Categories: tech news

இது புதுசா இருக்குங்க.. பணம் கேட்டால், போட் வாட்ச் காட்டுங்க..!

போட் நிறுவன ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்துவோர் இனி, எளிதில் பணம் செலுத்தலாம். நாடு முழுக்க பாயின்ட்-ஆஃப்-சேல் (POS) முனையங்களில் பயனர்கள் போட் வாட்ச் அணிந்திருந்தால், அதை கொண்டே எளிதில் பணம் செலுத்தலாம். இதற்கு அவர்கள் டேப் அன்ட் பே வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பான அறிவிப்பு குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2024 நிகழ்வில் வெளியானது.

அதன்படி போட் நிறுவனம் மாஸ்டர்கார்டு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து புதுவித பணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்கிறது. கூட்டணியின் படி, ஆதரவு தரும் வங்கிகளின் மாஸ்டர்கார்டு பயன்படுத்துவோர் தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை கொண்டு இந்த வசதியில் பயன்பெற முடியும். இதற்கான வசதி போட் அதிகாரப்பூர்வ செயலியின் மூலம் வழங்கப்படுகிறது. இதனை மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் டொகன்முறை மூலம் பாதுகாக்கப்படுகிறது.

பேமன்ட் வசதி கொண்ட போட் ஸ்மார்ட்வாட்ச்களை கொண்டு பாயின்ட்-ஆஃப்-சேல் முனையங்களில் பயனற்கள் டேப்-அன்ட்-பே முறையில் பணம் செலுத்த முடியும் என்று போட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சம் ரூ. 5,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு கடவுச்சொல் பதிவிட வேண்டிய அவசியமும் இல்லை. மாஸ்டர்கார்டின் டிவைஸ் டொகனைசேஷன் திறன் மற்றும் க்ரிப்டோகிராம்களால் இந்த பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக கையாளப்பட உள்ளன.

“மாஸ்டர்கார்டு உடன் எங்களது கூட்டணி மூலம் புதுவித கான்டாக்ட்லெஸ் பேமன்ட் முறைகளை விரும்பும் அதிகளவு நுகர்வோரை எங்களால் பெற முடியும்,” என போட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சமீர் மேத்தா தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னணி வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தும் மாஸ்டர்கார்டு பயனர்களுக்கு இந்த வசதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற வங்கிகளுக்கும் இந்த சேவை காலப்போக்கில் விரிவுப்படுத்தப்படும். இந்தியாவில் அணியக்கூடிய சாதனங்கள் பயன்பாடு 34 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளதைத் தொடர்ந்து இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது.

Web Desk

Recent Posts

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 mins ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

10 mins ago

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…

31 mins ago

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…

1 hour ago

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

21 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

22 hours ago