Connect with us

latest news

ஓட்டுநர் உரிமத்தில் மாற்றங்கள்.. ஆன்லைனிலேயே செய்யலாம்..

Published

on

நாடு முழுக்க இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் அவசியமான ஆவணமாக இருந்து வருகிறது. வாகனம் ஓட்டுபவர்கள் உரிய ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். முந்தைய நடைமுறைகளின் படி ஓட்டுநர் உரிமம் பெறுவது, அதனை புதுப்பித்தல், மாற்றங்களை செய்வது என எல்லாவற்றுக்கும் உரிய போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருந்து வந்தது.

தற்போது இது தொடர்பான சேவைகள் ஆன்லைனிலையை கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் சார்ந்த சேவைகளை ஆன்லைனில் மேற்கொள்ளும் வசதி சீராக செயல்பட்டு வருகிறது.

இது சார்ந்த சேவைகளை முறைப்படுத்த மத்திய அரசு சார்பிலும் பிரத்யேக வலைதளம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், ஓட்டுநர் உரிமத்தில் பயனரின் வீட்டு முகவரியை மாற்றுவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

  • முதலில் பரிவாகன் வலைதளம் செல்ல வேண்டும்.
  • வலைதளத்தில் ஓட்டுநர் உரிமம் சார்ந்த சேவைகளை கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
  • இனி மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • இனி வீட்டு முகவரியை மாற்ற வேண்டும் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
  • உங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவிட்டு, அதனை உறுதிப்படுத்தக் கோரும் ‘Confirm’ பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
  • இறுதியில் ஆதார் எண் மற்றும் அதற்கான ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் பதிவிட வேண்டும்.
google news

Finance

உயர்வோ ரூபாய் பத்து…தங்கம் காட்டி வரும் கெத்து…

Published

on

gold

தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அடுத்தடுத்து உயர்வு பாதையிலேயே இருந்து வருகிறது தங்கத்தின் விற்பனை விலை. இந்த விலை உயர்வு நகைப் பிரியர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. விலையில் மாற்றம் காணாமல் இருந்த வெள்ளியும் இன்று உயரத் துவங்கியுள்ளது.

தங்கம் இப்போதெல்லாம் அடிக்கடி விலை உயர்வினை மட்டுமே சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென குறைந்த விற்பனை விலை ஆபரணப்பிரியர்களை ஆனந்ததில் ஆழ்த்தியது. ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அடுத்தடுத்து விலை உயர்வை மட்டுமே சந்தித்து வந்து பேரதிர்ச்சியை கொடுத்து வந்தது தங்க நகை வாங்குவதில் விருப்பம் உள்ளவர்களுக்கு.

நேற்று கிராம் ஒன்றின் விலை ஏழாயிரத்து நூற்றி பத்தாகவும்(ரூ.7,110/-), சவரன் ஒன்றின் விலை ஐம்பத்தி ஆறாயிரத்து என்னூற்றி  என்பதாகவும் (ரூ.56,880/-)  இருந்த நிலையில் இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

நேற்றை விட கிராம் ஒன்றிற்கு பத்து ரூபாய் அதிகரித்து ஏழாயிரத்து நூற்றி இருபது (ரூ.7,120/-) ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

Silver

Silver

இன்று என்பது ரூபாய் உயர்ந்து ஐம்பத்தி ஆறாயிரத்து தொல்லாயிரத்து அறுபது ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது (ரூ.56,960/-) ஒரு சவரன் ஆபரணத் தங்கம். கடந்த இரண்டு நாட்களாக விலையில் மாற்றம் காட்டாத வெள்ளியின் விலை இன்று உயரத்துவங்கியிருக்கிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று நூற்றி மூன்று ரூபாய்க்கு (ரூ.103/-) விற்பனையாகி வருகிறது சென்னையில் விலை அடிப்படையில்.

ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்தி மூவாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,03,000/-) விற்கப்பட்டு வருகிறது. நேற்றை விட கிராமிற்கு இரண்டு ரூபாயும் (ரூ.2/-) , கிலோவிற்கு ஆயிரம் ரூபாயும் (ரூ.1000/-) அதிகரித்துள்ளது வெள்ளி.

google news
Continue Reading

latest news

வேகம் முக்கியமில்ல பிகிலு…விவேகம் தான் முக்கியம்…தவெக தலைவர் விஜய் அறிவுரை…

Published

on

Vijay

தமிழ் சினிமாவிற்கும், தமிழக அரசியலுக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு இருந்தே வருகிறது. அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என அரசியலின் ஆளுமைகள் கோலிவுட்டிலிருந்து வந்தவர்களே. இவர்களுக்கு அடுத்த படியாக இயக்குனரும், நடிகருமான சீமான், மன்சூர் அலிகான் ஆகியோர் தீவிர அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

உலக நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மையம்’ என்ற கட்சியை துவங்கி தேர்தலில் களம் கண்டார். தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் உச்சபட்ச நடிகராக இருந்து வருபவர் விஜய்.வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த “தி கோட்” படம் கடந்த மாதம் ஐந்தாம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. அப்படத்தினுடைய படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் விஜய்.

‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை துவங்கியுள்ளார். தொடர்ந்து தனது கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தி கொடிப்பாடலையும் வெளியிட்டார். விஜய் கட்சியின் முதல் மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டிற்கான கால்கோள் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் விஜய்.

அதில் அரசியலில் வேகமாக இருப்பதை விட விவேகமாக தான் முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

TVK Vijay

TVK Vijay

அரசியல் என்றால் என்ன என்ற கேள்விக்கு தவெகவின் மாநாடு பதிலளிக்கும் என தெரிவித்துள்ள விஜய். அரசியலில் எதாத்தமாக இருப்பதை விட எச்சரிக்கைய்யுடன் களமாட வேண்டும் என்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கு இயக்கமாக தவெக  மாறிவிட்டதாகவும் விஜய் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.

மாநாட்டிற்கான கால்கோள் விழா மட்டுமல்ல இது அரசியல் பணிகளுக்கான கால்கோள் விழா என்றும், நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டிற்கு உண்ர்த்தும் வகையில் மாநாட்டுப் பணிகளை தொடர வேண்டும் எனவும், வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் விஜய்.

அறிக்கையில் “தோழர்களே” என அறிக்கையில் விஜய் குறிப்பிட்டிருப்பது விஜய் கட்சியின் கொள்கை மீதான அதிக எதிர்பார்ப்பை கொடுக்கும் வார்த்தையாக அமைந்துள்ளது.

google news
Continue Reading

cinema

சேட்டன் வந்தல்லே!…டிஸ்சார்ஜ் ஆகி வந்தல்லே!…வீடு திரும்பிய வேட்டையன்…

Published

on

rajini

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக் கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகீட்சை முடிந்து அவர் நலமமுடன் வீடு திரும்பியுள்ளார். இந்த செய்தி ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாத் துறையில் ஐம்பது ஆண்டுகால பணியை நெருங்கி வரும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி” படத்தில் நடித்து வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் இவர் நடித்துள்ள “வேட்டையன்” படம் உலகம் முழுவதும் வருகிற பத்தாம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் டிரையலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Rajinikanth

Rajinikanth

போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்த ரஜினிகாந்திற்கு கடந்த முப்பதாம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை அப்பல்லோ மருத்துவனையில் அனுமதித்தனர் அவரது குடும்பத்தினர். தீவிர சிகீட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் பூரண நலமடைந்து வீடு திரும்ப பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்தியிருந்தனர். ரஜினி விரைவில் வீடு திரும்ப வேண்டும் என அவரது தீவிர ரசிகர்கள் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு ரஜினிகாந்த் சிகீட்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார். அறுவை சிகீட்சை தேவைப்படாத காரணத்தால், இதய தமனியில் ஸ்டன்ட் பொருத்தப்பட்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ரஜினிகாந்த் நலமுடன் வீடு திரும்பியிருப்பது ரஜினியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறிய ஓய்விற்கு பிறகு மீண்டும் “கூலி” படத்தில் நடிப்பதை தொடருவார் என கோலிவுட் வட்டாரத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

