Connect with us

life style

குளிக்கவே மாட்டேங்கிறாரு…கோட்டுக்கு போறேன்…ஆவேசமான மனைவி…

Published

on

இப்போதெல்லாம் திருமண பந்தங்களில் சில அதிகமான தோல்விகளையே சந்தித்து வருகிறது. இது குறித்து உளவியல் ரீதியாக நிறைய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. திருமணம் முடித்த சில நாட்களிலேயே பிரிவு என்ற பாதையை நோக்கி பயணிக்கத் துவங்கி விடுகின்றனர் தம்பதிகள்.

இதனால் பிள்ளைகளைப் பெற்றவர்கள் அதிக மன உலைச்சல்களுகு ஆளாகி வருகின்றனர்.திரைத் துறை நட்சத்திரங்கள் மட்டுமல்லாது, விஐபி தம்பதியரும் மனம் ஒத்துப்போக வில்லை என விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறும் நிலை அதிகரித்து வருவதாக உளவியல் சார்ந்த நபர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த பிரிவிற்கு அவர்கள் சொல்லும் காரணங்களில் சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலைக்கு கொண்டு சென்றுவிடுகிறது. திருமணம் ஆகி நாற்பதே நாட்கள் ஆன நிலையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bath

Bath

அதற்கு அவர் குறிப்பிட்டுள்ள காரணம் தான் அனைவரின் கவனத்தை பெறுவதாக மாறியுள்ளது. திருமணம் ஆகி நாற்பது நாட்கள் மட்டுமே ஆன நிலையில் தன் கணவர் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே உடலை சுத்தமாக வைக்க குளிப்பதாகவும், இதனால் அவர் மேல் துர்நாற்றம் வீசுவதாகவும், இதுவே பிரிவு கோருவதற்கான காரணம் என்றும் அப்பெண் தெரிவித்திருக்கிறார்.

கங்கை நதி நீரை உடலில் தெளித்தாலே போதுன் உடல் புனிதமாகி விடும் என்ற நம்பிக்கையில் தான் தனது கணவர் குளிப்பதை தவிர்த்து வருவதாக விவாகரத்து கோரியுள்ள உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அப்பெண் தனது கணவிரின் மீதான தனது குற்றச் சாட்டினை முன்வைத்துள்ளார்.

மேலும் இருவருக்கும் திருமணமாகி நாற்பது நாட்கள் மட்டுமே ஆன நிலையில் தனது கணவர் இது வரை இரண்டு முறை மட்டுமே குளித்துள்ளதாக அப்பெண் வேதனை தெரிவித்திருந்த நிலையில் தம்பதியரை மன நல ஆலோசனை பெற நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

google news

latest news

தொடர்ந்து விஸ்கியா குடிச்சா… நீங்க பொண்ணா மாறிடுவீங்களாம்…. ஆராய்ச்சி சொல்வது என்ன?

Published

on

By

தற்போது இருக்கும் சமுதாயத்தில் குடிக்காமல் இருக்கும் ஆண்களை எண்ணிவிடலாம். ஏனெனில் இது தற்போது பலருக்கு பழக்கமாகவும் சிலருக்கு வழக்கமாகவும் மாறியிருக்கிறது. இதில் கூட சிலர் சில ரூல்சை பாலோ செய்வார்கள்.

பீர் மட்டுமே குடிக்கும் சில குடிமகன்களும், விஸ்கி மற்றும் பிராந்தி மட்டுமே என இருக்கும் சிலரும், பல சாறுகளை கலந்து காக்டெயில் குடிக்கும் சிலரும் என இவர்கள் பல வகைப்படுவார்கள். ஆனால் இது கண்டிப்பாக உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இருந்தும் இந்த பழக்கத்தை விட முடியாமல் இன்னுமும் இதை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்நிலையில் விஸ்கியை தொடர்ந்து குடிக்கும் சிலருக்கு ஏற்படும் பிரச்சனை குறித்த ஆராய்ச்சி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல்கலைக்கழகம் ஒன்று விஸ்கியை தொடர்ந்து குடிக்கும் குடிமகன்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது.

ஒரு மணி நேரத்தில் 8 கிளாஸ் விஸ்கி குடிக்க வைத்து இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு பைட்டோ ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரந்து ஆண்மையை முழுதாக காலி செய்கிறது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து விஸ்கி சாப்பிட்டு வரும் ஆண்கள் பெண்களாக மாறவும் அதிக வாய்ப்பு இருப்பதாக இந்த ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

google news
Continue Reading

latest news

ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக மன அழுத்தம்…. ஆய்வு சொல்வது என்ன?

