ஏர்டெல் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் தனது 5ஜி பிளஸ் சேவையை வழங்க துவங்கியது. நாடு முழுக்க 5ஜி சேவையை வழங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வரும் ஏர்டெல் நிறுவனம், தமிழ் நாட்டில் மட்டும் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20 லட்சங்களை கடந்துவிட்டதாக அறிவித்து இருக்கிறது. தற்போது தமிழ் நாடு முழுக்க சுமார் 500-க்கும் அதிக நகரங்கள் / டவுன்களில் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவை வழங்கப்பட்டு வருவதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ் நாட்டில் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருப்பூர், ஓசூர், வேலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மாநிலம் முழுக்க 460 டவுன்கள், 173 கிராமங்களில் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் மாநிலத்தின் மிக முக்கிய வர்த்தக பகுதிகளில் ஏர்டெல் 5ஜி பிளஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியா முழுக்க 3 ஆயிரத்து 500-க்கும் அதிக டவுன்கள் / கிராமங்களில் 5ஜி பிளஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. நாடு முழுவதிலும் செயல்பட்டு வரும் ஏர்டெல் ரிடெயில் ஸ்டோர்கள், தமிழ் நாட்டில் 76 ரிடெயில் ஸ்டோர்களில் ஏர்டெல் 5ஜி பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் மையகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் இந்த ஸ்டோர்களில் ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவையை பயன்படுத்தி பார்க்க முடியும்.
ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 30 முதல் 40 நகரங்களில் 5ஜி பிளஸ் சேவையில் இணைக்கப்பட்டு வருவதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டின் ஒவ்வொரு நகரம் மற்றும் முக்கிய கிராமபுற பகுதிகளில் 5ஜி சேவையை வழங்க ஏர்டெல் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
“தமிழ் நாடு மாநிலத்தில் ஏர்டெல் 5ஜி பிளஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சமீப காலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. அதிவேக ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கில் 20 லட்சம் பேர் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. எங்களது நெட்வொர்க்கை மேலும் மேம்படுத்தி மாநிலம் முழுக்க ஒவ்வொரு நகரம், மிகமுக்கிய கிராமபுற பகுதிகளில் வாடிக்கையாளர்களை அதிவேக இணைய சேவையை பெற்று HD வீடியோ ஸ்டிரீமிங், கேமிங், ஏராளமான சாட்டிங், உடனடி போட்டோ அப்லோடு என்று பல்வேறு பயன்களை பெற வைப்போம்,” என்று தமிழ் நாட்டுக்கான பாரதி ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி தருன் விர்மானி தெரிவித்தார்.
தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…
தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…
வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…
நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…
இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…