schemes
மக்களுக்கு ஒரு பொன்னான திட்டம்…. உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குகிறது கிசான் விகாஸ் பத்திரம்
![KVP2 - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/KVP2.jpg)
ஒரு காலத்தில் வங்கிகளைப் பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் இருந்த ஏழை பாமர மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஊக்குவிக்கும் வகையில் இந்திய தபால் துறை கிசான் விகாஸ் பத்திரம் என்ற திட்டத்தை 1988ல் தொடங்கியது.
கிசான் விகாஸ் பத்ரா என்பது மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்ட ஒரு அருமையான திட்டம். மேலும் சிறு சேமிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு சேமிப்புச் சான்றிதழ் திட்டம் என்றும் சொல்லலாம்.
KVP
நோக்கம்
கிசான் விகாஸ் பத்ரா என்பது ஒரு சிறு சேமிப்பு கருவி தான். இதை நாம் உபயோகப்படுத்தினால் நமக்கு நல்லது. நெருக்கடியான காலகட்டத்தில் இந்த பத்திரம் உதவக்கூடும். இது நீண்ட கால சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யும் மக்களுக்கு ஆர்வத்தை உண்டாக்குகிறது.
2014ல், கிசான் விகாஸ் பத்ரா திட்டம், மக்களின் சிறிய அளவு சேமிப்பு என்ற எண்ணத்தையாவது அவர்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் உருவாக்கி அதை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்டது.
முக்கிய அம்சங்கள்
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1000 மற்றும் நூறு ரூபாய்களின் மடங்குகளில் எந்தத் தொகையும் கணக்கில் டெபாசிட் செய்யலாம். ஒரு நபர் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் திறக்கலாம்.
இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளியும் கணக்கைத் தொடங்கலாம். நிபந்தனைக்கு ஒரு தனிநபரிடமிருந்து மற்றொருவருக்குக் கணக்கைமாற்றப்படலாம். மைனரின் பெயரில் கணக்கைத் தொடங்கவும் செய்யலாம்.
வகைகள்
ஒரு பெரியவர் தனக்காகவோ அல்லது மைனர் சார்பாகவோ அல்லது அவர் பாதுகாவலராக இருக்கும் மனநிலை சரியில்லாதவர் சார்பாகவோ அல்லது பத்து வயதை எட்டிய மைனர் மூலமாகவோ ஒற்றை வைத்திருப்பவர் வகை கணக்கைத் திறக்கலாம்.
கூட்டு ஏ வகைகளில் கணக்கு மூன்று பெரியவர்களின் பெயர்களில் கூட்டாக திறக்கப்படலாம்
கூட்டு பி -வகைக் கணக்கு மூன்று பெரியவர்களின் பெயரில் கூட்டாகத் திறக்கப்படலாம்,.
இது கணக்கு வைத்திருப்பவர்களுக்கோ அல்லது உயிர் பிழைத்தவர்களுக்கோ அல்லது உயிர் பிழைத்தவர்களுக்கோ செலுத்தப்படும்.
எந்த இந்திய குடியிருப்பாளரும், சிறார்களின் சார்பாகவும் வாங்கலாம். இந்தத் திட்டத்திற்கு அதிகபட்ச வயது தேவை இல்லை. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தைப் பெற தகுதியற்றவர்கள்.
வட்டி விகிதம்
கிசான் விகாஸ் பத்ரா மீதான தற்போதைய வட்டி விகிதம் 6.9மூ. இது ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது.
முதிர்வு காலம்
உங்களது முதலீடு 124 மாதங்களில் இரட்டிப்பாகி விடும்.
கேவிபி சான்றிதழை பணமாக்குவதற்கு முன், கிசான் விகாஸ் பத்ரா திரும்பப் பெறும் விதிகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்:
கிசான் விகாஸ் பத்ராவின் முதிர்வு காலம் 124 மாதங்கள். அதன் பிறகுதான் முழுமையாக திரும்பப் பெற முடியும். 30 மாதங்களுக்குப் பிறகு முன்கூட்டியே பணமாக்குதல் அனுமதிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் கிளையை அணுகுங்கள்.
latest news
ஹெலன் கெல்லர் விருது முதல் பிங்க் ஆட்டோ வரை… அட்டகாசமான அறிவிப்பால் அசரடித்த தமிழக அரசு!
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் படிப்பு என பல நோக்கத்தில் யோசிக்கப்பட்டு இந்த அறிவிப்புகள் வெளியாகி இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவுசார் குறைபாடு மற்றும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1000 மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணங்கள் வழங்கப்படும். பார்வை திறன் குறைந்த மாணவர்கள் தங்கி படிக்கும் தொழிற்பயிற்சி நிலைய யூனிபார்ம்களுக்கு ரூ.600 மானியமாக வழங்கப்படும்.
செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செயல்படும் 10 அரசு சிறப்பு பள்ளிகளில் கியூஆர் கோட் மூலம் அறிந்துக்கொள்ள பாடத்திட்டம் உருவாக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் ஒரே நேரத்தில் 200 பேர் தங்கி படிக்க விடுதி வசதியும், சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படும். சிறந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர் ஹெலன் கெல்லர் விருது வழங்கப்படும்.
தனியாரால் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் பெண்கள் விடுதி உரிமம் வாங்க சிம்பிள் கவர்னன்ஸ் திட்டம் மூலம் நடைமுறை எளிதாக்கப்படும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். 40 லட்சம் மதிப்பீட்டில் முக்கிய சுற்றுலா தளங்களில் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
2 கோடி மானியத்தில் 200 பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வழங்கப்படும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
latest news
கல்யாணம் பண்ணினா இந்த பென்ஷன் உங்களுக்குதான்..90ஸ் கிட்ஸ்லாம் நோட் பண்ணிகோங்க..
இந்தியாவில் மத்திய அரசால் பல்வேறு நல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பெரும்பாலும் வயதான காலத்தில் பென்ஷன் தரும் திட்டமாகவே உள்ளன. இந்த வகை திட்டங்களில் இப்போது நாம் பார்க்கும் திட்டம்தான் Pradhan Mantri Sharm Yogi Man Dhan yojana என அழைக்கப்படும் ஒரு வகை திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் நாம் நமது 60 வயதிற்கு பின் பென்ஷனாக ரூ.3000 வரையிலும் பெற்று கொள்ளலாம்.
இந்த திட்டத்திற்கு நாம் திருமணமாகி இருத்தல் அவசியம். இதன் மூலம் நாம் மாதம் ரூ200 செலுத்தினால் ஏறக்குறைய ஆண்டிற்கு ரூ.72000 வரையிலும் நாம் பென்ஷனாக பெறலாம். இந்த திட்டமானது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தினால் 2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. மேலும் திருமணமானவர்கள் தங்களின் வயதான காலத்தில் எந்தவித சிரமமும் இல்லாமல் பென்ஷன் பெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் அமைப்புசாரா தொழிலாளர்களான வீட்டு வேலைகளை பார்ப்பவர்கள், தெருக்கடைகள் வைத்திருப்பவர்கள், அங்கன்வாடிகளில் பணிபுரிபவர்கள், மாதம் 15000க்கு கீழ் வருமானம் வாங்குபவர்கள், டிக்ஷா ஓட்டுனர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயனடைபவர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பென்ஷன் வாங்க தகுதி உடையவராக இருத்தல் கூடாது.
csc centre
இத்திட்டத்தின்படி ஒவ்வொரு சந்தாதாரரும் தக்களின் 60 வயதிற்கு பின் ரூ.3000த்தினை மாதமாதம் பென்சஷனாக பெற்று கொள்ளலாம். ஒரு வேளை சந்தாதாரர் இறக்க நேரிட்டால் 50% தொகையானது அவரின் கணவர் அல்லது மனைவிக்கு அப்பணமானது பென்ஷனாக வந்து சேரும். இத்திட்டத்தினை அருகிலுள்ள பொது சேவை மைத்திற்கு தங்களுடைய ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தினை கொண்டு சென்று விண்ணப்பித்து கொள்ளலாம்.
job news
முதியவர்களுக்கான சிறப்பான நிலையான வைப்பு தொகை..கடைசி நாளை நீட்டித்த வங்கிகள்..எதெல்லாம்னு தெரிஞ்சிகனுமா?..
நிலையான வைப்பு தொகை(FD) என்பது அனைவருக்கும் தேவைப்படும் மிக சிறந்த திட்டம் ஆகும். இதில் நாம் செலுத்தும் தொகையானது அதன் முதிர்வு காலத்திற்கு பின் வட்டியுடன் சேர்ந்து நமக்கு திரும்ப வந்து சேரும். இதனை நாம் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் தொடங்கி கொள்ளலாம். ஒவ்வொரு வங்கியும் மூத்த குடிமக்களுக்கான ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த FD திட்டத்தினை கொண்டுள்ளன. தற்போது சில வங்கிகள் தங்களது வங்கிகளில் இந்த கணக்கினை தொடங்குவதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளன. அது என்னென்ன வங்கிகள் என பார்க்கலாம்.