Published

on

By

5000க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களை விட பெண்களே அதிக மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவை சேர்ந்த மனம் மற்றும் உணர்ச்சி பயிற்சி நிறுவனமான யுவர் டோஸ்ட் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என சம அளவிலான 5000 ஊழியர்கள் மீது மன அழுத்தம் குறித்து கேள்வி முன் வைக்கப்பட்டது.

அதில் வெளியான முடிவுகளில், ஆண்களில் சுமார் 53.6 சதவீதம் பேர் மன அழுத்தத்தில் இருந்தனர். ஆனால் அதே நேரத்தில் பெண்களில் 72.2 சதவீதம் பேர் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டனர். பெண்கள் ஒரு நேரத்தில் வேலையில் இருக்கும் பிரச்னை மற்றும் வீட்டு வேலைகளை கவனிப்பதால் இது நடக்கிறது.

அதிலும், 21 முதல் 30 வயதுக்குள் இருப்பவர்களுக்கே அதிக மன அழுத்தம் வருகிறதாம். இதற்கு அடுத்து 31 முதல் 40 வயதில் இருப்பவர்களுக்கும், அடுத்த இடத்தில் 41 முதல் 50 வயதில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதாம். இதனால் இள வயதினரே அதிக அளவில் மன உளைச்சலில் உள்ளனர்.

மேலும், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் ஊடக துறையில் நடத்தப்பட்ட ஆய்வில் 3ல் ஒருவருக்கு தீவிர மன அழுத்தம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

google news
Continue Reading

latest news

விடுங்கடா என்னை… எனக்கு ரெஸ்ட் வேணும்.. உங்க உடம்பே காட்டும் 8 எச்சரிக்கைகள்…

Published

on

By

இப்போது இருக்கும் சமுதாயத்தின் நிலை எப்போதுமே வேலை, வேலை என்ற நிலைக்கு வந்து இருக்கிறது. ஓவர் உழைப்பு, மன அழுத்தம் முதலியவற்றால் உடல் தனக்கு தேவைப்படும் பிரேக் குறித்து நமக்கு சமிஞ்சை கொடுத்தாலும் அதனை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி உடல் பிரேக் கேட்கும் 8 அறிகுறிகள் என்ன தெரியுமா? 

வழக்கத்திற்கு அப்பாற்பட்ட சோர்வு:

தொடர்ச்சியான சோர்வு தான் உடலில் ஏற்பட்டு இருக்கும் பிரச்னையை சொல்லும் முதல் அறிகுறி. நல்ல தூக்கத்துக்கு பின்னரும் இந்த சோர்வு குறையாமலே இருக்கும். அந்த சோர்வு ஒருநாளின் மொத்த எனர்ஜியையும் கெடுத்துவிடும்.

கவனகுறைவுகள்:

மூளை எதோ தடைப்பட்டது போல இருக்கா? செய்ய வேண்டிய வேலைகள் எளிதாக இருந்தாலும் செய்ய முடியாமல் போராடுகிறீர்களா? கவனக்குறைவு பிரச்னை இருந்தால் அது கண்டிப்பாக எச்சரிக்கை தான். 

தலைவலி பிரச்னை:

அடிக்கடி தலைவலி ஏற்படுவது மன அழுத்தம் மற்றும் சோர்வின் உடல் வெளிப்பாடு. இந்த தலைவலி என்பது டென்சன் தலைவலி. தலையை சுற்றி வலி எடுக்கும். ஓவரான வலி மற்றும் சத்தம் மற்றும் வெளிச்சத்துக்கு கடுப்பாவது உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும்.

எமோஷனல் ரோலர் கோஸ்டர்: 

உங்கள் லிமிட்டை தாண்டி வேலை செய்வது உங்கள் மனநலனை பாதிக்கும். கோவம், மனம் அலைபாய்வது, வாழ்க்கையின் மூளையில் இருக்கிறோம் என்ற எண்ணம் ஆகியவை பொதுவான அறிகுறிகள். 

மனது சொல்வதை கேளுங்கள்:

மன அழுத்தம் உங்கள் உடல் நலத்தினை மட்டும் பாதிக்காமல், செரிமான பிரச்னையையும் ஏற்படுத்தும். வயிறு கோளாறு, மலச்சிக்கல், வயிறு கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் அதிகம் வந்தாலும் அதை நீங்க உடனடியாக கவனிக்க வேண்டும். 

