Connect with us

latest news

தேதிய குறிச்சுக்கோங்க, ஆஃபர்களை மிஸ் பண்ணிடாதீங்க.. அமேசானில் Smartphone-க்கு இவ்வளவு தள்ளுபடியா?

Published

on

Amazon-Featured-img

இந்திய பயனர்களுக்கு ஜூலை 15 ஆம் தேதி அமேசான் பிரைம் டே விற்பனை துவங்க இருக்கிறது. இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் ஏராளமான சாதனங்கள் மற்றும் பொருட்களுக்கு அதிகப்படியான தள்ளுபடி மற்றும் வங்கி சார்ந்த சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. முந்தைய விற்பனைகளை போன்றே, இந்த முறையும் அமேசான் வழங்க இருக்கும் தள்ளுபடி விவரங்களை அறிவித்து விட்டது.

புதிய சாதனங்களின் சரியான விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், முந்தைய விற்பனைகளை ஒட்டி சிறப்பு சலுகை விவரங்களை ஓரளவுக்கு கணிக்க முடிகிறது. சிற்ப்பு விற்பனை துவங்கும் முன்பு வரை எவ்வளவு சலுகைகள் வழங்கப்பட இருக்கிறது என்பதை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்கள் ரகசியமாக வைத்துக் கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிடுவோர் எனில், ரூ. 20 ஆயிரம், ரூ. 30 ஆயிரம், ரூ. 40 ஆயிரம் மற்றும் ரூ. 50 ஆயிரம் என பல்வேறு விலை பிரிவுகளில் ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர அமேசான் எக்கோ சாதனங்களுக்கும் அசத்தல் சலுகைகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி அமேசான் பிரைம் டே விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு சலுகை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ரியல்மி நார்சோ N53 :

Realme-Narzo-N53

Realme-Narzo-N53

ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு நார்சோ N53 ஸ்மார்ட்போன் சிறப்பான தேர்வாக இருக்கும். ஏற்கனவே இந்த மாடல் ரூ. 8 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படும் நார்சோ N53 மாடலின் விலை மேலும் குறைக்கப்படும் என்று தெரிகிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மாடலை தேர்வு செய்வது நல்லது. இந்த விலை பிரிவில் நார்சோ N53 மாடல் 90Hz ரிப்ரெஷ் ரேட், டூயல் பிரைமரி கேமரா, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் வழங்கப்படுகின்றன.

ஒன்பிளஸ் நார்ட் CE 3 லைட் :

OnePlus-Nord-CE-3-Lite

OnePlus-Nord-CE-3-Lite

ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் நார்டு CE 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி வேரியன்ட் ரூ. 19 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் வங்கி சலுகைகள் மற்றும் எக்சேன்ஜ் சலுகைகள் வழங்கப்படுகிறது. இவற்றை சேர்க்கும் போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16 ஆயிரம் பட்ஜெட்டிலும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

ரெட்மி K50i 5ஜி :

Redmi-K50i-5G

Redmi-K50i-5G

இந்திய சந்தையில் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் ரெட்மி K50i 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக ரெட்மி K50i 5ஜி உள்ளது. இதன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 23 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் பிரைம் டே விற்பனையில் ரூ. 21 ஆயிரத்தில் துவங்கி ரூ. 22 ஆயிரம் வரை குறையும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் வங்கி சலுகைகளும் வழங்கப்பட இருக்கிறது.

ஐகூ 11 :

iQOO-11

iQOO-11

ஐகூ நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக ஐகூ 11 இருக்கிறது. இந்த மாடல் ரூ. 54 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் பிரைம் டே விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 49 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 256 ஜிபி மெமரி, 120 வாட் ஃபிலாஷ் சார்ஜிங் வசதி உள்ளது.

ஐபோன் 14 :

iPhone-14

iPhone-14

இந்திய சந்தையில் ஐபோன் 14 மாடலின் விலை ரூ. 66 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சிறப்பு விற்பனையின் போது இந்த மாடல் விலை ரூ. 60 ஆயிரத்திற்கும் குறைவாக கிடைக்கும் என்று தெரிகிறது. சிறப்பு விற்பனை காலத்தில் ஐபோன்கள் விரைவிந்து தீர்ந்து போவது வாடிக்கையான காரியம் ஆகும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

குடிச்சிட்டு வந்து அலும்பா பண்ற… மனைவி செய்த காரியத்தால் பதறிய கணவன்!

Published

on

By

மனைவி தனது கை, கால்களைக் கட்டிவிட்டு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக தெலங்கானாவில் கணவர் ஒருவர் போலீஸில் புகார் கொடுத்த சம்பவம் நடந்திருக்கிறது.

தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத்தை அடுத்த மச்சிப்பா தண்டா பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதையறிந்து மகேஷின் குடும்பத்தினரும் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அவரிடம் அறிவுறுத்தவும் செய்திருக்கிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்குப் போன மகேஷ் மனைவியை அடிக்கத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவரின் மனைவி மகேஷை வீட்டில் கட்டி வைத்திருக்கிறார். கை, கால்களை பிணைத்து வைத்ததுடன், அடுப்பில் எரிந்துகொண்டிருந்த கட்டை ஒன்றை எடுத்து வந்து உடலின் பல இடங்களிலும் சூடு வைத்ததாக சொல்லப்படுகிறது.