எஸ்.பி.ஐ:
we care and amrit kalash schemes in sbi
WE CARE:
பாரத ஸ்டேட் வங்கி தனது வங்கியில் மூத்த குடிமக்களுக்காக WE CARE என்ற நிலையான வைப்பு தொகைக்கான திட்டத்தினை தொடங்கியது. இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.6% வட்டியும் மற்றவர்களுக்கு 7.10% வட்டியும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 முதல் 10 ஆண்டுகள். செப்டம்பர் 30, 2023 வரை இந்த திட்டத்தில் நாம் முதலீடு செய்து கொள்ளலாம்.
அம்ரித் கலாஷ்:
இதுவும் பாரத ஸ்டேட் வங்கியின் நிலையான வைப்பு திட்டத்தில் ஒன்றாகும். இதன் மூலம் சாதாரண மக்கள் 3% முதல் 7% வரையிலும் மூத்த குடிமக்கள் 3.5% முதல் 7.5% வரையிலும் வட்டியாக பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஆகஸ்ட்,15 2023 வரை நாம் கணக்கினை தொடங்கி கொள்ளலாம்.
எச்.டி.எஃப்.சி வங்கி:
hdfc bank fd schemes
இந்த திட்டத்தினை நாம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் என்ற கால கணக்கில் தொடங்கி கொள்ளலாம். 400 நாட்கள் முதிர்வு காலமாக கொண்ட இந்த திட்டத்தில் நாம் வட்டியாக 7.75- வரை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் நாம் ஜுலை மாதம் 7ஆம் தேதி வரை தொடங்கி கொள்ளலாம்.
எனவே இந்த மாதிரியான பொன்னான திட்டத்தில் சேர்ந்து நமது பணத்தினை சேமிக்கலாம்.
govt update news
உங்கள் — கணக்கில் இருந்து முன்னதாகவே பணத்தை எடுக்க வேண்டுமா?..அப்போ இத படிங்க..
மக்களின் பணத்தை சேமுக்கும் எண்ணத்தில் இந்தியாவில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. வருங்காலத்தில் நமது பணத்தேவையை பூர்த்தி செய்யவே இவ்வாறான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதில் ஒரு திட்டம்தான் PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.500ம் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். நடப்பு ஆண்டில் இதற்கான வட்டியாக 7.1% கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஆனால் நாம் சில நிபந்தனைகளுடன் முதிர்வு காலத்திற்கு முன்பே இந்த கணக்கில் உள்ள பணத்தினை சில அவசர தேவைகளுக்காக எடுக்க முடியும்.
இந்திய குடிமகனாய் உள்ள எவர் வேண்டுமானலும் இந்த கணக்கினை அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் ஆரம்பித்து கொள்ளலாம். இதனை நாம் நமது குழந்தைகளுக்காக கூட தொடங்கலாம். ஆனால் அவர்களின் பெற்றோரின் கணக்கினை உபயோகப்படுத்தியே தொடங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
withdraw 50 amount after 7 yrs
நாம் நமது கணக்கினை தொடங்கி 7 ஆண்டுகள் ஆன பின் இந்த கணக்கில் இருந்து நாம் பணத்தினை எடுத்து கொள்ளலாம். ஆனால் நாம் முழுத்தொகையையும் எடுக்க இயலாது. இந்த கணக்கில் உள்ள மொத்த தொகையில் இருந்து 50% தொகையை மட்டுமே நாம் முன்னதாகவே எடுக்க முடியும்.
இந்த தொகையை எவ்வாறு எடுப்பது?
இந்த தொகையை நாம் எடுப்பதற்கு முதலில் வங்கியிலோ அல்லது தபால் நிலயங்களிலோ ஃபார்ம் சி எனப்படும் ஆவணத்தை வாங்க வேண்டும். பின் அந்த ஃபார்ம் சி(Form c)-யில் நமது கணக்கின் எண்ணையும் நம்க்கு எவ்வளவு தொகை வேண்டும் என்பதையும் பூர்த்தி செய்ய வேண்டும். இதனுடன் ரிவன்யூ ஸ்டாம்ப்(Revenue Stamp) இருப்பதும் அவசியம். இதனை நமது பாஸ்புக் உடன் சேர்த்து வங்கியில் சமர்பிக்க வேண்டும். இந்த செயல்முறை முடிந்தபின் நாம் கேட்ட தொகையானது நமது வங்கி கணக்கிற்கு வந்து சேரும். இந்த பி.பி.எஃப் கணக்கின் மிது நாம் கடன் கூட வாங்கலாம். ஆனால் அதற்கு நாம் கணக்கினை தொடங்கி 3 வருடங்கள் ஆகியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
latest news
வங்கிகளில் லாக்கர் வைக்கும் ஐடியா இருக்கா?..ஒவ்வொரு வங்கியும் எவ்வளவு சார்ஜ் பன்றாங்கனு தெரியனுமா?..அப்போ இத பாருங்க..