அடிக்கடி ஏற்படும் உடல்பிரச்னைகள்: 

சோர்வு மற்றும் மன அழுத்தம் சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்னைகள் அடிக்கடி உருவாக்கும். இதனால் உடல் அடிக்கடி சரியில்லாமல் போனாலும் உடனே சூதானமாக இருக்க வேண்டும்.  

தூக்கமில்லாத இரவுகள்: 

தூக்கத்துக்கு போராட்டமாக இருக்கிறதா? இரவு தூக்கத்தில் அடிக்கடி முழிக்கிறீர்களா? அல்லது முழு தூக்கத்தினை அனுபவித்தாலும் உடல் சோர்வாகவே இருக்கிறதா? தூக்கமின்மை மற்றும் பாதிக்கப்பட்ட தூக்க நேரம் உங்கள் உடல் போராடுகிறது என்பதற்கு அர்த்தம்.

நிலையான கவலை மற்றும் வாழ்க்கையே வெறுத்த உணர்வு:

நிலையான பதட்டம் அல்லது முழுமையான பீதி தாக்குதல்களாக கூட மன அழுத்தம் ஏற்படும். சிறிய விஷயங்களைப் பற்றி கூட நீங்கள் தொடர்ந்து கவலைப்படுவதையோ அல்லது விளிம்பில் இருப்பதாக கூட உங்களுக்கு தோன்றும். உங்கள் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக பாதிக்கலாம்.

ஓய்வுக்காக உடலின் அழைப்பு:

உடல் ஓய்வுக்கு தொடர்ந்து அறிகுறிகளை எச்சரிக்கை அறிகுறிகளை கொடுக்கும். அப்படி கொடுக்கும் போது புறக்கணிப்பது வெறுப்பு, உணர்ச்சிகள், உடல் மற்றும் மன சோர்வு நிலைக்கு வழிவகுக்கும்.

google news
Continue Reading

life style

உங்க செல்ல நாயை டிரெய்ன்ல கொண்டுபோக முடியுமா.. ரயில்வே என்ன சொல்கிறது?

Published

on

By

வளர்ப்புப் பிராணிகளை ரயிலில் கொண்டுசெல்வதற்கான அனுமதி குறித்து சில வழிகாட்டுதல் நெறிமுறைகள் இருக்கின்றன.

ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு இடம்பெயரும்போது குடும்பத்துடன் உங்கள் வளர்ப்புப் பிராணிகளையும் ரயிலில் கொண்டு செல்ல முடியும். இதற்காக நீங்கள் சில வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். நாய்கள், பூனைகள் மட்டுமல்ல ஏன் உங்கள் செல்ல வளர்ப்புப் பிராணிகலாக இருக்கும் குதிரைகள், யானைகளைக் கூட ரயிலில் கொண்டுசெல்லலாம் என்கிறார்கள் ரயில்வே துறை அதிகாரிகள்.

* அளவில் பெரிய பிராணிகளாக இருந்தால் அவற்றை லக்கேஜ் வேனில் கொண்டு செல்லலாம்.

* பயணிகள், வளர்ப்புப் பிராணிகளை ஏசி முதல் வகுப்பில் தங்களோடு கொண்டு செல்ல அனுமதி உண்டு. இரண்டாம் வகுப்பு – மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் மற்றும் ஸ்லீப்பர் கோச்களில் கொண்டுசெல்ல அனுமதி இல்லை.

* உங்கள் டிக்கெட்டோடு அந்த வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டு செல்வதற்கென பிரத்யேகக் கட்டணமும் நீங்கள் செலுத்த வேண்டும்.

* லக்கேஜ் பெட்டிகளில் பயணம் செய்வதற்கு மூன்று மணி நேரம் முன்னர் ரயில்வேயின் பார்சல் அலுவலகத்தில் வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டு வர வேண்டும்.

* அந்த பிராணிகளுக்கு எந்தவொரு தொற்று நோயும் இல்லை என கால்நடை மருத்துவரிடம் சான்று பெற வேண்டும். இந்த சான்று பயணிக்கும் நாளுக்கு முந்தைய 24 முதல் 48 மணி நேரத்துக்குள் பெற்றதாக இருக்க வேண்டும்.