இதில், காயமடைந்த மகேஷூக்கு அவரின் மனைவியே மருந்தும் போட்டு பராமரித்து வந்திருக்கிறார். இரண்டு நாட்களில் காயம் சிறிது ஆறிய நிலையில் நிஸாமாபாத் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மகேஷ், நடந்த விஷயங்களைச் சொல்லி மனைவி மீது புகார் அளித்திருக்கிறார்.

google news
Continue Reading

india

பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை!. அரசு அதிரடி அறிவிப்பு!..

Published

on

women

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு மாத மாதம் உரிமைத்தொகை கொடுப்போம் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்தது. அதன்பின் அதே வாக்குறுதியை திமுகவும் கொடுத்தது. தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

எனவே, தகுதியான பெண்களுக்கு மாதம் உரிமைத்தொகையாக ரூ.1000 கொடுக்கப்படும் என திமுக அரசு சொன்னது. சொன்னபடியே தற்போது அந்த திட்டம் நடைமுறையிலும் இருக்கிறது. இந்நிலையில், தமிழக அரசை பார்த்து தற்போது அண்டை மாநிலங்களும் இந்த திட்டத்தை முன் வைத்து பிரச்சாரங்கள் செய்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா அரசும் பெண்களுக்கு மாதா மாதம் நிதியுதவி அளிக்கப்படும் என கூறியிருக்கிறது. 21 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1500 உதவித்தொகையாக கொடுக்கப்படும் என அந்த மாநில அரசு பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது.

அந்த மாநிலத்தில் வருகிற அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில்தான் நிதியமைச்சர் அஜித் பவார் 2024-25 நிதியாண்டுக்காண பட்ஜெட்டில் இதை அறிவித்திருக்கிறார். மேலும், 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு வருடத்திற்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக கொடுக்கப்படும் எனவும் மின்சார கட்டன்ணம் செலுத்தாத 44 லட்சம் விவசாயிகளின் மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அவர் அறிவித்தார். அதோடு, அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு 50 சதவீத கட்டணம் சலுகை எனவும் அஜித் பவார் அறிவித்திருக்கிறார்.

google news
Continue Reading

latest news

இந்தியாவில் 80 சதவீத கணக்கு வாத்தியார்களுக்கு இது தெரியவே தெரியாதாம்… வெளியான ஷாக் தகவல்!..

Published

on

By

பொதுவாக மாணவ, மாணவிகளுக்கு ரொம்பவே கஷ்டமான பாடம் என்றால் கணிதம் தான். ஆனால் அந்த கணித ஆசிரியர்களே சொதப்பி இருக்கும் விஷயம் வெளியாகி இருக்கிறது. 80 சதவீத ஆசிரியர்களுக்கு அடிப்படை கேள்விகளுக்கு பதில் தெரியாது என்ற ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.

தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் சவுதி அரேபியாவில் இருக்கும் 1300க்கு மேற்பட்ட கணித ஆசிரியர்களிடம் ஆய்வு நடத்தியது. அது தொடர்ந்து அந்நிறுவனம் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இருக்கும் 80 சதவீத கணித ஆசிரியர்களுக்கு இயற்கணிதம் தொடர்பான கேள்விகளுக்கு கூட பதில் தெரியவில்லையாம். பெரும்பாலும் நான்காம் வகுப்பு கேள்விகளுக்கு 73.3 சதவீத ஆசிரியர்கள் பதில் அளித்துள்ளனர். ஆனால் ஏழாம் வகுப்புகளின் கேள்விகளுக்கு 36.7 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பதிலளித்தனர்.

ஜியோமெட்ரி குறித்த கேள்விகளின் அடிப்படைக்கு கூட 32.9 சதவீத ஆசிரியர்கள் தவறாக பதில் அளித்து இருக்கின்றனர். தசம எண்கள் குறித்த கேள்விகளை கூட சரியாக பதில் கொடுக்க முடியாமல் பல ஆசிரியர்கள் திணறி இருக்கின்றனர். இதுகுறித்த அறிக்கை தற்போது பெற்றோர் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.

google news
Continue Reading

latest news

மகனை சுற்றி வளைத்த நாய்கள்… ஒரு நொடியில் தந்தை செய்த செயல்… வைரலாகும் வீடியோ…

Published

on

By

தெருநாய்கள் கணிக்க முடியாத அளவில் சில நேரங்களில் அதிர்ச்சி கொடுக்கும். சிலரை கடித்து குதறி பதற வைக்கும். இதில் நிறைய குழந்தைகள் சமீபகாலமாகவே நாய் கடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அப்படி நடக்க இருந்த ஒரு சம்பவத்தினை சில நொடிகளில் மாற்றி இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

கோயமுத்தூர் வெள்ளலூர் மகாபலிபுரத்தினை சேர்ந்த ஒருவர். தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் வந்து வீட்டில் நிறுத்துகிறார். தன்னுடைய மகனை கீழே இறக்கிவிட்டு வீட்டுக்குள் சென்று விடுகிறார். அங்கு நின்று இருந்த மகனை 4 தெருநாய்கள் சுற்றி வளைத்தது.

