latest news
Flood Insurance இருந்தா போதும், வெள்ளம் பாதித்தாலும் பிரச்சினையில்லை..!
இந்தியாவில் புயல், மழை, வெள்ளம் பாதிப்பு சமீப காலங்களில் கணிக்க முடியாத அளவுக்கும், எதிர்பாரா சமயங்களிலும் ஏற்படுகிறது. கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி அவர்களது சேமிப்பு, உடமைகள் மற்றும் வசிக்கம் வீடு என எல்லாமே பாதிப்புக்கு ஆளாகிறது.
சமீபத்தில் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. இதுதவிர அசாம், ஒடிசா, உத்தராகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலக்கட்டத்தில் பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுவது தொடர்கதையாத உள்ளது.
இந்த நிலையில், மழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள காப்பீடு திட்டங்கள் உங்களுக்கு கைக் கொடுக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? வெள்ளம் தொடர்பான சேதங்களை மட்டும் உள்ளடக்கிய பிரத்யேக காப்பீடு திட்டங்கள் எதுவும் தற்போதைக்கு கொண்டுவரப்படவில்லை.
இருப்பினும், பரவலான காப்பீட்டு திட்டங்களில் வெள்ளப் பாதுகாப்பை ஈடு செய்யும் பலன் வழங்கப்படுகிறது. “ஸ்டாண்டர்ட் ஃபயர் & ஸ்பெஷல் பெரில்ஸ் பாலிசி மற்றும் ஹவுஸ்ஹோல்டர்ஸ் இன்சூரன்ஸ் பாலிசிட மூலம் வெள்ள பாதிப்புகளுக்கு காப்பீடு பெற முடியும் என ஃபின்ஹாட் இணை நிறுவனர் மற்றும் மூத்த நிதி அலுவலர் சந்தீப் கட்டியார் தெரிவித்தார்.
இதுபோன்ற காப்பீடு திட்டங்கள், “கலவரங்கள், வேலைநிறுத்தங்கள், வெள்ளம், புயல் மற்றும் சூறாவளி போன்ற பல்வேறு நிகழ்வுகளால் ஏற்படும் சேதங்கள், தீ மற்றும் ஆபத்து காப்பீடு வழங்குகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஐஆர்டிஏஐ-இன் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்ட நிலையான வீட்டுக் காப்பீட்டு திட்டம் தான் பாரத் க்ரிஹா ரக்ஷா பாலிசி. இதை கொண்டு வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீட்டிற்கு காப்பீடு செய்து கொள்ளலாம். “இந்த திட்டம் பத்து ஆண்டுகள் வரை கவரேஜ் வழங்குகிறது. இந்த திட்டம் கட்டிடம் மற்றும் அதன் உள்ளடக்கங்கள் இரண்டிற்கும், கட்டிடத்தின் காப்பீடு செய்யப்பட்ட மதிப்பில் 20% வரை தன்னியக்க பாதுகாப்பை வழங்குகிறது.” என்று சோழ எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிர்வாக இயக்குனர் சூர்யநாராயணன் தெரிவித்தார்.
இந்த வீட்டுக் காப்பீட்டுக் திட்டங்கள் வெள்ளம், புயல் மற்றும் சூறாவளிகளால் ஏற்படும் சேதங்கள் உள்பட பலவிதமான அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. அவை கட்டமைப்பு சேதத்திலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், கனமழையால் கட்டிட பெயிண்டிங்கில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய வண்ணம் தீட்டுதல் போன்ற கூடுதல் செலவுகளையும் ஈடுகட்டுகின்றன.
இடம், சொத்து வகை, கட்டிட வயது மற்றும் கட்டுமானப் பொருள் போன்ற காரணிகளின் அடிப்படையில் வீட்டு காப்பீடு திட்டங்களுக்கான பிரீமியம் தொகையகள் மாறுபடும்.
latest news
ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஹெச்.டி.குமாரசாமி மந்திரியாக உள்ளார். அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட பிறகே அவர் ஜாமின் பெற்றார் எனவும் சொல்லியிருக்கிறார்.
மூடா மோசடி தொடர்பாக கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய கவர்னர் அளித்த உத்தரவு செல்லும் என கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து முறைகேடடு தொடர்பாக லோக் ஆயுக்தா விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ராஜினாமா சித்தராமையா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது.
