latest news
ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள்!
![Best-Phones - Cinereporters Info Best-Phones](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/Best-Phones.jpg)
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. அந்த வரிசையில், இந்த ஆண்டின் அரையாண்டு கட்டம் நிறைவுற்று வருவிருக்கிறது. ஆண்டு துவக்கம் முதலே பல்வேறு பிரிவுகளில் புதிய ஸ்மார்ட்போன்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
அந்த வகையில் 2023 ஆண்டு இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களில் சிறந்த மாடல்கள் எவை என்பதை இந்த தொகுப்பில் காணலாம். ரூ. 15 ஆயிரத்தில் துவங்கி ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான விலை பிரிவுகளில் கிடைக்கும் தலைசிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் எவை என்று தொடர்ந்து பார்ப்போம்.
ரூ. 15 ஆயிரத்திற்குள் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் :
![Samsung-Galaxy-M14-5G - Cinereporters Info Samsung-Galaxy-M14-5G](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/Samsung-Galaxy-M14-5G.jpg)
Samsung-Galaxy-M14-5G
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M14 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் எனும் பெருமையை பெற்று இருக்கிறது. இதில் உள்ள 90Hz LCD ஸ்கிரீன், FHD+ டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 1330 பிராசஸர், கிட்டத்தட்ட 12 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் வசதி, 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் இதனை சிறந்த 5ஜி ஸ்மார்ட்போனாக மாற்றியிருக்கிறது.
ரூ. 25 ஆயிரத்திற்குள் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் :
![Poco-X5-Pro-5G - Cinereporters Info Poco-X5-Pro-5G](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/Poco-X5-Pro-5G.jpg)
Poco-X5-Pro-5G
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டற்குள் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக போக்கோ X5 ப்ரோ 5ஜி இருக்கிறது. இதில் 108MP பிரைமரி கேமரா, சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், 120Hz HDR 10+ டிஸ்ப்ளே, டால்பி விஷன் சப்போர்ட், IP53 சான்று பெற்ற வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை இதனை ரூ. 25 ஆயிரம் பட்ஜெட்டில் சிறந்த தேர்வாக மாற்றுகிறது.
ரூ. 40 ஆயிரத்திற்குள் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் :
![OnePlus-11R-5G - Cinereporters Info OnePlus-11R-5G](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/OnePlus-11R-5G.jpg)
OnePlus-11R-5G
ஒன்பிளஸ் 11R 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 39 ஆயிரத்து 999 எனும் துவக்க விலையில் கிடைக்கிறது. இதில் உள்ள ஃபிளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிவேக 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 6.74 இன்ச் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 12 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் போன்ற அம்சங்கள் அசத்தலான ஸ்மார்ட்போன் அனுபவத்தை ஓரளவுக்கு குறைந்த விலையில் வழங்குகிறது,.
ரூ. 60 ஆயிரத்திற்குள் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் :
![OnePlus-11-5G - Cinereporters Info OnePlus-11-5G](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/OnePlus-11-5G.jpg)
OnePlus-11-5G
ஃபிளாக்ஷிப் பிரிவில் சிறந்த ஸ்மார்ட்போனினை சற்று குறைந்த விலையில் வாங்க நினைக்கும் பட்சத்தில் ஒன்பிளஸ் 11 5ஜி மாடல் சிறப்பான தேர்வாக இருக்கும். இந்திய சந்தையில் ரூ. 56 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன், அதன் விலைக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் பெரும்பாலும் ரூ. 80 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சம் விலை கொண்ட மாடல்களில் வழங்கப்படுகிறது.
மெல்லிய அழகான டிசைன் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் 120Hz AMOLED டிஸ்ப்ளே, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் ஃபாஸ்ட் சார்சிங் வசதி, ஆக்சிஜன்ஒஎஸ் 13, குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படுகிறது.
சிறந்த பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் :
தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் ஐபோன் 14 ப்ரோ மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி எனலாம். எனினும், இந்த ஆண்டு அறிமுகமான மாடல்களில் ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்ய விரும்புவோருக்கு கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி மாடல் சிறந்த தேர்வாக இருக்கும்.
