கூகுள் நிறுவனம் சமீபத்தில் தான் பிக்சல் 9, பிக்சல் 9 ப்ரோ, பிக்சல் 9 ப்ரோ XL மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு என புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. 2024 ஆண்டிற்கான ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நிறுவனம் பழைய பிக்சல் போன்களின் விலையை குறைத்து இருக்கிறது.
விலை குறைப்பு மட்டுமின்றி சில பிக்சல் போன்களின் விற்பனையை அதிரடியாக நிறுத்தியுள்ளது. விலை குறைப்பின் படி பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ, பிக்சல் 8a மற்றும் பிக்சல் 7a மாடல்கள் பயன்பெற்றுள்ளன.
புதிய விலை விவரம்:
பிக்சல் 8 (128GB) ரூ. 75,999-இல் இருந்து ரூ. 71,999
பிக்சல் 8 (256GB) ரூ. 82,999-இல் இருந்து ரூ. 77,999
பிக்சல் 8 ப்ரோ (128GB) ரூ. 1,06,999-இல் இருந்து ரூ. 99,999
பிக்சல் 8 ப்ரோ (256GB) ரூ. 1,13,999-இல் இருந்து ரூ. 1,06,999
பிக்சல் 8a (128GB) ரூ. 52,999-இல் இருந்து ரூ. 49,999
பிக்சல் 8a (256GB) ரூ. 59,999-இல் இருந்து ரூ. 56,999
பிக்சல் 7a (128GB) ரூ. 43,999-இல் இருந்து ரூ. 41,999
பிக்சல் போன்களின் விலை குறைப்பு மட்டுமின்றி கூகுள் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிக்சல் 7, பிக்சல் ப்ரோ விற்பனையை நிறுத்தியுஶள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் பிக்சல் ஃபோல்டு சீரிஸ் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிக்சல் பிக்சல் 7a, பிக்சல் 8 சீரிஸ், பிக்சல் 9 சீரிஸ் உள்ளிட்டவை மட்டுமே கூகுள் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்கிறது.
புதிய பிக்சல் சீரிஸ் அறிமுகத்தைத் தொடர்ந்து, பழைய போன்களை ஸ்டாக் இருக்கும் வரை விற்பனை செய்வதை கூகுள் வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ விற்பனை நிறுத்தப்பட்டது கூகுள் வழக்கமாக செய்யும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. எனினும், கடந்த ஆண்டு மே மாதம் விற்பனைக்கு வந்த பிக்சல் போல்டு மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…