இதெல்லாம் நமது அரசியலை சீர்குலப்பதற்கான அரசியல் வேலை, அதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள், லோட்டஸ் ஆபரேசனை முயற்சி செய்தார்கள், அது தோல்வி அடைந்தது, ஆட்சி அமைப்பதற்கான எம்.எல்.ஏக்கள் இல்லாமல் இரண்டு முறை ஆட்சி அமைத்தார்கள் எடியூரப்பா வெற்றி பெற்றாரா? என கேட்டிருந்தார்.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஹெச்.டி.குமாரசாமி இடம் பிடித்துள்ளார். மந்திரியாக உள்ள அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட பிறகே அவர் ஜாமீன் பெற்றிருக்கிறார் என கூறியிருக்கும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தான் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்பதனையும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். மூடா மோசடி தொடர்பான விஷயங்களுக்கு பிறகு கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பு ஏற்படத் துவங்கியது.
latest news
ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார். அதோடு இரட்டை இலையை டெபாசிட் இழக்க செய்து தமிழக அரசியலில் அருவருக்கத்தக்க அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிரிந்திருக்கக் கூடிய சக்திகள் அனைவரும் தொண்டர்கள் தான் என்றார்.
தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது, நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு வாங்கி, ஏழு இடங்களில் டெபாசிட் பறிபோய் இருக்கிறது என்றார். அதோடு பதிமூன்று இடங்களில் மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறது, பிற பாராளுமன்ற தொகுதிகளிலும் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.
தொண்டர்களை பிரித்து வைத்திருக்கும் காரணத்தினாலேயே ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்காமல் போனது, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய இந்த இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என்றார்.
சுயேட்சையாக தான் போட்டியிட்டு முப்பத்தி மூன்று சதவீத வாக்குகளை பெற்றிருப்பதாகவும், இது தொண்டர்களும், பொது மக்களும் தங்கள் பக்கத்தில் இருப்பதையே இது காட்டியிருப்பதாகவும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட்ட போது பன்னீர் செல்வம் என்ற பெயரில் ஆறு பேர் களம் கண்டனர் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
Cricket
இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் எதிர்த்து விளையாட இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி.
டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் வைத்து இந்த இரு அணிகளுக்கு இடையே நடந்து முடிந்தது. ஆல்-ரவுண்டர்கள் அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் சிறப்பான பங்களிப்பினால் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இந்திய அணி.
துவக்கத்தில் தடுமாறினாலும் நேரம் செல்லச் செல்ல தனது ஆதிக்கத்தை அதிகரித்தது. இந்திய பவுலர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாரி இறுதியில் சரண்டரானது பங்களாதேஷ். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. டாஸ் போடுவதில் தாம்தம் ஏற்பட்ட நிலையில் டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்து வங்கதேசத்தை பேட்டிங் செய்ய பணித்தது.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மூன்று பேர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் தனது பேட்டிங்கை தடுமாற்றத்துடனே துவங்கியது வங்கதேசம்.
இருபத்தி ஆறு ரன்களை எடுத்திருந்த நிலையில் தனது முதல் விக்கெட்டை இழந்தது அந்த அணி, இருபத்தி ஒன்பது மற்றும் என்பது ரன் கள் எடுத்திருந்த நிலையில் முறையே தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டுகளை இழந்தது வங்கதேச அணி. இந்திய அணியின் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆல்-ரவுண்டர் அஷ்வின் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.
முப்பத்தி ஐந்து ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில் வங்கதேச் அணி நூற்றி ஏழு ரன்களை எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இன்றைய ஆட்டம் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளான நாளைய தினத்தினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இரு நாட்டு அணி ரசிகர்களும்.
Cricket
நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…
அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி வீரரகள் தனது பார்முக்கு வந்து அதிரடியை காட்டத் துவங்கினால் எதிரணி வீரர்கள் எல்லாம் கப்-சிப் என மாறிவிடுவார்கள். அபாயகரமான பேட்ஸ்மேன்களையும், அதிரடி பவுலர்களையும் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிற்கு கொடுத்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.
சில காலங்களாகவே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது இந்த அணி. ஜாம்பவான் வீரர்கள் பலர் தங்களது ஓய்வை அறிவித்ததாலும், விளையாட்டினை தொடர முடியாமல் போனதாலும் முன் போல தனக்கான தனித்துவத்தை பெற தொடர்ந்து போராடி வருகிறது இந்த அணி.