![Samsung-Galaxy-S23-Ultra-5G - Cinereporters Info Samsung-Galaxy-S23-Ultra-5G](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/Samsung-Galaxy-S23-Ultra-5G-1.jpg)
Samsung-Galaxy-S23-Ultra-5G
இதில் உள்ள அசத்தலான AMOLED டிஸ்ப்ளே, சிறந்த கேமரா சென்சார்கள், டிசைன் மற்றும் S பென் இன்டகிரேஷன் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 2 பிராசஸர் உள்ளிட்டவை கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி மாடலை சிறந்த மாடலாக மாற்றி இருக்கிறது. வழங்கப்பட்டு இருக்கிறது. பட்ஜெட் பெரிய விஷயம் இல்லை என்போருக்கு இந்த மாடல் சிறப்பான ஆப்ஷன் எனலாம்.
![](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/info-4.png)
india
ஹத்ராஸ் விபத்து நடந்தது எப்படி?!. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி!..
![yogi - Cinereporters Info yogi](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/yogi.jpg)
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் எனும் கிராமத்தில் நேற்று ஒரு இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. பாபா நாராயணன் ஹரி என்கிற சாஹர் விஷ்வஹரி போலே பாபா சாமியார் இந்த விழாவை நடத்தினார். அந்த கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் சிக்கினர். தற்போது வரை 122 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இந்த விழாவில் 80 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது தெரியவந்திருக்கிறது. ஆன்மிக சொற்பொழிவு முடிந்தவுடன் பாபா காரில் ஏறி புறப்பட்டபோது அவரை பின் தொடர்ந்து பலரும் போயிருக்கிறார்கள். அவரின் கார் புறப்பட்டபோது அதன்பின்னால் பலரும் ஓடி இருக்கிறார்கள்.
அதில் பலரும் பாபாவின் காலடி மண்ணை எடுக்க கீழே குனிந்துள்ளனர். அப்போதுதான் கீழே குனிந்தவர்கள் மீது பலரும் ஏறி நடந்துள்ளனர். இதில் சிக்கிய பலரும் மூச்சி முட்டி இறந்திருக்கிறார்கள். மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு அருகே சாக்கடை ஓட்டிக்கொண்டிருந்தது. பக்தர்கள் வேகமாக வெளியேறிய போது பலரும் அதில் விழுந்தார்கள். இப்படித்தான் 121 பேர் இறந்து போயிருக்கிறார்கள். குறிப்பாக இறந்து போனவர்களில் பலரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதிதய்நாத் பார்வையிட்டார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘சொற்பொழிவு முடிந்ததும் போலே பாபாவை நோக்கி மக்கள் முண்டியடித்து சென்றதால் விபத்து ஏற்பட்டது. அவரை நோக்கி மக்கள் சென்றபோது நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். உயிரிழந்த 121 பேரில் 6 பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள்’ என அவர் கூறினார்.
india
ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா!. ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்..
![hemanth - Cinereporters Info hemanth](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/hemanth.jpg)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் பதவியில் இருந்தவர் சம்பாய் சோரன். இவர் ராஞ்சியில் உள்ள ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து இன்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார் ஹேமந்த் சோரன்.
சட்ட விரோத பணிவர்த்தனை வழக்கில் சமீபத்தில் ஜாமினில் வெளிவந்தார் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்டின் முதல்வராக மாறவிருக்கிறார். தலைநகர் ராஞ்சியில் ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்தில் ஹேமந்த் சோரனை முதல்வர் பதவியில் அமர வைப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
செய்தியாளர்களிடம் பேசிய சம்பயி சோரன் ‘ கடந்த சில நாட்கள் முதல்வர் பதவியில் இருந்ததால் மாநில நிர்வாக பொறுப்புகளை கவனித்து வந்தேன். தற்போது ஹேமந்த் சோரன் திரும்பி வந்திருப்பதால் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எனவே, நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்’ என கூறினார்.
india
மேற்கூறையில் இருந்து பிச்சுகிட்டு கொட்டும் தண்ணீர்… ‘வந்தே பாரத்’ ரயிலில் பயணிகள் அவதி… வைரல் வீடியோ…!
![train 2 - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/train-2.jpg)
வந்தே பாரத் ரயிலின் மேற்கூறையிலிருந்து தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அவுதி அடைந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
டெல்லியில் இருந்து வாரணாசி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. ட்ரெயினில் இருந்து தண்ணீர் ஒழுகும் வீடியோ ஒன்றை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் பகிர்ந்த பயணி இது குறித்து புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக வடக்கு ரயில்வே தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது. அதில் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளில் இருந்து இந்த நீர்க்கரசிவு ஏற்பட்டு இருக்கலாம். பயணிகள் சிரமப்பட்டதற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் இதனை சரி செய்ய ஏற்பாடு செய்கிறோம் என்று பதிவிட்டு இருந்தது.
