தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுதவிர சுயதொழில் செய்பவர்களுக்கு எளிய முறையில் கடன் வழங்கும் நோக்கில் முத்ரா யோஜனா கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சொந்த தொழில் தொடங்குவோருக்கு எளிய முறையில் கடன் வழங்கப்படுகிறது.
முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பெறும் கடன் தொகைக்கு எந்த வித அடமானமும் தேவையில்லை. மேலும், விரைவில் பணம் வழங்கப்பட்டு விடும். முத்ரா திட்டத்தில் மொத்தம் மூன்று பிரிவுகள் உள்ளன. அதில் விஷூ பிரிவில் தான் சிறு குறு வணிகங்களுக்கு கடன் வழங்கப்படும். இந்தியாவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.
பாரத ஸ்டேட் வங்கியில் இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ. 50,000 வரை கடன் பெறலாம். இந்த கடன் தொகைக்கு உத்தரவாதம் மற்றும் பிணை வழங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் திட்டத்தின் கீழ் சிறு தொழில் தொடங்கவோ அல்லது ஏற்கனவே செய்துவரும் சிறுதொழில்களை விரிவுப்படுத்திக் கொள்ள முடியும்.
தொழில் தொடங்குவோர் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 50,000 வரை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு வங்கிகள் சார்பில் மிகக் குறைந்த வட்டி வசூலிக்கப்படும். இந்த கடன் தொகையை அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் கடன் பெறுவதற்கு உத்தரவாதம், பாதுகாப்பு எதுவும் சமர்பிக்க வேண்டாம்.
மேலும், கடன் பெற இதர கட்டணங்கள் எதுவும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் திட்டத்தில் கடன் பெற ஆன்லைன் மற்றும் நேரடியாக வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
நிபந்தனைகள்:
இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பதாரர் சிறு தொழில்முனைவோராக இருப்பது அவசியம்.
விண்ணப்பதாரர் நிலையான வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் வயது 18 முதல் 65-க்குள் இருப்பது அவசியம் ஆகும்.
கடன் கோரும் வியாபாரம் விவசாயம் அல்லாத துறையுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி. செலுத்தும் பட்சத்தில் அதற்கான பதிவு செய்திருப்பது அவசியம்.
மேற்கூறிய நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள் தங்களின் அடையாள அட்டை, முகவரிச் சான்று, சுய புகைப்படம், வங்கி கணக்கு விவரங்கள், வணிகம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஜி.எஸ்.டி. விவரங்கள் அடங்கிய ஆவணங்களுடன் கடன் கோரி விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமழ் சினிமா ரசிகர்களை மட்டுமன்றி ஒட்டு…
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தினை ஆட்சி செய்து…
பிரமதர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஆவாஸ்…
நேற்று சென்னையில் விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையை விட இன்றைய விலை உயர்வை சந்தித்துள்ளது. நேற்றைய முன்தினம்…
கான்பூர் டெஸ்ட் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அளவுக்கு இந்திய அணி சம்பவம் செய்தது. போட்டியின் போது…
இரண்டரை நாளில் வங்கதேசத்தை வென்று டெஸ்ட் போட்டிகளில் பிரம்மிக்கத் தக்க வெற்றியை பெற்றுள்ளது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி. கான்பூரில்…