இந்திய அஞ்சல்துறை மக்களுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக சமூகத்தில் நலிவடைந்தவர்கள் வரை பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் நமது அஞ்சலகங்களில் உள்ளன. அதன்படி கிராமபுறத்தில் உள்ள வசதி குறைவாக இருப்பவர்களுக்கென கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம்தான் கிராம பிரியா எனும் அஞ்சல் காப்பீட்டு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் நாம் குறைந்த அளவு தொகையை மட்டுமே பெற முடியும் எனினும் இத்திட்டம் ஒரு மிக சிறந்த திட்டமாகும். இதனை பற்றிய தகவல்களை காணலாம்.
இந்த திட்டத்தில் பாலிசிதாரர்கள் 10 ஆண்டுகள் வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையினை செலுத்த வேண்டும். 10 ஆண்டு முடிவில் நமது செலுத்திய தொகையானது நமது போனஸ் விகிதத்தின் அடிப்படையில் நமக்கு திரும்ப தரப்படும்.
வயது வரம்பு:
இத்திட்டத்தில் சேருவதற்கு நாம் 20 வயதிற்கு குறையாமலும் மற்றும் 45 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
பாலிசி தொகை:
இத்திட்டத்தில் சேருவதற்கு குறைந்தபட்சம் ரூ 10000 முதல் அதிகபட்சமாக ரூ. 10,00,000 வரை நாம் பாலிசியை பெற்று கொள்ளலாம்.
முதிர்வு காலம்:
உதாரணமாக தனிநபர் ஒருவர் ரூ. 10,00,000 க்கு பாலிசி எடுத்திருந்தால் அந்த தொகை மற்றும் வயதின் அடிப்படையில் அவர் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையினை 10 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். மேலும் நாம் பிரிமியம் செலுத்த ஆரம்பித்து 4 ஆண்டுகள் கழித்து நாம் மொத்த தொகையில் இருந்தூ 20- தொகையை பெற்று கொள்ளலாம். அதேபோல் 7 ஆண்டுகள் முடிவுபெற்ற நிலையில் திரும்பவும் 20- தொகைய பெற்று கொள்ளலாம். பின் நமது பாலிசி முடிவு பெறும் காலத்தில் அதாவது 10 ஆண்டுகள் கழித்து மீதமுள்ள 60- பணத்தினை போனஸோடு சேர்த்து பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்திற்கான போனஸ் தொகை 1000 ரூபாய்க்கு 45/- ரூபாய் ஆகும். எனவே இந்த பொன்னான திட்டத்தில் சேர்ந்து நாமும் பயனடைவோம்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…