Connect with us

latest news

அமேசானில் அதிரடி சலுகைகள் வழங்கும் கிரேட் சம்மர் சேல் துவக்கம் = ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்!

Published

on

Amazon Great Summer Sale

அமேசான் வலைதளத்தில் கோடை காலத்தை ஒட்டி சிறப்பு சலுகைகள் வழங்கும் “அமேசான் கிரேட் சம்மர் சேல்” துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான பொருட்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. முன்னணி பிராண்டுகளான சாம்சங், ஆப்பிள், ஒப்போ, சோனி, அசுஸ் உள்ளிட்டவை தங்களது பிரபல பொருட்கள் மற்றும் சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடியை அறிவித்துள்ளன.

ஸ்மார்ட்போன் துவங்கி, அக்சஸரீக்கள், டேப்லெட் என்று பல்வேறு பிரிவில் சாதனங்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. போட்டோகிராபி, கேமிங் அல்லது அதநவீன 5ஜி நெட்வொர்க் என்று எந்த விதமான பயன்பாடுகளுக்கும் ஏற்ற வகையில், ஒவ்வொருத்தரின் பட்ஜெட்டில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி, விலை குறைப்பு மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்படுகன்றன.

அந்த வகையில், தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் தற்போது நடைபெறும் அமேசான் கிரேட் சம்மர் சேல் பயன்படுத்தி அதனை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு சாதனத்திற்கும் அசத்தலான சலுகைகளுடன், ஐசிஐசிஐ மற்றும் கோடக் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போதும், மாத தவணை முறையை தேர்வு செய்யும் போதும் கூடுதலாக தள்ளுபடியை பெற முடியும்.

அமேசானில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் சலுகை விவரங்கள்:

iPhone-14-Plus

iPhone-14-Plus

ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் – ஐபோன் 14 அதிகளவு தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, மேம்பட்ட ப்ரோ-லெவல் 12MP டூயல் கேமரா, ஆட்டோஃபோக்கஸ் ட்ரூடெப்த் செல்ஃபி கேமரா, ஏ15 பயோனிக் சிப்செட், அடுத்த தலைமுறை 5ஜி கனெக்டிவிட்டி உள்ளிட்டவை ஐபோன் 14 மாடலின் அம்சங்கள் ஆகும்.

ரூ. 71 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஐபோன் 14 மாடல் வங்கி சலுகைகளை சேர்த்து ரூ. 66 ஆயிரத்து 359 விலையில் கிடைக்கிறது.

பெரிய ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன் விரும்புவோருக்கு ஐபோன் 14 பிளஸ் மாடல் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் 6.7 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ஐபோன் 14-இல் உள்ளதை போன்ற டூயல் கேமரா சிஸ்டம், அதிகபட்சம் 26 மணி நேர வீடியோ பிளேபேக், ஏ15 பயோனிக் சிப்செட், 5ஜி கனெக்டிவிட்டி, எமர்ஜன்சி SOS அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது கிராஷ் டிடெக்‌ஷன் மூலம் பயனர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து சாதனத்தில் ஏற்கனவே ஸ்டோர் செய்யப்பட்டு இருக்கும் காண்டாக்டிற்கு தகவல் கொடுக்கும்.

ரூ. 94 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஐபோன் 14 பிளஸ் மாடல் ரூ. 74 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது. இதில் வங்கி சலுகைகளும் சேர்க்கப்பட்டுவிட்டது.

மிட் ரேஞ்ச் பிரிவில் கிடைக்கும் அசத்தலான மாடலாக சாம்சங் கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. இதில் 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 1280 ஆக்டா கோர் பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 8MP செல்ஃபி கேமரா, 6000எம்ஏஹெச் பேட்டரி உள்ளது.

ரூ. 17 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது வங்கி சலுகைகள் சேர்த்து ரூ. 14 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது.

iQOO-Z6 Lite 5G

iQOO-Z6 Lite 5G

ஐகூ Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனும் மிட் ரேஞ்ச் பிரிவில் கிடைக்கிறது. இதில் 6.58 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, சூப்பர் நைட் மோட் வசதி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. வழக்கமாக ரூ. 13 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஐகூ Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 12 ஆயிரத்து 499 விலையில் கிடைக்கிறது.

redmi 12c

redmi 12c

பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் பிரிவில் பிரபலமாக அறியப்படும் ரெட்மி 12C மாடல் 6.71 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 50MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா, போர்டிரெயிட் மோட், நைட் மோட், மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. ரூ. 11 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ரெட்மி 12C ஸ்மார்ட்போன் தற்போது வங்கி சலுகைகள் சேர்த்து ரூ. 8 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

ஹத்ராஸ் விபத்து நடந்தது எப்படி?!. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி!..

Published

on

yogi

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் எனும் கிராமத்தில் நேற்று ஒரு இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. பாபா நாராயணன் ஹரி என்கிற சாஹர் விஷ்வஹரி போலே பாபா சாமியார் இந்த விழாவை நடத்தினார். அந்த கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் சிக்கினர். தற்போது வரை 122 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இந்த விழாவில் 80 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது தெரியவந்திருக்கிறது. ஆன்மிக சொற்பொழிவு முடிந்தவுடன் பாபா காரில் ஏறி புறப்பட்டபோது அவரை பின் தொடர்ந்து பலரும் போயிருக்கிறார்கள். அவரின் கார் புறப்பட்டபோது அதன்பின்னால் பலரும் ஓடி இருக்கிறார்கள்.

