சேமித்து வளமாக வாழ்வோம்.

Continue Reading

Trending

Exit mobile version