* அதேபோல், வளர்ப்புப் பிராணிகளுக்கு அளிக்கப்பட்ட தடுப்பூசி மற்றும் மருத்துவ ஆவணங்களையும் உடன் வைத்திருக்க வேண்டும்.

* சின்ன கூண்டுகளில் அடைத்து வளர்ப்புப் பிராணிகளை எந்தவொரு கோச்சிலும் கொண்டுசெல்லலாம். ஆனால், அதற்குரிய மருத்துவ ஆவணங்கள் எப்போதும் வைத்திருக்க வேண்டும். அதேநேரம், அவற்றுக்கு லக்கேஜ் கட்டணம் பிரத்யேகமாக செலுத்த வேண்டும்.

* இதுகுறித்த கூடுதல் விவரங்களை ரயில்வே துறையின் கமர்ஷியல் டிபார்ட்மெண்டை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: சொல்லி கேட்க போறது இல்ல… ஹெல்மெட் போடாதவர்களுக்கு ஸ்கெட்ச் போட்ட தூத்துக்குடி காவலர்கள்…

google news
Continue Reading

latest news

30000க்குள் சிறந்த பேட்டரி தன்மையை கொண்ட மொபைல் போன்கள்..எதெல்லாம்னு தெரிஞ்சிகனுமா?..

Published

on

mobile phones under 30000

2023ஆம் ஆண்டில் மீடியம் விலை போன்கள் பல வந்துள்ளன. 30000க்கும் கீழ் சாம்சங், போகோ, iQOO, ஒன்ப்ளஸ்  என பல நிறுவனங்களின் மொபைல் போன்கள் உள்ளன. இவை அனைத்தும் பலவகை வசதிகளை கொண்டிருத்தாலும் சிறந்த பேட்டரித்தன்மையையும் கொண்டுள்ளன. இவ்வாறான போன்கள் எவை என பார்க்கலாம்.

Samsung Galaxy F54:

samsung galaxy f54

samsung galaxy f54

இந்த மொபைலானது 6000mAh பேட்டரி தன்மையை கொண்டுள்ளது. 2023ல் வந்த மொபைல் வகைகளில் இது ஒரு சிறந்த மொபைல். மேலும் இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 நாட்களுக்கு நீடித்து உழைக்கக்கூடியதாகும். இது 108 mp கேமராவையும், 120Hz AMOLED திரையையும் கொண்டுள்ளது. மேலும் இது 8ஜிபி RAM மற்றும் 256ஜிபி இண்டெர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.29,999 ஆகும்.

iQOO Neo 7:

iQOO Neo 7

iQOO Neo 7

இதன் பேட்டரி 5000mAh மற்றும் இது 120w ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதனை நாம் சார்ஜ் செய்யும் பொழுது 10 நிமிடங்களுக்குள் 50% சார்ஜ் ஆகி விடுமாம். அதிக மொபைல் உபயோகிப்பாளர்களுக்கு இது ஒரு சிறந்த சாய்ஸ். இதன் விலை ரூ.27,999 ஆகும்.

POCO F5:

poco f5

poco f5

5000mAh பேட்டரி அமைப்பினை கொண்ட இந்த மொபைலானது 67w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியினை கொண்டது. மேலும் இதில் Snapdragon 7+Gen 2 ப்ராஸசரும் இருப்பதால் இதன் வேகம் சற்று அதிகமாகவே இருக்கும். இதனை ஒரு முறை சார்ஜ் செய்வதனால் நாம் ஒரு நாள் முழுவதும் மொபைலை உபயோகப்படுத்தலாம். இதன் விலை ரூ.29,999 ஆகும்.

OnePlus Nord 2T:

oneplus nord 2t

oneplus nord 2t

80w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியினை கொண்ட இதன் பேட்டரி 4500mAh தன்மையை கொண்டது. மேலும் இது 6.43 இன்ச் திரையினையும் 50mp கேமராவையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.28,999 ஆகும்.

Realme 11 Pro+:

realme11 pro+

realme11 pro+

இந்த மொபைலானது 5000mAh பேட்டரி தன்மையையும் 100w ஃபாஸ்ட் சார்ஜிங் தன்மையையும் கொண்டுள்ளது. மேலும் இது 12ஜிபி RAM, 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இது 200mp பின்புற கேமராவை கொண்டுள்ளதால் இதன் கேமரா மிக துல்லியமாக படங்களை எடுக்கும். இதன் விலை ரூ.27,999 ஆகும்.

google news
Continue Reading

Trending