அதில் பலரும் பாபாவின் காலடி மண்ணை எடுக்க கீழே குனிந்துள்ளனர். அப்போதுதான் கீழே குனிந்தவர்கள் மீது பலரும் ஏறி நடந்துள்ளனர். இதில் சிக்கிய பலரும் மூச்சி முட்டி இறந்திருக்கிறார்கள். மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு அருகே சாக்கடை ஓட்டிக்கொண்டிருந்தது. பக்தர்கள் வேகமாக வெளியேறிய போது பலரும் அதில் விழுந்தார்கள். இப்படித்தான் 121 பேர் இறந்து போயிருக்கிறார்கள். குறிப்பாக இறந்து போனவர்களில் பலரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதிதய்நாத் பார்வையிட்டார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘சொற்பொழிவு முடிந்ததும் போலே பாபாவை நோக்கி மக்கள் முண்டியடித்து சென்றதால் விபத்து ஏற்பட்டது. அவரை நோக்கி மக்கள் சென்றபோது நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். உயிரிழந்த 121 பேரில் 6 பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள்’ என அவர் கூறினார்.

google news
Continue Reading

india

ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா!. ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்..

Published

on

hemanth

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் பதவியில் இருந்தவர் சம்பாய் சோரன். இவர் ராஞ்சியில் உள்ள ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து இன்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார் ஹேமந்த் சோரன்.

சட்ட விரோத பணிவர்த்தனை வழக்கில் சமீபத்தில் ஜாமினில் வெளிவந்தார் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்டின் முதல்வராக மாறவிருக்கிறார். தலைநகர் ராஞ்சியில் ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்தில் ஹேமந்த் சோரனை முதல்வர் பதவியில் அமர வைப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

செய்தியாளர்களிடம் பேசிய சம்பயி சோரன் ‘ கடந்த சில நாட்கள் முதல்வர் பதவியில் இருந்ததால் மாநில நிர்வாக பொறுப்புகளை கவனித்து வந்தேன். தற்போது ஹேமந்த் சோரன் திரும்பி வந்திருப்பதால் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எனவே, நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்’ என கூறினார்.

google news
Continue Reading

india

மேற்கூறையில் இருந்து பிச்சுகிட்டு கொட்டும் தண்ணீர்… ‘வந்தே பாரத்’ ரயிலில் பயணிகள் அவதி… வைரல் வீடியோ…!

Published

on

வந்தே பாரத் ரயிலின் மேற்கூறையிலிருந்து தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அவுதி அடைந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

டெல்லியில் இருந்து வாரணாசி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. ட்ரெயினில் இருந்து தண்ணீர் ஒழுகும் வீடியோ ஒன்றை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் பகிர்ந்த பயணி இது குறித்து புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக வடக்கு ரயில்வே தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது. அதில் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளில் இருந்து இந்த நீர்க்கரசிவு ஏற்பட்டு இருக்கலாம். பயணிகள் சிரமப்பட்டதற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் இதனை சரி செய்ய ஏற்பாடு செய்கிறோம் என்று பதிவிட்டு இருந்தது.

இருப்பினும் ரயிலில் இருந்து நீர் ஒழுகும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இதை பார்த்த நெட்டிஷன்கள் பலரும் ரயில்வே துறையின் அலட்சியத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

google news
Continue Reading

latest news

அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!

Published

on

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பெரம்பலூர், கடலூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், மதுரை, விழுப்புரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். மேற்கு திசை காட்டின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் வரும் ஏழாம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசம்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

google news
Continue Reading

latest news

ஒரே நேரத்தில் அடுத்தடுத்து… கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா… என்னதான் நடக்குது..

Published

on

கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்ததை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்திருக்கின்றார்.

தமிழகத்தில் சென்னை மாநகராட்சியை தொடர்ந்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை. இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இதில் 97 பேர் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள். மூன்று பேர் மட்டுமே அதிமுகவை சேர்ந்தவர்கள். கோவை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த கல்பனா என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர்.

இவரது கணவர் ஆனந்தகுமார் திமுகவில் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகின்றார். மேயர் கல்பனா பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல புகார்கள் எழுந்தது. அது மட்டும் இல்லாமல் கல்பனாவின் அதிகாரத்தில் அவரின் கணவர் ஆனந்தகுமார் தலையிட்டு வருகின்றார். இதன் காரணமாக திமுக கவுன்சிலர் மட்டத்திலும் நிர்வாகிகள் மத்தியிலும் பெரிய அளவுக்கு நம்பிக்கை பெறாததால் திமுக கவுன்சிலர்களே தங்களது எதிர்ப்பை காட்டி வந்தார்கள்.

இதனால் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறியிருந்தார் கல்பனா. இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார். தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியிருக்கின்றார். இந்த கடிதத்தை ஆணையரும் ஏற்றுக்கொண்டார். மேயர் கல்பனா ராஜினாமா செய்தது மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.

இப்படி இருக்க அடுத்த சிறிது நேரத்தில் நெல்லை மேயர் சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார். நெல்லை மாநகராட்சியில் திமுக மேயராக இருந்து வருபவர் பி எம் சரவணன். இவரது தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடத்துவதில் பல பிரச்சினைகள் நிலவிய வந்துள்ளது. சமீபத்தில் மாநகராட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதில் கலந்து கொள்ள திமுக கவுன்சிலர்களே வராத காரணத்தினால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த சூழலில் சென்னை பெயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இன்று கட்சி தலைமையிடம் தனது பதவியை ராஜினாமா செய்வதற்குரிய கடிதத்தை வழங்கி இருக்கின்றார் சரவணன். முதல்வர் மு க ஸ்டாலின்  அறிவுறுத்தலின் பெயரில் தான் ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news
Continue Reading

Trending