இந்திய அணிக்கு எதிராக 36 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற ரச்சின் ரவீந்திராவின் அமைதியான போக்கு முக்கிய காரணியாக இருந்தது என நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் தெரிவித்தார்.
“எங்கள் பக்கம் இளம் வீரர்கள் இருந்தது நல்வாய்ப்பாக அமைந்தது. சில இளம் வீரர்கள் இந்தப் போட்டியில் நிரூபித்துக் காட்டியுள்ளனர். வில் ரூர்கி பந்துவீசிய விதம் அபாரமாக இருந்தது. டிம் சௌதி மற்றும் மேட் ஹென்றியின் பந்துவீச்சும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை எதிரணிக்கு ஏற்படுத்தினர். முதல் இன்னிங்ஸில் மேட்-க்கு நல்ல புகழாரம் கிடைத்தது.”
“எல்லாமும் சரியாக அமைந்துவிட்டது. இந்த நிலையில் இருப்பது மிகவும் விசேஷமான உணர்வு. இரு இன்னிங்ஸிலும் நாங்கள் சிறப்பாக பணியாறஅறி இருப்பதாக நினைக்கிறோம். இந்த பெருமை மிக்க தருணத்தை கொண்டாட விரும்புகிறோம்.”
“ரச்சின் ரவீந்திரா விளையாடிய விதம் எங்களுக்கு மிக முக்கியமானதாக அமைந்தது. 9வது விக்கெட்டுக்கு 137 ரன் பார்ட்னர்ஷிப் சேர்ப்பது எளிய விஷயம் கிடையாது. அவர் முன்னிலையில் இருந்து புதிய பந்தை எதிர்கொண்டு விளையாடியது முக்கியமான ஒன்றாகும்.”
“இன்று காலையில் அவர் களமிறங்கி விளையாடிய விதம் கச்சிதமாக இருந்தது. அவரது நிதான ஆட்டம் டிரெசிங் ரூமை அமைதியாக வைத்திருந்தது. கடந்த 12 மாதங்களில் அவரின் திறமையை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர் எங்கள் பக்கம் நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று டாம் லேதம் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…
18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார். 90-வது ரஞ்சி கோப்பை…
பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது. இந்திய அணியின்…
நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…
Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகிய படம் "மார்க் ஆண்டனி". இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்தி…