ஆப்பிள் நிறுவனம் தனது Back-to-School ஆஃபர்களை அறிவித்து இருக்கிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து இந்த சலுகைகளை ஆப்பிள் நீண்ட காலமாக வழங்கி வருகிறது.
அந்த வரிசையில், தற்போது கல்லூரி மாணவர்கள் படிப்பை துவங்க இருப்பதை முன்னிட்டு ஆப்பிள் மீண்டும் இந்த Back-to-School ஆஃபர்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் கல்லூரி மாணவர்கள் மேக் சாதனத்தை வாங்கும் போது ஏர்பாட்ஸ்-ஐ இலவசமாகவும், ஐபேட் வாங்கும் போது ஆப்பிள் பென்சிலையும் இலவசமாக வாங்கிட முடியும்.
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த சிறப்பு விற்பனையின் போது ஆப்பிள் சாதனங்களை குறுகிய கால தள்ளுபடி விலையில் வாங்கிட முடியும். இதோடு ஆப்பிள் கேர் பிளஸ் சேவையை 20 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்கிடலாம்.
கூடுதலாக மாணவர்கள் தங்களது பழைய ஆப்பிள் சாதனங்களை எக்சேஞ்ச் செய்து புதிய சாதனங்களை வாங்கும் போது வட்டியில்லா மாத தவணை முறை வசதியை பெற முடியும். இந்த சலுகை அதிகபட்சம் 24 மாதங்கள் வரையிலான மாத தவணைகளுக்கு மட்டும் பொருந்தும்.
சிறப்பு சலுகைகள் தவிர ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஸ்டோர் மையங்களில் மாணவர்கள் எந்த லேப்டாப்-ஐ தேர்வு செய்வது என்பதை விளக்கும் சிறப்பு ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறது. இதே போன்ற சேவையை ஆப்பிள் நிறுவனம் ஆன்லைனிலும் வழங்குகிறது.
இதில் மாணவர்கள் ஆப்பிள் வல்லுநர்களை தொடர்பு கொண்டு சிறப்பு வசதிகள், அம்சங்கள் மற்றும் செயலிகள் பற்றி அறிந்து கொள்வது மற்றும் தங்களுக்கு தேவையான சாதனங்களை அவர்களது பட்ஜெட்டில் வாங்குவதற்கு ஆலோசனை பெற முடியும்.
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…
அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…