சின்ன பையனும் கொஞ்சமும் பதறாமல் அருகில் இருந்த கல்லை எடுத்து தூக்கி எறிகிறார். ஆனாலும் நாய்கள் அசராமல் அவரை சுற்றி வளைத்தது. பையனும் பயத்தில் கதற தொடங்கிவிடுகிறார். சத்தம் கேட்டு வெளியில் வந்த தந்தை யோசிக்காமல் துரிதமாக செயல்பட்டு மகனை நாய்களிடம் இருந்து மீட்டார்.

சிசிடிவியில் பதிவான அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மாநகராட்சிகள் தெருநாய்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தற்போது கோரிக்கை தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.

இதையும் படிங்க: ரெண்டு கேக், 4 கிளாஸ் ஃப்ரூட் ஜூஸ் ரூ.1.22 லட்சமா?…. டேட்டிங் மோசடியால் மிரண்ட இளைஞர்!

 

அந்த வீடியோவைக் காண: https://x.com/rajtweets10/status/1806959346787443019

 

google news
Continue Reading

india

ரெண்டு கேக், 4 கிளாஸ் ஃப்ரூட் ஜூஸ் ரூ.1.22 லட்சமா?…. டேட்டிங் மோசடியால் மிரண்ட இளைஞர்!

Published

on

By

ஆன்லைன் டேட்டிங் செயலியான டிண்டரில் சந்தித்த பெண்ணை சந்திக்கச் சென்ற டெல்லி இளைஞர் ஒருவர் மோசடியால் ரூ.1.21 லட்சத்தை இழந்த சம்பவம் நடந்திருக்கிறது.

யுபிஎஸ்இ தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்கிற துடிப்போடு டெல்லியில் படித்து வருபவர் அந்த இளைஞர். டேட்டிங்கில் ஆர்வம் கொண்ட அவர் டிண்டர் செயலியில் வர்ஷா என்கிற இளம்பெண்ணைப் பார்த்திருக்கிறார். சில மாதங்களாக இருவரும் பேசிக்கொண்ட நிலையில், கடந்த 23-ம் தேதி அந்தப் பெண்ணின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக டெல்லியின் விகாஸ் மார்க் பகுதியில் உள்ள பிளாக் மிரர் கஃபேவில் சந்தித்திருக்கிறார்கள்.

கஃபேவில் கேக் வெட்டி கொண்டாடிய பிறகு அந்தப் பெண் பழரசம் ஆர்டர் செய்து குடித்திருக்கிறார். சிறிதுநேரத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு திடீரென உடல்நிலை மோசமானதாகச் சொல்லிவிட்டு இடத்தை காலி செய்திருக்கிறார். அந்தப் பெண் சென்ற சிறிது நேரத்திலேயே கஃபே சார்பில் அவருக்கு ரூ.1,21,917.70 பில் கொடுத்திருக்கிறார்கள். என்னடா இது நாம் சாப்பிட்ட கேக்குக்கும் பழரசத்துக்கும் அதிகபட்சம் சில ஆயிரங்கள்தானே ஆகும் என்று அவர் அதிர்ச்சியான நிலையில், மிரட்டி அவரிடம் இருந்து பணத்தைப் பறித்திருக்கிறார்கள்.

பணத்தைக் கொடுத்துவிட்டு அவசரமாக வெளியேறிய அவர் நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுத்திருக்கிறார். போலீஸ் அந்த கஃபே உரிமையாளரான அக்‌ஷய் பாவாவை கைது செய்து விசாரித்ததில் இந்த கும்பலின் மோசடி அம்பலமானது. டெல்லி சுற்றுவட்டாரத்தில் டேட்டிங்கில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களைக் குறிவைத்து அஃப்சன் பிரவீன் என்பவர் பெண்களின் பெயரில் வலைவீசி பேசுவதும், பின்னர் நேரில் சந்திக்கவும் தூண்டுவாராம்.

நேரில் சந்திக்க வரும் நபரை சந்திக்க வேறொரு பெண்ணை அனுப்புவார்களாம். இதேபோல், அவசரம் என்று சொல்லி பாதியிலேயே அந்தப் பெண் நழுவிவிட குறிப்பிட்ட நபரிடம் மிரட்டி பணம் பறிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பறிக்கப்படும் மொத்தப் பணத்தில் அந்தப் பெண்ணுக்கு 15%, அஃப்சன் உள்ளிட்ட கஃபேவில் பணியாற்றும் நபர்களுக்கு 45% மற்றும் கஃபே உரிமையாளருக்கு 40% என பகிர்ந்துகொண்டதும் தெரியவந்திருக்கிறது.

google news
Continue Reading

Trending