google news
Continue Reading

latest news

உங்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறதா? அப்போ இந்த தகவலை

Published

on

இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத் தொகையை டிடிஎஸ்-ஆக வருமான வரித்துறையில் செலுத்தும் விதிமுறை அமலில் உள்ளது. இந்தத் தொகையை பணியை வழங்கும் நிறுவனங்கள் சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன. இதுப் பற்றிய தகவல்களை நிறுவனங்கள் சார்பில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட ஊழியரின் சம்பளம், அதில் எத்தனை சதவீதம் டிடிஎஸ்-ஆக பிடித்தம் செய்யப்படுகிறது என்ற விவரங்கள் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் வருமான சான்றில் இடம்பெற்று இருக்கும். என்னும், நிறுவனங்கள் சார்பில் பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் தொகை முறையாக வருமான வரித்துறையில் செலுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான பிரச்சினைகள் சமீபத்தில் அரங்கேறியுள்ளன. இந்த நிலையில், உங்களுக்கு பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் தொகை வருமான வரித்துறையில் சரியாக செலுத்தப்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகிறது. இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஒரு பணியாளராக இருப்பவர்கள் எனில், 26AS-இல் வரி விலக்கை நீங்கள் சரிபார்க்க முடியும். இது மாதாந்திர வரி விலக்கைக் காட்டுகிறது. உங்களது பே ஸ்லிப்-இல் முதலாளி காட்டும் வரியை டெபாசிட் செய்கிறாரா என்பதை நீங்கள் சரிபார்க்க முடியும். வருடத்தில் டிடிஎஸ் கழிக்கப்பட்டதா இல்லையா என்பதை சரிபார்க்கலாம்.

  • ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யும் வலைதளம் செல்ல வேண்டும்
  • யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு பதிவிட்டு இணையதளத்தில் லாக்-இன் செய்ய வேண்டும்
  • லாக்-இன் செய்ததும், நீங்கள் நீல நிற ரிப்பனுக்குச் சென்று, இ-ஃபைல் ஆப்ஷனை க்ளிக் செய்து ஸ்கிரால் டவுன் மெனுவை இயக்கலாம்.
  • ‘வருமான வரி ரிட்டர்ன்ஸ்’ ஆப்ஷனை க்ளிக் செய்து, ஸ்கிரால் டவுன் மெனுவில், ‘வியூ 26AS’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
  • இனி தனி இணையப்பக்கம் திறக்கும்.
  • அடுத்து, ​​நீங்கள் ‘வரிக் கிரெடிட்டை பார்க்க (படிவம் 26AS/வருடாந்த வரி அறிக்கை)’ என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
google news
Continue Reading

Cricket

மொத்தமா திருடிட்டாங்க.. இன்ஸடாவில் புலம்பி தள்ளிய ஆன்ட்ரே ரஸல்

Published

on

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஆன்ட்ரே ரசல். இவர் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ‘டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்’ அணிக்காக விளையாடி வருகிறார். 2024 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் போட்டி ஒன்றில் திருடப்பட்ட உணர்வு ஏற்பட்டதாக ஆன்ட்ரே ரசல் மன வருத்தம் தெரிவித்துள்ளார்.

பார்படோஸ் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது மைதானத்தில் இருந்த மின்விளக்கு சரியாக இயங்காமல் போனது. இதனால், போட்டி சிறிது நேரம் தடைப்பட்டு மீண்டும் துவங்கியது. போட்டி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து டி.எல்.எஸ். விதிப்படி எதிரணிக்கு வெற்றி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் டேவிட் மில்லரின் அதிரடி அரைசதம் காரணமாக பார்படோஸ் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

போட்டியில் பார்படோஸ் ராயல்ஸ் அணி பேட் செய்து கொண்டிருந்த போது சரியாக 19.1 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்களை குவித்து இருந்த போது மைதானத்தின் மின்விளக்குகள் செயல்படாமல் போனது. இதைத் தொடர்ந்து பத்து நிமிடங்கள் போட்டி நிறுத்தப்பட்டு, பிறகு மீண்டும் துவங்கியது.

அப்போது ஐந்து ஓவர் போட்டியில் ராயல்ஸ் அணி வெற்றி பெற 60 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த இலக்கை துரத்தும் போது டேவிட் மில்லர் 17 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

இது குறித்து கோபமுற்ற ஆன்ட்ரே ரசல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “இணையத்திற்கு வந்து எனது கருத்தை வெளிப்படுத்தக்கூடிய நபர் நான் இல்லை, ஆனால் இந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் தொடரை பொருத்தவரை நான் திருடப்பட்டதாக உணர்கிறேன். அந்த சூழல்…, சரியாக அந்த நேரத்தில் மின் விளக்குகளில் பிரச்சினை ஏற்பட்டது.. அதன்பிறகு 30 பந்துகளில் 60 ரன்கள் எனும் இலக்கு வழங்கப்பட்டது மிகப்பெரிய… ஆம் ஆன்ட்ரே ரசல் சரி என்று கூறியது சரி தான்.. … ஆனால் இது உண்மையான …,” என்று குறிப்பிட்டுள்ளார்.

google news
Continue Reading

Trending