பணம் சேமிக்க நினைப்பவர்களில் பலர், குறைந்த முதலீட்டில் அதிக வருவாய் கிடைக்கும் திட்டங்களில் தான் அதிக கவனம் செலுத்துவர். குறைந்த முதலீடு, அதிக லாபம் பெற விரும்புவோருக்காக பலவகை சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அந்த வகையில், அஞ்சல் அலுவலகம் வழங்கும் திட்டம் நாள் ஒன்றுக்கு ரூ. 50 முதலீடு செய்தால் ரூ. 35,00,000 வருவாய் கிடைக்க வழி செய்கிறது.
அதிக பலன் வழங்குவதில் பெயர்பெற்ற இந்திய அஞ்சல் துறைதான் இந்த திட்டத்தையும் கொண்டு வந்திருக்கிறது. இந்திய கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு இந்திய அஞ்சல் முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்தியா போஸ்ட், நாட்டின் வளர்ச்சியடையாத பகுதிகளில் வாழும் மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில், அதிக வருமானத்தைத் தரும் பல்வேறு ஆபத்து இல்லாத சேமிப்புத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
கிராம சுரக்ஷா யோஜனா என்பது தபால் அலுவலகம் அறிமுகப்படுத்திய கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் மிகவும் பிரபலமான ஒன்று ஆகும். இந்த திட்டம் பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்,
கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 50 செலுத்தினால் அதிகபட்சம் ரூ. 35,00,000 வரை பெற முடியும். தனிநபர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 1,515 முதலீடு செய்யும் பட்சத்தில் ரூ. 34.60 லட்சம் வரை பெற முடியும்.
1995 ஆம் ஆண்டு கிராமப்புற இந்தியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (RPLI) நிறுவப்பட்டது. இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் பொதுவாக கிராமப்புற மக்களுக்கு காப்பீடு வழங்குவது தான். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள ஏழைப் பிரிவினர் மற்றும் பெண் ஊழியர்களுக்கு உதவுவது மற்றும் கிராமப்புற மக்களிடையே காப்பீட்டு விழிப்புணர்வை வளர்ப்பது என இந்தியா போஸ்ட் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…