ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவைகளை ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் பெயரில் வழங்க இருக்கிறது. இது தொடர்பான சில வசதிகள் மற்றும் அம்சங்கள் ஆப்பிள் ஐஓஎஸ் 18.1 டெவலப்பர் பீட்டாவில் வழங்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய அம்சங்கள் பயனர்களுக்கான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில், ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் அம்சங்களை பயன்படுத்த தனி கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான துவக்க விலை 20 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1679 முதல் துவங்கும் என கூறப்படுகிறது. விலை விவரங்களை ஆப்பிள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எனினும், இவற்றின் விலை குறித்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
ஐஓஎஸ் 18.1 பீட்டாவில் ஆப்பிள் ஏஐ அம்சங்களில் கால் ரெக்கார்டிங், டிரான்ஸ்க்ரிப்ஷன், எழுதும் டூல்கள் மற்றும் மேம்பட்ட சிரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. படிப்படியாக பீட்டா வெர்ஷனில் ஏஐ அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் ஏஐ சார்ந்த அம்சங்கள் அதிகளவில் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில், இது தொடர்பான போட்டியில் முன்னிலையில் இருக்க ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் சேவையை வழங்க இருக்கிறது. இது தொடர்பான அம்சங்கள் பயனர்களுக்கு பல விஷயங்களில் உதவியாக இருக்கும் என்று எதிராபார்க்கலாம்.
அனைவருக்குமான ஓஎஸ்-இல் ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் வசதிகள் எப்போது வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவை பெரும்பாலும் சாம்சங்கின் கேலக்ஸி ஏஐ சேவைக்கு போட்டியாகவே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…