கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இதில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கணிசமான யூனிட்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் பிக்சல் போன்களை உற்பத்தி செய்யும் பணிகளில் இருவேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து கூகுள் நிறுவனம் வரும் மாதங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் தமிழகத்தின் ஃபாக்ஸ்கான் ஆலையில், முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் பிக்சல் போன்களின் உற்பத்தி துவங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களையும் உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிக்சல் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்வதற்கான களமாக இந்தியாவை மாற்றிக் கொள்ளும் பணிகளில் கூகுள் நிறுவனம் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக இந்தியாவில் இருந்து பிக்சல் போன்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. அதன்பிறகு தேவைக்கு ஏற்ப அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்யப்படலாம் என்று தெரிகிறது.
இதனிடையே கூகுள் நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கும் பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் AI சார்ந்த ஏராளமான அம்சங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போதைய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களில் ஏஐ சார்ந்த அம்சங்கள் அதிகளவில் வழங்கப்பட்டு வருவதை அடுத்து, கூகுள் நிறுவனமும் அதற்கு ஏற்ப தயாராகி வருகிறது.
ஏற்கனவே கூகுள் நிறுவனம் ஏஐ சார்ந்து பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறது. மேலும், கூகுள் டெவலப்பர்கள் நிகழ்வில் இதுபற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…