Categories: latest newstech news

சாட்ஜி.பி.டி. மற்றும் இயர்பட்ஸ் உதவியுடன் காப்பியடித்த தேர்வர்கள் – வசமாக தட்டித்தூக்கிய அதிகாரிகள்!

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகளவில் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. அதநவீன தொழில்நுட்ப சேவையாக உருவெடுத்து இருக்கும் ஏ.ஐ. டூல்கள் மெல்ல அதன் திறன்களை வெளிப்படுத்துவது, மக்களிடையே வரவேற்பையும், பெரும் பீதியையும் ஏற்படுத்தி வருகிறது. ஏ.ஐ. சார்ந்த சேவைகள் நன்மையை கடந்து, தீய செயல்களுக்கு பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துக் கொண்டே போவது பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவில் பொது தேர்வில் சாட்ஜி.பி.டி. என்ற ஏ.ஐ. சாட்பாட் மற்றும் ப்ளூடூத் இயர்பட்ஸ் மூலம் காப்பியடித்த தேர்வர்கள் வசமாக சிக்கியுள்ளனர். இந்த அம்சம் தெலுங்கானா மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது. முன்னதாக தெலுங்கானா மாநில அரசு பணியாளர்கள் தேர்வு வாரியம் நடத்திய தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது தான், தெலுங்கானா அரசு பணியாளர்கள் தேர்வு வாரிய தேர்வில் கலந்து கொண்டவர்கள் சாட்ஜி.பி.டி. மற்றும் ப்ளூடூத் இயர்பட்ஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்தியது அம்பலமாகி இருக்கிறது. அரசு பணியாளர் தேர்வு வாரிய தேர்வின் வினாத்தாள் வெளியான வழக்கை சிறப்பு புலனாய்வு படையினர் விசாரித்து வருகின்றனர்.

#Artificial-Intelligence-

புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையில் துணை நிலை பொறியாளர் மற்றும் துணை கணக்கர் பதவிகளுக்கான தேர்வில் சாட்.ஜி.பி.டி. ஏ.ஐ. டூல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடையை ப்ளூடூத் இயர்பட்ஸ் மூலம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இத்தகைய அதிநவீன தொழில்நுட்பம் மூலம் தேர்வில் முறைகேடு செய்யப்பட்ட சம்பவம் நாட்டிலேயே முதல் முறையான ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய பூலா ரமேஷ் என்ற நபரை சிறப்பு புலனாய்வு படையினர் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில், தேர்வர்களுக்கு சாட்ஜி.பி.டி. மூலம் விடைகளை கண்டறிந்து, ப்ளூடூத் இயர்பட் மூலம் அவர்களுக்கு விடைகளை கூறும் திட்டத்தை தீட்டியதை பூலா ரமேஷ் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த திட்டத்தின் படி ஏழு தேர்வர்கள் இரண்டு பரீட்சையை சாட்ஜி.பி.டி. மற்றும் ப்ளூடூத் இயர்பட்ஸ் உதவியுடன் எழுதியது அம்பலமாகி இருக்கிறது.

விசாரணை வளையத்தில் உள்ள பூலா ரமேஷ், தேர்வு தொடங்கும் பத்து நிமிடங்களுக்கு முன் வினாத்தாளை கைப்பற்றி, சாட்ஜி.பி.டி. மூலம் கேள்விகளுக்கான விடையை பெற்றுள்ளார். பிறகு, வினாத்தாளை சுமார் 30-க்கும் அதிக தேர்வர்களுக்கு பூலா ரமேஷ் கொடுத்துள்ளார். இதற்காக ஒவ்வொருத்தரிடமும் இவர் ரூ. 25 லட்சத்தில் இருந்து அதிகபட்சம் ரூ. 30 லட்சம் வரை பெற்று இருக்கிறார்.

ஜெனரேட்டிவ் ஏ.ஐ. டூல்கள் நாளுக்கு நாள் அதிக பிரபலம் அடைந்து வருவதோடு, இலவசமாகவே கிடைப்பது பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. சாட்ஜி.பி.டி. மற்றும் மைக்ரோசாஃப்ட் பிங் உள்ளிட்ட சேவைகள் செயலி வடிவிலேயே கிடைக்கின்றன. இதுபோன்ற சேவைகள் பெருமளவு பயன் அளிக்கும் பட்சத்திலும், இவற்றை தீயவர்கள் கையாளும் போது, இதன் பாதிப்பு தெரியவருகிறது.

admin

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

44 mins ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

1 hour ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

3 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago