2வது ரன் ஓடிய பண்ட்.. ‘நோ’ சொல்லி குதித்த சர்ஃப்ராஸ் கான்.. பதறிய ரோகித்.. வீடியோ வைரல்

முதல் நாள் மழை, இரண்டாம் நாளில் நியூசிலாந்து ஆதிக்கம், மூன்றாம் நாள் இந்திய அணி போராட்டம் என பரபரப்பான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நேற்றைய ஆட்டத்தின் கடைசி பந்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக இன்று (நான்காம் நாள்) காலை இந்திய அணிக்கு சர்ஃப்ராஸ் கானுடன் ரிஷப் பண்ட் களமிறங்கினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சர்ஃப்ராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடியும் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. சர்ஃப்ராஸ் கான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். முதல் செஷனில் சர்ஃப்ராஸ் மற்றும் பண்ட் ஜோடி 50 ரன்களை கடந்தது.

இந்த நிலையில், போட்டியின் இடையில் சர்ஃப்ராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் இடையே ஏற்பட்ட குழப்பம் இந்திய அணிக்கு மற்றொரு விக்கெட்டை காவு வாங்கியிருக்கும். இந்த சம்பவத்தை டிரெசிங் ரூமில் இருந்து பார்த்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், விக்கெட் பறிபோகவில்லை என்பதால் வாய்விட்டு சிரித்தனர். சர்ஃப்ராஸ் கான் முதல் ரன் ஓடிய நிலையில், இரண்டாவது ரன் எடுக்க முடியுமா என்று வேகமாக ஓட முயற்சித்தார்.

இதை சமிக்கையாக எடுத்துக் கொண்ட ரிஷப் பண்ட் சற்றும் தாமதிக்காமல் இரண்டாவது ரன் ஓட ஆரம்பித்துவிட்டார். பந்து ஃபீல்டரிடம் சென்றதை பார்த்துவிட்ட சர்ஃப்ராஸ் கான் இரண்டாவது ரன் ஓட வேண்டாம் என்று முடிவு செய்தார். அதற்குள் ரிஷப் பண்ட் கிரீஸை விட்டு வெளியே வந்துவிட்டார். உடனே அதிர்ச்சியடைந்த சர்ஃப்ராஸ் கான் ரன் வேண்டாம் என்று கூறி துள்ளி குதித்து செய்கை காண்பித்தார்.

அதன்பின் சுதாரித்துக் கொண்ட ரிஷப் பண்ட் கிரீஸுக்குள் நுழைந்தார். அதற்குள் நியூசிலாந்து கீப்பரிடம் பந்து கிடைத்த போதிலும், அவர் அதனை ஸ்டம்பிங் செய்ய முடியாதவராக காணப்பட்டார். இந்த சம்பவங்கள் ரிஷப் பண்ட், எதிரணி வீரர்கள் மட்டுமின்றி இன்னிங்ஸில் முன்னிலை பெற முடியுமா என்று எதிர்பார்த்து காத்திருக்கும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரை உச்சக்கட்ட பரபரப்பில் தள்ளியது. எனினும், விக்கெட் இழக்கவில்லை என்பதை அறிந்து ரோகித் மற்றும் அஷ்வின் சிரித்தனர்.

களத்தில் சர்ஃப்ராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் இடையே நடந்த குழப்ப சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 344 ரன்களை எடுத்துள்ள நிலையில் மழை குறுக்கிட்டதால், போட்டி நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியா சார்பில் சர்ஃப்ராஸ் கான் 125 ரன்களையும், ரிஷப் பண்ட் 53 ரன்களையும் எடுத்துள்ளனர்.

Web Desk

Recent Posts

டிப்ளமோ, B.Com, BBA, CA படித்தவர்களுக்கு… மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும்…

57 mins ago

என்னடா கொடுமை இது…! முதல் நாள் நீண்ட ஆயுளுக்கு விரதம்… மறுநாள் மனைவி வச்ச விஷம்…!

கணவனின் நீண்ட ஆயுளுக்கு விரதம் இருந்த மனைவி விரதம் முடித்த பிறகு உணவில் வைத்து கணவரை கொன்ற சம்பவம் அரங்கேறி…

1 hour ago

ஜெர்மன் வேலை வாய்ப்பு… தமிழக அரசின் சிறப்பு பயிற்சி…

ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான…

1 hour ago

வாஸ்கோடாகாமா ரயிலில் ஏசி பெட்டிக்குள் புகுந்த பாம்பு… பீதியில் உறைந்த பயணிகள்… வைரல் வீடியோ..!

வாஸ்கோடகாமா ரயிலின் ஏசி பெட்டிக்குள் பாம்பு இருப்பதைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் அச்சமடைந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

2 hours ago

சிலிர்க்க வைத்த சிட்டி யூனியன் பேங்க் ஷேர்…அடிச்சிருக்கு பாருங்க லக்கி ப்ரைஸ்…

சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர…

2 hours ago

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

3 hours ago