भारत की टॉप मोस्ट पैसेंजर ट्रेनों में एक वंदेभारत देखिए. छत से पानी टपक रहा है. दिल्ली-वाराणसी ट्रैक है और ट्रेन नंबर है 22416. pic.twitter.com/OoPiKbkQOr
— Sachin Gupta (@SachinGuptaUP) July 2, 2024
இருப்பினும் ரயிலில் இருந்து நீர் ஒழுகும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இதை பார்த்த நெட்டிஷன்கள் பலரும் ரயில்வே துறையின் அலட்சியத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
latest news
அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!
![Chance of rain in 12 districts - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/Chance-of-rain-in-12-districts.jpg)
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பெரம்பலூர், கடலூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், மதுரை, விழுப்புரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். மேற்கு திசை காட்டின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் வரும் ஏழாம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசம்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.
latest news
ஒரே நேரத்தில் அடுத்தடுத்து… கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா… என்னதான் நடக்குது..
![meyar - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/meyar.jpg)
கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்ததை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்திருக்கின்றார்.
தமிழகத்தில் சென்னை மாநகராட்சியை தொடர்ந்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை. இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இதில் 97 பேர் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள். மூன்று பேர் மட்டுமே அதிமுகவை சேர்ந்தவர்கள். கோவை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த கல்பனா என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர்.
இவரது கணவர் ஆனந்தகுமார் திமுகவில் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகின்றார். மேயர் கல்பனா பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல புகார்கள் எழுந்தது. அது மட்டும் இல்லாமல் கல்பனாவின் அதிகாரத்தில் அவரின் கணவர் ஆனந்தகுமார் தலையிட்டு வருகின்றார். இதன் காரணமாக திமுக கவுன்சிலர் மட்டத்திலும் நிர்வாகிகள் மத்தியிலும் பெரிய அளவுக்கு நம்பிக்கை பெறாததால் திமுக கவுன்சிலர்களே தங்களது எதிர்ப்பை காட்டி வந்தார்கள்.
இதனால் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறியிருந்தார் கல்பனா. இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார். தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியிருக்கின்றார். இந்த கடிதத்தை ஆணையரும் ஏற்றுக்கொண்டார். மேயர் கல்பனா ராஜினாமா செய்தது மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.
இப்படி இருக்க அடுத்த சிறிது நேரத்தில் நெல்லை மேயர் சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார். நெல்லை மாநகராட்சியில் திமுக மேயராக இருந்து வருபவர் பி எம் சரவணன். இவரது தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடத்துவதில் பல பிரச்சினைகள் நிலவிய வந்துள்ளது. சமீபத்தில் மாநகராட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதில் கலந்து கொள்ள திமுக கவுன்சிலர்களே வராத காரணத்தினால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த சூழலில் சென்னை பெயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இன்று கட்சி தலைமையிடம் தனது பதவியை ராஜினாமா செய்வதற்குரிய கடிதத்தை வழங்கி இருக்கின்றார் சரவணன். முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பெயரில் தான் ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Cricket1 day ago
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூர்யகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை – உண்மை இதுதான்!
-
india2 days ago
தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பேருந்துகள்….? சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!
-
latest news2 days ago
மாணவர்களின் கவனத்திற்கு…! நாளை முதல் ஜூலை 5-ம் தேதி வரை.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..
-
tech news2 days ago
ஓவராகும் ஓடிடி மோகம்… சப்ஸ்கிரிப்ஷனில் பெத்த தொகையை சேமிக்க சூப்பர் டிப்ஸ்…
-
Cricket13 hours ago
என்னையவா கலாய்ச்சீங்க… டி20ல் முதல் இந்திய வீரராக ஹர்திக் பாண்டியா செய்த சாதனை…
-
Cricket2 days ago
உலகிலேயே அதிகம் பகிரப்பட்ட இன்ஸ்டா போஸ்ட்… இது கோலி கில்லா!..
-
tech news1 day ago
ரூ. 1000 கோடி பட்ஜெட்.. சென்னையில் கேப்ஜெமினியின் புது ஆஃபீஸ்
-
latest news20 hours ago
வார இறுதி நாட்கள்… தமிழக முழுவதும் 5-ம் தேதி முதல் சிறப்பு பேருந்து… வெளியான அறிவிப்பு…!