இபிஎஃப்ஓ (EPFO) விதிகளின் கீழ், 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதியை கழிக்க வேண்டும். இபிஎஃப்ஓ-ஆல் ஒழுங்குபடுத்தப்பட்ட வருங்கால வைப்பு நிதிக்கு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 12% பங்களிக்க வேண்டும்.
அதே நேரத்தில் முதலாளிகள் இந்த 12% பங்களிப்பைப் வழங்க வேண்டும். முதலாளியின் பங்களிப்பு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது – 8.33% பங்களிப்பு பணியாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) செல்கிறது மற்றும் 3.67% இபிஎஃப் திட்டத்தில் செலுத்தப்படுகிறது. இந்த தொகையை ஊழியர்கள் சேமிப்பாக கருத முடியும். மேலும், அவசர காலங்களில் இதை பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன் இபிஎஃப்ஓ விதி 68J-இன் கீழ் ஏற்கனவே இருந்த ஆட்டோ கிளெய்ம் செட்டில்மென்ட் தகுதி வரம்பு ரூ.50,000-இல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 68J விதியின் கீழ் ஊழியர்கள் தங்களுக்கோ அல்லது தங்களை சார்ந்தவர்களின் மருத்துவ செலவுகளுக்கு முன்பணமாக விண்ணப்பிக்க முடியும்.
இந்த சூழ்நிலைகளில் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் மருத்துவமனை சிகிச்சை, பெரிய அறுவை சிகிச்சைகள், காசநோய், தொழுநோய், பக்கவாதம், புற்றுநோய், மனநலக் குறைபாடு அல்லது இதயக் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற இந்த விதியின் கீழ் முன்பணம் கோரி விண்ணிப்பக்க முடியு்ம.
உடல் ஊனமுற்ற உறுப்பினர்களுக்கு, முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கான வசதி வழங்கப்படுகிறது. இந்த பணத்தை கொண்டு அவர்கள் தங்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்கிக் கொள்ளலாம். இருப்பினும், இத்தகைய தொகையை பெறுவதற்கு உரிமம் பெற்ற மருத்துவர் அல்லது இபிஎஃப்ஓ-வால் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் இருந்து மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இபிஎஃப்ஓ 68-J விதியின் கீழ் முன்பணம் பெற விண்ணப்பிப்பது எப்படி?
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…
அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…