Categories: tech news

அவசர மருத்துவ செலவுக்கு EPFO பணம் எடுப்பது எப்படி?

இபிஎஃப்ஓ (EPFO) விதிகளின் கீழ், 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதியை கழிக்க வேண்டும். இபிஎஃப்ஓ-ஆல் ஒழுங்குபடுத்தப்பட்ட வருங்கால வைப்பு நிதிக்கு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 12% பங்களிக்க வேண்டும்.

அதே நேரத்தில் முதலாளிகள் இந்த 12% பங்களிப்பைப் வழங்க வேண்டும். முதலாளியின் பங்களிப்பு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது – 8.33% பங்களிப்பு பணியாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) செல்கிறது மற்றும் 3.67% இபிஎஃப் திட்டத்தில் செலுத்தப்படுகிறது. இந்த தொகையை ஊழியர்கள் சேமிப்பாக கருத முடியும். மேலும், அவசர காலங்களில் இதை பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன் இபிஎஃப்ஓ விதி 68J-இன் கீழ் ஏற்கனவே இருந்த ஆட்டோ கிளெய்ம் செட்டில்மென்ட் தகுதி வரம்பு ரூ.50,000-இல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 68J விதியின் கீழ் ஊழியர்கள் தங்களுக்கோ அல்லது தங்களை சார்ந்தவர்களின் மருத்துவ செலவுகளுக்கு முன்பணமாக விண்ணப்பிக்க முடியும்.

இந்த சூழ்நிலைகளில் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் மருத்துவமனை சிகிச்சை, பெரிய அறுவை சிகிச்சைகள், காசநோய், தொழுநோய், பக்கவாதம், புற்றுநோய், மனநலக் குறைபாடு அல்லது இதயக் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற இந்த விதியின் கீழ் முன்பணம் கோரி விண்ணிப்பக்க முடியு்ம.

உடல் ஊனமுற்ற உறுப்பினர்களுக்கு, முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கான வசதி வழங்கப்படுகிறது. இந்த பணத்தை கொண்டு அவர்கள் தங்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்கிக் கொள்ளலாம். இருப்பினும், இத்தகைய தொகையை பெறுவதற்கு உரிமம் பெற்ற மருத்துவர் அல்லது இபிஎஃப்ஓ-வால் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் இருந்து மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

இபிஎஃப்ஓ 68-J விதியின் கீழ் முன்பணம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

  • பயனாளிகள் தங்கள் உலகளாவிய கணக்கு எண் (UAN) விவரங்களைப் பயன்படுத்தி இபிஎஃப்ஓ (EPFO) தளத்தில் லாக்-இன் செய்ய வேண்டும்.
  • இந்த வழிமுறையை தொடரும் போது உங்கள் KYC விவரங்கள் மற்றும் இதர விவரங்கள் சரியாகவும், அப்டேட் செய்யப்பட்டு இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • வலைப்பக்கத்தில் நீங்கள் பெற முன்பண தொகை வகையைத் தேர்வு செய்யலாம். இதில் திருமணம், மருத்துவ அவசர நிலை, வீடு வாங்குதல் அல்லது வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துதல் போன்ற ஆப்ஷன்கள் இடம்பெற்று இருக்கும். மருத்துவ அவசர நிலை தவிர்த்து, இங்குள்ள எந்த பயன்பாட்டிற்கும் முன்பணம் கோரி விண்ணப்பிக்க முடியும்.
  • உங்களை உறுதிப்படுத்திக் கொள்ள நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்த மொபைல் எண்ணிற்கு வரும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் அனுப்பப்படும். அதனை பதிவிட வேண்டும்.
  • இனி அடுத்த வலைப்பக்கத்தில் வரும் ஆப்ஷன்களை பின்பற்றி, தேவையான ஆவணங்கள் அல்லது தகவல்களை வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் முன்பணம் கோருவதற்கான விண்ணப்ப வழிமுறைகளை முடித்துக் கொள்ளலாம்.

 

Web Desk

Recent Posts

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

19 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

20 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

23 hours ago

நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…

அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…

24 hours ago

ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…

ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…

1 day ago

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…

1 day ago