Connect with us

latest news

ஒன்பிளஸ் முதல் சாம்சங் வரை.. ரூ. 45 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!

Published

on

best phone under 40000

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அடிக்கடி புது ஸ்மார்ட்போன்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. முன்னணி நிறுவனங்கள் சீரான இடைவெளியில் புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருவதை அடுத்து வாடிக்கையாளர்கள் எந்த மாடலை தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அந்த வகையில், சிறந்த மொபைல்கள் பட்டியலை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ள முடியும்.

இந்திய சந்தையில் ரூ. 45 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் சிறந்த மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

ஒன்பிளஸ் 11R | விலை ரூ. 44 ஆயிரத்து 999 :

one plus 11r

ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய மிட்-ரேன்ஜ் மாடல் தான் ஒன்பிளஸ் 11R. இதில் 6.74 இன்ச் 1240×2772 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP+2MP லென்ஸ், எல்.இ.டி. ஃபிலாஷ், 16MP செல்ஃபி கேமரா உள்ளது. 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 11R, 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

ஐகூ 9 ப்ரோ 5ஜி | ரூ. 44 ஆயிரத்து 999 :

iqoo 9 pro

ஐகூ நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் தர ஐகூ 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் 6.78 இன்ச் AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 4700 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் ஃபிலாஷ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 50MP+ 16MP லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

சியோமி 12 ப்ரோ 5ஜி | ரூ. 42 ஆயிரத்து 390 :

xiaomi 12 pro

சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் 6.73 இன்ச் AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP வைடு ஆங்கில் பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 50MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

கூகுள் பிக்சல் 6 ப்ரோ | விலை ரூ. 41 ஆயிரத்து 640 :

google pixel 6 pro

கூகுள் நிறுவனம் 2021 அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த டாப் என்ட் ஃபிளாக்‌ஷிப் மாடல் தான் பிக்சல் 6 ப்ரோ. தற்போது ரூ. 41 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் பிக்சல் 6 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் P-OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, 5003 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி S20 FE 5ஜி | விலை ரூ. 29 ஆயிரத்து 990 :

samsung galaxy s20 fe

குவால்காம் நிறுவனத்தின் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் கேலக்ஸி S20 FE 5ஜி 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 4500 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆப்டிக்கல் கைரேகை சென்சார், டூயல் சிம் 5ஜி வசதி, 12MP வைடு ஆங்கில் பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 8MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

latest news

அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Published

on

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. நேற்று இரவு சென்னையில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது: “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மலையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continue Reading

india

2024-25 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்… தேதியை அறிவித்த மத்திய அரசு…!

Published

on

2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற ஜூலை 23ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றார். வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்துல நடைபெற இருக்கின்றது.

ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 3-வது முறையாக பிரதமரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

Continue Reading

india

மனிதர்களுக்கு வரப்போகும் பேராபத்து… பூமியை தாக்க வரும் ராட்சச விண்கல்… எச்சரிக்கும் இஸ்ரோ தலைவர்…!

Published

on

ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வருகிற 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி பூமியை தாக்கும் என கூறப்படுகின்றது.

விண்கல் பூமியை தாக்கும் அபாயம் குறித்து ஆராய்ச்சி இடங்கள் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும் இன்னும் 16 வருடங்களில் சரியாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி அந்த விண்கல் பூமியை தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தனர்.

இதிலிருந்து தற்காத்துக் கொள்ள போதுமான பாதுகாப்பு இன்னும் நாம் ஏற்படுத்தவில்லை என்று கூறுகிறது.  இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கின்றார் அதில் அவர் கூறியிருந்ததாவது அபோபிஸ் என் ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வரும் 2029 ஏப்ரல் 13ஆம் தேதி பூமியை கடக்கும் என கண்காணிக்கப்படுகின்றது.

இந்த விண்கல் மீண்டும் 2036 ஆம் ஆண்டு பூமியை தாக்கலாம். 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமியை தாக்கும்போது மனித குலத்துக்கு அதிகம் ஆபத்து ஏற்படும். வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவு நடந்துள்ளது. எனவே இது ஏற்படாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. பூமிக்கு எதுவும் ஆகக்கூடாது என்று தான் நாமும் விரும்புகிறோம். ஆனால் நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது.  அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. அதை எதிர் கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.

Continue Reading

india

திருமணமாகி இரண்டே வருடம்.. கணவன், மாமியார், நாத்தனார் என குடும்பமாக… ஐடி பெண் ஊழியர் எடுத்த விபரீத முடிவு..!

Published

on

கூடுதல் வரதட்சணை கேட்டு குடும்பமே கொடுமை செய்த காரணத்தால் ஐடி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.

விஜயநகர் மாவட்டம் சுசலஹல்லி பசப்புரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பூஜா. இவர் படித்து முடித்துவிட்டு ஐடியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் சுனில் என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு பிறகு பெங்களூரில் கங்கமணக்குடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் வசித்து வந்தார்கள் .

திருமணத்தின் போது சுனில் பூஜா குடும்பத்திடம் ஏகப்பட்ட வரதட்சனை கேட்டிருந்தார். அது அனைத்தையும் அவர்கள் கொடுத்துதான் திருமணம் செய்திருந்தார்கள். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் கடந்த சில மாதங்களாக சுனில் தனது மனைவி பூஜாவிடம் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தி வந்திருக்கின்றார். ஆனால் பூஜா வரதட்சணை கொடுக்க முடியாது என்று மறுத்து இருக்கின்றார்.

இதன் காரணமாக இந்த தம்பதிகளிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கணவர் மட்டும் இல்லாமல் தாய் மற்றும் சகோதரி என அனைவரும் குடும்பமாக சேர்ந்து அவரை கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கின்றார் பூஜா. இது குறித்து தனது பெற்றோரிடமும் பூஜா தெரிவித்திருக்கின்றார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூஜா தனது அறையில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் பூஜாவின் குடும்பத்தினர் சுனில் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.

Continue Reading

latest news

வாரம் ரூ.20,000… அன்பு மனைவியின் சிகிச்சை… கடைசியில் கேரள தம்பதி எடுத்த விபரீத முடிவு…!

Published

on

கடன் பிரச்சனையால் சிக்கி தவித்து வந்த கேரளாவை சேர்ந்த தம்பதிகள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரிஜு விஜயன். இவரின் மனைவி பிரியா நாயர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரியா நாயருக்கு மூளை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்கள். மேல் சிகிச்சைக்காக மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு வந்து வாடகை வீடு எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்கள்.

வாரம் ஒன்றுக்கு 20 ஆயிரம் வரை சிகிச்சைக்காக செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் பலரிடமும் கடன் வாங்கி வைத்திருந்தார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பலரும் அவரிடம் கடனை திருப்பி கேட்க தொடங்கியுள்ளனர். கடந்த ஜூலை 1ஆம் தேதி கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த தம்பதி நேற்று முன்தினம் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Continue Reading

Trending

Exit mobile version