tamilnadu
கள்ளக்குறிச்சியில் 4 பேர் மரணத்துக்கு என்ன காரணம்…. கலெக்டர் விளக்கம்
![kk - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/kk.jpg)
கள்ளக்குறிச்சியில் மூன்று பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஷெகாவத் விளக்கமளித்திருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், பிரவீன் மற்றும் சேகர் ஆகியோர் மரணமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர்களின் குடும்பத்தினர், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதை குடித்ததாலேயே அவர்கள் உயிரிழந்ததாகவும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர்.
இதுவே கடைசியாக இருக்கட்டும். இந்த விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டனர். போலீஸுக்கு மாமுல் கொடுத்துவிட்டு கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் கள்ளச்சாரய ஊறல் போடுவதுண்டு என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்துவருகிறது.
இந்தநிலையில், கருணாபுரத்தில் நிகழ்ந்த மரணங்கள் கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்தவையே என்று பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதுகுறித்து விளக்கமளித்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஷெகாவத் கள்ளச்சாரய மரணங்கள் என்று தவறான தகவல் பரப்பப்படுவதாகக் கூறியிருக்கிறார். கள்ளச்சாரய மரணங்கள் என்பதை போலீஸும் மருத்துவர்களும் உறுதிப்படுத்தவில்லை என்றும் அவர் விளக்கமளித்திருக்கிறார்.
latest news
பூரண மதுவிலக்கு தமிழகத்தில் இப்போது சாத்தியமில்லை!. அமைச்சர் முத்துசாமி..
கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரம் பகுதியில் வசித்து வரும் பெரும்பாலான மக்கள் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரும் உயிரிழக்க கர்ணாபுரம் ஊரே சோக மயமானது. தொடர்ந்து பலரும் உயிரிழந்து வந்ததால் இப்போது வரை 64 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
எனவே, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதோடு, இந்த விவகாரம் ஆளும் தமிழக அரசுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்தே கள்ளச்சாராயாம் தொடர்பான குற்றங்களை தடுக்கும் கடுமையான சட்டங்களுடன் கூடிய மசோதாவை முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன்படி கள்ளச்சாராயம் குடித்து மரணம் ஏற்பட்டால் ஆயுள் முழுக்க சிறையில் இருப்பதோடு ரூ.10 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும் என்பது போல சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இதுபோன்ற குற்றங்களை செய்ய பயன்படுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, இதற்கு பயன்படுத்தப்படும் இடங்களையும் மூடி சீல் வைக்க வேண்டும் என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
அந்த மசோதா பற்றி சட்டசபையில் பேசிய அமைச்சர் முத்துசாமி ‘தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல் படுத்தும் சூழ்நிலை இப்போது இல்லை. பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டும் என்கிற விருப்பம் அரசுக்கு இருக்கிறது. ஆனால், அதற்கான சூழல் இப்போது இல்லை. டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடினாலும் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஒரு கடையை மூடினால் இன்னொரு கடையில் வாங்கி குடிக்கிறார்கள். ஆனாலும், படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம்’ என அவர் தெரிவித்தார்.
latest news
கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை!.. மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா தாக்கல்..
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இது அரசுக்கு பெரும் தலை குனிவை ஏற்படுத்தி இருக்கிறது. இது அரசியல் அலட்சியம் என அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
எனவே, தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் சட்டம் திருத்தப்படும் எனவும் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் புதிய சட்டமும் கொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டபையில் கூறினார். மது விலக்கு திருத்த சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்படும் என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், கடுமையான சட்டங்களுடன் கூடிய மசோதாவை முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் ‘தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம் என்று அரசு கருதுகிறது. எனவே கள்ளச்சாரயத்துடன் கலக்கப்படும் எரி சாராயம், மெத்தனால் போன்ற தடைசெய்யப்பட்ட மதுபானங்களால் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுவதால் கள்ளச்சாரய விற்பனை தடுக்க தண்டனை அதிகரிப்பது அவசிம் என்றே அரசு கருதுகிறது.
அந்த மதுவை குடித்து மரணம் ஏற்பட்டால் ஆயுள் முழுக்க சிறையில் இருப்பதோடு ரூ.10 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும் என்பது போல சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இதுபோன்ற குற்றங்களை செய்ய பயன்படுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, இதற்கு பயன்படுத்தப்படும் இடங்களையும் மூடி சீல் வைக்க வேண்டும் என அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
latest news
டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை!. அதனாலதான் கள்ளச்சாராயம்!.. துரைமுருகன் அடடே விளக்கம்..
கடந்த வாரம் கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களில் பலரும் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனார்கள். விசாரணையில் ஆந்திராவிலிருந்து கெட்டுப்போன மெத்தனாலை வாங்கி கள்ளசாரயத்தில் கலந்து விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுவரை கர்ணாபுரம் பகுதியை சேர்ந்த 64 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். இறந்தவர்களுகு 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஒருபக்கம், தமிழகம் முழுவதும் கள்ளச்சாரயம் காய்ச்சி விற்பவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கல்வராயன் மலையில்தான் அதிக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக செய்திகள் வந்ததால் மலைப்பகுதியிலும் போலீசார் தேடுதல் வேட்டையை துவங்கி இருக்கிறார்கள். சில இடங்களில் பேரல் கணக்கில் சாராயம் பிடிப்பட்டது. அவை கீழே ஊற்றி அழிக்கப்பட்டது.