இந்நிலையில் சர்வதேச போட்டிகள் அனைத்து விதத்திலிருந்தும் 2021ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்த ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடை பெறுவதாக அறிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக நாற்பது டெஸ்ட் போட்டிகள், நூற்றி அறுபத்தி நாலு ஒரு நாள் போட்டிகள், தொன்னூற்றி ஓரு டி-20 போட்டிகளில் விளையாடி இருந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தான தனது ஓய்விற்கு பிறகு உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார்.
இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளிலிருந்தும் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் பிராவோ. கரீபியன் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடி வந்த நிலையில் இருபத்தி நான்காம் தேதி நடந்து முடிந்த போட்டியின் போது பிராவோ காயமடைந்திருந்தார்.
இந்த சூழலில் தனது ஓய்வு அறிவிப்பை அறிவித்தவர் கண்ணீர் மல்க விடை பெற்றார். நடந்து முடிந்த இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் இருந்து வந்தார். கத்து குட்டி அணியாகவே பார்க்கபட்ட அந்த அணி அரை இறுதி வரை முன்னேறி மற்ற அணிகளுக்கு அதிர்ச்சியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Finance
ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் தங்கத்திற்கு என தனி மவுசு இருந்தே வருகிறது. நாளுக்கு நாள் அதன் மீதான மோகமும், அதன் தேவையும் அதிகரித்தே வரும் நிலையே இருக்கிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை அடுத்தடுத்து உயர்வை சந்தித்து வருவது நகை பிரியர்களுக்கு தலைவலி தரக்கூடிய விஷயமகவே மாறி வருகிறது.
நேற்று மாற்றம் ஏதும் தென்படாமல் இருந்த தங்கத்தின் விற்பனை விலை இன்று ஒரே நாளில் அதிரடி உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் ஏழாயிரத்து அறுபது ரூபாய்க்கு (ரூ.7,060/-) விற்பனையாகி வந்த நிலையில் இன்று நாற்பது ரூபாய் (ரூ.40/-) உயர்ந்து ஏழாயிரத்து நூறு ரூபாய்க்கு (ரூ.7,100/-)விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரனின் விலை நேற்று ஐம்பத்தி ஆராயிரத்து நானூற்றி என்பது ரூபாய்க்கு (ரூ.56,480/-) விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரு சவரனின் விலை ஐம்பத்தி ஆராயிரத்து என்னூறு ரூபாயாக (ரூ.56,800/-)உள்ளது. சவரன் ஒன்றுக்கு இன்று முன்னூற்றி இருபது ரூபாய் (320/-)உயர்ந்துள்ளது.
வெள்ளியின் விலையும் இன்று தங்கத்தைப் போலவே ஏறுமுகத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் வெள்ளி நூற்றி ஓரு ரூபாய்க்கு (ரூ.101/-) விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு ரூபாய் உயர்ந்து (ரூ.1/-) நூற்றி இரண்டு ரூபாய்க்கு (ரூ.102/-) விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிலோ பார் வெள்ளி நேற்று ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-) இருந்து வந்த நிலையில் இன்று ஆயிரம் ரூபாய் (ரூ.1,000/-) உயர்ந்து ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,02,000/-) விற்கப்படுகிறது. தொடர்ச்சியாக ஏறுமுகத்திலேயே இருந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலையால் ஆபரணப்பிரியர்கள் அதிகமான கவலைக்கு உள்ளாகி வருகின்றனர்.
-
Cricket1 day ago
களத்தில் சண்டை.. பவுலருக்கு சோக்-ஸ்லாம் போட்ட பேட்டர்.. வீடியோ வைரல்
-
Cricket24 hours ago
நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…
-
Cricket1 day ago
147 ஆண்டுகளில் முதல்முறை.. இலங்கை வீரர் மிரட்டல்.. கவாஸ்கர் கூட இந்த சாதனை படைக்கல
-
latest news1 day ago
வட்டியே இல்ல.. பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கும் வேற லெவல் அரசு திட்டம்
-
Finance1 day ago
ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…
-
Cricket1 day ago
INDvsBAN 2வது டெஸ்ட்: கான்பூரில் பாதுகாப்பு குளறுபடி, UPCA கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?
-
Cricket23 hours ago
இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…
-
latest news19 hours ago
ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…