உங்கள் — கணக்கில் இருந்து முன்னதாகவே பணத்தை எடுக்க வேண்டுமா?..அப்போ இத படிங்க..

மக்களின் பணத்தை சேமுக்கும் எண்ணத்தில் இந்தியாவில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. வருங்காலத்தில் நமது பணத்தேவையை பூர்த்தி செய்யவே இவ்வாறான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதில் ஒரு திட்டம்தான் PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.500ம் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். நடப்பு ஆண்டில் இதற்கான வட்டியாக 7.1% கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஆனால் நாம் சில நிபந்தனைகளுடன் முதிர்வு காலத்திற்கு முன்பே இந்த கணக்கில் உள்ள பணத்தினை சில அவசர தேவைகளுக்காக எடுக்க முடியும்.

இந்திய குடிமகனாய் உள்ள எவர் வேண்டுமானலும் இந்த கணக்கினை அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் ஆரம்பித்து கொள்ளலாம். இதனை நாம் நமது குழந்தைகளுக்காக கூட தொடங்கலாம். ஆனால் அவர்களின் பெற்றோரின் கணக்கினை உபயோகப்படுத்தியே தொடங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

withdraw 50 amount after 7 yrs

நாம் நமது கணக்கினை தொடங்கி 7 ஆண்டுகள் ஆன பின் இந்த கணக்கில் இருந்து நாம் பணத்தினை எடுத்து கொள்ளலாம். ஆனால் நாம் முழுத்தொகையையும் எடுக்க இயலாது. இந்த கணக்கில் உள்ள மொத்த தொகையில் இருந்து 50% தொகையை மட்டுமே நாம் முன்னதாகவே எடுக்க முடியும்.

இந்த தொகையை எவ்வாறு எடுப்பது?

இந்த தொகையை நாம் எடுப்பதற்கு முதலில் வங்கியிலோ அல்லது தபால் நிலயங்களிலோ ஃபார்ம் சி எனப்படும் ஆவணத்தை வாங்க வேண்டும். பின் அந்த ஃபார்ம் சி(Form c)-யில் நமது கணக்கின் எண்ணையும் நம்க்கு எவ்வளவு தொகை வேண்டும் என்பதையும் பூர்த்தி செய்ய வேண்டும். இதனுடன் ரிவன்யூ ஸ்டாம்ப்(Revenue Stamp) இருப்பதும் அவசியம். இதனை நமது பாஸ்புக் உடன் சேர்த்து வங்கியில் சமர்பிக்க வேண்டும். இந்த செயல்முறை முடிந்தபின் நாம் கேட்ட தொகையானது  நமது வங்கி கணக்கிற்கு வந்து சேரும். இந்த பி.பி.எஃப் கணக்கின் மிது நாம் கடன் கூட வாங்கலாம். ஆனால் அதற்கு நாம் கணக்கினை தொடங்கி 3 வருடங்கள் ஆகியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

amutha raja

Recent Posts

ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…

3 hours ago

நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…

தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…

3 hours ago

பி.எஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..

வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…

4 hours ago

தற்கால வீரர்களில் இவர் மட்டும் தான்.. மிரட்டி விட்ட விராட்..!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…

4 hours ago

குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம்..பன்னிரெண்டாம் தேதி சூரசம்ஹாரம்…

நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…

4 hours ago

இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை – ICC

இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…

4 hours ago