ஒருபக்கம், இந்த விவகாரத்தை எதிர்கட்சியான அதிமுக கையில் எடுத்திருக்கிறது. கடந்த சில நாட்களாகவே சட்டபையில் அமளியில் ஈடுபட்டு அதிமுக எம்.ல்.ஏக்கள் சஸ்பெண்டும் ஆனார்கள். இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய திமுக எம்.ல்.ஏவும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் ‘டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை. அதாவது அதிக போதை இல்லை. அதனால்தான் கள்ளச்சாராயத்தை குடிக்கிறார்கள். உழைப்பவர்களுக்கு அசதியை போக்க மது தேவைப்படுகிறது. அரசு விற்கும் மதுபானம் அவர்களுக்கு சாஃப்ட் டிரின்க் போல இருக்கிறது. கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேசன் திறக்க முடியாது. கிக் வேண்டும் என்பதற்காகவே சிலர் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள்’ என பேசி இருக்கிறார்.
latest news
6 மாதம் தலைமறைவு; இஸ்திரி தொழிலாளி – கோயம்பேடு ஹோட்டலில் தீவிரவாதி வளைக்கப்பட்டது எப்படி?
சென்னை கோயம்பேடு ஹோட்டலில் இஸ்திரி போடும் தொழிலாளியாகக் கடந்த 6 மாதங்களாகப் பதுங்கியிருந்த மேற்குவங்க மாநில தீவிரவாதியை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள்.
அன்சர் அல் இஸ்லாம்
மேற்குவங்க மாநிலம் புர்பா பர்தான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனோகர். இவர் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர் என்றும் அன்சர் அல் இஸ்லாம் என்கிற இயக்கத்தில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்தவர் என்றும் போலீஸார் கூறுகிறார்கள்.
மேற்குவங்க மாநிலத்தில் இவர் மீது, இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுக்க நினைத்தல், தாக்குதல் நடத்தத் திட்டமிடுதல் மற்றும் அரசுக்கு எதிராக சட்டவிரோத செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் மேற்குவங்கத்தில் இருந்து வெளியேறிய அனோகர் தமிழகத்தில் தலைமறைவாகியிருக்கிறார். சென்னை கோயம்பேட்டில் உள்ள கிராண்ட் டவர் ஹோட்டலில் இஸ்திரி போடும் தொழிலாளி வேடத்தில் கடந்த 6 மாதங்களாகத் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார்.
இந்தநிலையில், அனோகரின் கூட்டாளி ஹபிபுல்லா என்பவரை மேற்குவங்க போலீஸார் சமீபத்தில் கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் நடத்திய விசாரணையில் அனோகர் சென்னையில் பதுங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து சென்னை வந்த மேற்குவங்க தனிப்படை போலீஸார், சென்னை போலீஸாரின் உதவியோடு அனோகரை சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ரத்து செய்யப்பட்ட யு.ஜி.சி NET தேர்வுகளுக்கு புதிய தேதி அறிவிப்பு….
latest news
கள்ளக்காதல் விவகாரம்!. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!.. சென்னையில் அதிர்ச்சி..
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருவபர் சரவணன். இவர் வெளிநாட்டில் பெயிண்டராக வேலை செய்து விட்டு தற்போது சென்னையிலேயே பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி விஜயசாந்தி. இவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
சரவணன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தபோது, மணலியில் வசித்து வரும் தனது தங்கையின் கணவர் சரவணனுக்கு பணம் அனுப்பி தனது மனைவியிடம் கொடுக்க சொல்வார். சரவணன் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்ர். அந்த பணத்தை கொடுக்க விஜயசாந்தியை அடிக்கடி பார்க்க வந்தபோது இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் வெளிநாட்டிலிருந்து வந்த சரவணனுக்கு தெரியவந்து மனைவியை கண்டித்ததோடு, அவரை அடித்து உதைத்திருக்கிறார். ஒருபக்கம், தன்னுடன் கள்ளக்காதலை தொடரும்படி மெக்கானிக் சரவணனும் வற்புறுத்தி இருக்கிறார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் 2 நாட்களுக்கு முன்பு விஜயசாந்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும், ‘தனது சாவுக்கு கணவர் சரவணனும் கள்ளக்காதலுக்கு வற்புறுத்திய மெக்கானிக் சரவணனுமே காரணம்’ என கடிதம் எழுதி வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக சொல்லி அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
-
india1 day ago
88 வருடங்களுக்கு பின்னர் டெல்லியை உருகுலைக்கும் பேய் மழை… கலக்கத்தில் மக்கள்
-
india1 day ago
பறக்கும் விமானத்தில் ஜாலியாக சிகரெட் பிடித்த நபர்!.. அதிர்ச்சி செய்தி….
-
latest news2 days ago
நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்!.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி..
-
Cricket1 day ago
டி20 உலகக் கோப்பை: பும்ராவுக்கு மற்றொரு சாதனை.. பும் பும்-னா சும்மா நினைச்சியா?
-
tech news1 day ago
ஸ்மார்ட்போனிற்கு ரூ. 18,000 தள்ளுபடி அறிவித்த சாம்சங்
-
Cricket10 hours ago
டி20 உலகக் கோப்பை: அவருக்காக ஜெயிக்கனுமா? இது ரொம்ப மோசம் – அஷ்வின்
-
tech news1 day ago
லூமியா ஸ்டைலில் புது போன் உருவாக்கும் HMD
-
Cricket1 day ago
விடுப்பா பாத்துக்கலாம்.. கோலியை தட்டிக் கொடுத்த ராகுல் டிராவிட்