வருத்தப்பட்ட கம்பீர்.. உண்மையை உடைத்த பாக். அணி தேர்வுக்குழு உறுப்பினர்

பாகிஸ்தான் அணி தனது ஹோம் கிரவுண்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஒட்டி பாகிஸ்தான் அணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டன. அணியில் ஃபார்மில் இல்லாத பாபர் அசாம் மற்றும் ஷாஹீன் அப்ரிடி அதிரடியாக நீக்கப்பட்டனர். இருவரின் நீக்கத்திற்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சிலர் இருவரை நீக்கியிருக்கக் கூடாது என்றும், சிலர் நீக்கியது சரிதான் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வுக் குழு உறுப்பினருமான ஆகிப் ஜாவெத் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் நடைபெற்ற உரையாடல் பற்றி மனம்திறந்து பேசியுள்ளார். அப்போது கூறிய அவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நிலை பற்றி கம்பீர் தன்னிடம் பேசியதாக தெரிவித்தார்.

“இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது நாங்கள் இந்திய வீரர்களை சந்தித்தோம். கவுதம் கம்பீர் என்னிடம் பேசும் போது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு என்ன ஆனது, இத்தனை திறமைகள் இருந்த போதிலும், அவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்?”

“கம்பீர் இந்த நிலைப் பற்றி வருத்தம் தெரிவித்தார். பலம் வாய்ந்த சில அணிகள் உள்ளன. எனினும், இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் எப்போதும் மிகப்பெரிய பரபரப்பு மற்றும் பேசுபொருளை ஏற்படுத்தும். ஆனால் உங்கள் (பாகிஸ்தான்) அணி இப்படி வீழ்ந்தால், போட்டியின் போது ஏற்படும் உற்சாகம் குறைந்துவிடும்,” என்று கவுதம் கம்பீர் கூறியதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஆகிப் ஜாவெத் தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

1 min ago

ரேஸ்ல நாங்களும் இருக்கோம்!…கிரிக்கெட்டில் கெத்து காட்டும் இந்திய பெண்கள்…

ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…

1 hour ago

18-வது இரட்டை சதம்… ஜாம்பவான்களின் பட்டியல் வரிசையில் இணைந்த புஜாரா…!

18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார். 90-வது ரஞ்சி கோப்பை…

1 hour ago

மொதல்ல உடம்ப குறைச்சிட்டு வா… சேட்டை செய்த வீரரை வீட்டுக்கு அனுப்பிய மும்பை அணி..!

பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது. இந்திய அணியின்…

2 hours ago

கூகுள் பே, போன் பே ஆப்-க்கு எச்சரிக்கை… யுபிஐ-க்கு பதிலா இத பயன்படுத்திக்கோங்க..!

நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…

2 hours ago

தீபாவளி சேலில் கலக்கும் விவோ 5ஜி போன்… அதுவும் ரொம்ப கம்மி விலையில்… செக் பண்ணி பாருங்க..!

Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…

3 hours ago