இந்தியாவில் பல்வேறு மக்களுக்கு வங்கிகளை பற்றிய தகவல்கள் சென்றடைவதில்லை. வங்கிகணக்கு இல்லாமல் பல பேர் இந்தியாவில் உள்ளனர். அப்படிபட்டவைகளுக்கென 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா(Pradhan Mantri Jan Dhan Yojana). ஆரம்பகாலத்தில் இத்திட்டத்தினை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தாலும் தற்போது இக்கணக்கில் வரவு வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 46.25 கோடியாக உயர்ந்துள்ளது. இக்கணக்கினை பற்றிய தெளிவான தகவல்களை இப்போது நாம் பார்க்கலாம்.
பிரதான் மந்திரி மக்கள் நிதி திட்டம் எனும் இத்திட்டத்தில் 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் கணக்கினை தொடங்கலாம். இக்கணக்கினை தொடங்குவதற்கு நாம் எவ்வித முதலீடும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இக்கணக்கினை வைத்திருப்போருக்கு வங்கியின் ரூபே(rupay) டெபிட் கார்டானது வழங்கப்படும். இதன் மூலம் லைஃப் கவரேஜாக ரூ. 30000மும், விபத்து காப்பீடாக ரூ. 2,00,000 வரையும் பெற்று கொள்ளலாம்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் நமது வங்கி கணக்கில் இருந்து 10,000 வரை ஒவர் டிராஃப்ட்(overdraft) ஆக பெற்று கொள்ளலாம். ஆனால் இவ்வாறு பெறுவதற்கு நாம் ஜன் தன் கணக்கை தொடங்கி குறைந்தது 6 மாத காலங்கள் ஆகியிருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்திட்டத்தில் கணக்கினை வைத்திருப்போர் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா(PMJJBY), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா(PMSBY), அடல் பென்ஷன் யோஜனா(APY), பிரதான் மந்திரி முத்ரா யோஜனா(PMMY) போன்ற திட்டங்களுக்கும் தகுதியானவர்களாக கருதப்படுவர்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைவரும் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பதே ஆகும். இத்திட்டத்தில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…