லாக்கர் வசதி என்பது அனைத்து வங்கிகளிலும் நமது நகைகளை, பத்திரங்களை, பாண்டுகள் என அனத்தையும் பத்திரமாக வைப்பதற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு வசதி ஆகும். இதன் மூலம் நமது முக்கியமாக அனைத்து அசயா சொத்துகளையும் நாம் பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும். இந்த லாக்கர்களின் வாடகை அதன் அளவு மற்றும் இருக்கும் நகரத்தை பொறுத்து மாறுபடும். இத்தகைய லாக்கர்களுக்கு எந்த வங்கி எவ்வளவு வசூலிக்கிறது என காணலாம்.
பாரத ஸ்டேட் வங்கி:
கிராமபுற/சிறிய நகரங்கள் | நகர்புற/மெட்ரோ | |
சிறிய லாக்கர் | ரூ.1500 | ரூ.2000 |
நடுத்தர லாக்கர் | ரூ.3000 | ரூ.4000 |
பெரிய லாக்கர் | ரூ.9000 | ரூ.12000 |
பஞ்சாப் நேஷனல் வங்கி:
கிராமபுற/சிறிய நகரங்கள் | நகர்புற/மெட்ரோ | |
சிறிய லாக்கர் | ரூ.1250 | ரூ.2000 |
நடுத்தர லாக்கர் | ரூ.2500 | ரூ.3500 |
பெரிய லாக்கர் | ரூ.3000 | ரூ.5500 |
எச்.டி.எஃப்.சி வங்கி:
கிராமபுற/சிறிய நகரங்கள் | நகர்புற | மெட்ரோ | |
சிறிய லாக்கர் | ரூ.1200 | ரூ.1650 | ரூ.2200 |
நடுத்தர லாக்கர் | ரூ.1550 | ரூ.3000 | ரூ.4000 |
பெரிய லாக்கர் | ரூ.4000 | ரூ.7000 | ரூ.10000 |
மிகபெரிய லாக்கர் | ரூ.11000 | ரூ.15000 | ரூ.20000 |
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி:
ஏறக்குறைய லாக்கர் வாடகை | |
சிறிய லாக்கர் | ரூ.1200-5000 |
நடுத்தர லாக்கர் | ரூ.2500-9000 |
பெரிய லாக்கர் | ரூ.4000- 15000 |
மிகபெரிய லாக்கர் | ரூ.10000-22000 |
கனரா வங்கி:
கிராமபுறங்கள் | சிறிய நகரங்கள் | மெட்ரோ | |
சிறிய லாக்கர் | ரூ1000 | ரூ.1500 | ரூ.2000 |
நடுத்தர லாக்கர் | ரூ.2000 | ரூ.3000 | ரூ.4000 |
பெரிய லாக்கர் | ரூ.4000 | ரூ.6000 | ரூ.7000 |
மிகபெரிய லாக்கர் | ரூ.6000 | ரூ.8000 | ரூ.10000 |
எனவே இதுபோன்ற வங்கிகளில் நமது நகைகளையோ அல்லது பிற சொத்து சம்பந்தமான பத்திரங்களையோ வைப்பதின் மூலம் நாம் நமது பொருட்களை பாதுகாக்கலாம்.
-
latest news1 day ago
தமிழகத்தில் வரும் 11ம் தேதி வரை… வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்…!
-
World News1 day ago
2024 United Kingdom elections: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர்… யார் இந்த கீர் ஸ்டார்மர்?!
-
tech news1 day ago
இனி அந்த விலை கிடையாது.. சத்தமின்றி Netflix செய்த காரியம்..?
-
tech news2 days ago
வேற லெவல் லுக், சூப்பர் ஸ்பெக்ஸ் கொண்ட போட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்
-
tech news2 days ago
ரூ. 99,999 விலையில் மோட்டோ ப்ளிப் போன் அறிமுகம் – என்ன ஸ்பெஷல் தெரியுமா?
-
latest news21 hours ago
Budget 2024… தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?!
-
latest news19 hours ago
சென்னையில் அதிர்ச்சி.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை!
-
Cricket2 days ago
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்… இந்திய வீரர்களுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்… வைரல் வீடியோ..!