latest news
டச் ஸ்கிரீன் கேஸ் கொண்ட இயர்பட்ஸ்.. கூடவே கொஞ்சம் கேஜெட்ஸ்.. ஹெச்.பி. அசத்தல்!
ஹெச்.பி. நிறுவனம் இந்திய சந்தையில் ஏராளமான கணினி சார்ந்த அக்சஸரீக்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ், வெர்டிக்கல் மவுஸ், வளைந்த மானிட்டர், 4K வெப்கேமரா மற்றும் டாக் உள்ளிட்டவை அடங்கும். புதிய அக்சஸரீக்கள் இந்திய ஹைப்ரிட் பணி கலாச்சாரத்தை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
ஹெச்.பி. போலி வோயேஜர் ஃபிரீ60 வயர்லெஸ் இயர்பட்ஸ்:
ஹெச்.பி. போலி வாயேஜர் மாடல் முழு சார்ஜ் செய்தால் 24 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இத்துடன் 16.5 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இதில் மொத்தம் மூன்று மைக்குகள் உள்ளன. இத்துடன் ப்ளூடூத் அடாப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த இயர்பட்ஸ்-இன் குறிப்பிடத்தக்க அம்சம் இதனுடன் வரும் சார்ஜிங் கேஸ் தான் எனலாம். இது ஒரு OLED ஸ்கிரீன் கொண்டு பாடல்களை மாற்றுவது, சாதனஙகளிடையே மாறிக் கொள்வது என ஏராளமான தாகியங்களுக்காக பயன்டுத்திக் கொள்ளலாம். இதில் உள்ள அம்சங்களை போன்றே விலையும் சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது
ஹெச்.பி. 925 வெர்கிட்டல் மவுஸ் :
பெயருக்கு ஏற்றார்போல் இந்த மவுஸ் பயனர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவான மிக உறுதியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது பயனரின் தசைக்கு அதிக சிரமம் ஏற்படுவதை தடுக்கிறது. இந்த வெர்டிக்கல் மவுஸ் கழற்றக்கூடிய ரிஸ்ட் பகுதி, பயனர் விரும்பும் வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ள ஐந்து பட்டன்கள் வழங்கப்படுகிறது. இதனை அதிகபட்சம் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று சாதனங்களுடன் இணைக்க முடியும். இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 8 ஆயிரத்து 999 ஆகும்.
ஹெச்.பி. E45c 45-இன்ச் Curved மானிட்டர் :
இந்திய சந்தையில் இந்த மானிட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்து 26 ஆயிரத்து 631 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மானிட்டர் இரட்டை QHD Curved மானிட்டர் மற்றும் 165hz வரையிலான ரிப்ரெஷ் ரேட் வழங்குகிறது. இந்த மானிட்டரை விர்ச்சுவல் டூயல் டிஸ்ப்ளே மூலம் ஸ்ப்லிட் செய்து பயன்படுத்தலாம். இதில் இரண்டு யு.எஸ்.பி.டைப் சி போர்ட்கள், நான்கு டைப் ஏ போர்ட்கள், ஒரு டிஸ்ப்ளே போர்ட் மற்றும் ஒரு ஹெச்.டி.எம்.ஐ. 2.1 போர்ட் வழங்கப்படுகிறது.
ஹெச்.பி. 960 வெப்கேமரா :
ஹெச்.பி. நிறுவனத்தின் புதிய வெப்கேமரா 4K திறன் கொண்டிருக்கிறது. இதன் மூலம் நொடிக்கு 60 ஃபிரேம்கள் வேகத்தில் 4K வீடியோக்களை நொடிக்கு 30 ஃபிரேமில் இயக்குகிறது. இத்துடன் மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ. 18 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
latest news
ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப வேறுபடும். தற்போது இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை சுமார் 800 ரூபாயில் துவங்குகிறது.
தொடர்ச்சியாக கியாஸ் விலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வருவதால், ஏழை எளியோரால் கியாஸ் வாங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. மேலும், பலர் கியாஸ் விலை உயர்வு காரணமாக மின்சார அடுப்பு, இதர மாற்று எரிசக்தியை சமையல் பயன்பாடுகளுக்கு பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
இந்த நிலையில், ரூ. 500-க்கும் குறைந்த விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? நாட்டில் மெல்ல பயன்பாட்டுக்கு வந்துக் கொண்டிருக்கும் புதிய வகை சிலிண்டர் ரூ. 500-க்கும் குறைந்த விலையில் கிடைக்கிறது.
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த சிலிண்டர்கள் ‘கம்போசிட் சிலிண்டர்” என அழைக்கப்படுகிறது. சாதாரண சமையல் கியாஸ் சிலிண்டர் எடை 14.2 கிலோ எடை கொண்டிருக்கும் நிலையில், கம்போசிட் சிலிண்டர்களின் எடை 10 கிலோவாக இருக்கும். குறைந்த விலை காரணமாக இதன் எடை குறைவாக இருக்கிறது. மேலும், இந்த சிலிண்டர்கள் மிக பாதுகாப்பாக உருவாக்கப்படுகின்றன.
மேலும், இதன் வடிவமைப்பு மற்றும் குறைந்த எடை காரணமாக இவற்றை எளிதில் தூக்க முடியும். இந்த சிலிண்டரில் கியாஸ் எவ்வளவு மீதம் இருக்கிறது. எப்போது கியாஸ் தீர்ந்து போகும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். கியாஸ் சிலிண்டர் தீர்ந்து போனாலும், இவற்றை உடனே பெற்றுக் கொள்ள முடியும்.
latest news
இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும் அறிந்தது தான். இந்த விஷயத்தில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ஆனால், இந்தியாவில் ரூ. 10,000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய காலக்கட்டத்தில் ரூ. 10,000 நோட்டுக்கள் நாட்டில் புழக்கத்தில் இருந்தது. 1938 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி முதன் முதலில் ரூ. 10,000 நோட்டை புழக்கத்திற்கு விட்டது. அன்றைய காலக்கட்டத்தில் புழக்கத்தில் விடப்பட்ட மிகப்பெரிய ரூபாய் நோட்டாக அது இருந்தது.
ரூ. 10,000 நோட்டு வியாபாரிகள் மற்றும் வர்த்தகம் செய்வோர் அதிக தொகை கொண்ட பரிவர்த்தனைகளை செய்வதற்காக கொண்டுவரப்பட்டது. இந்த நோட்டுக்களை ஏழை எளியோர் பலரும் பார்த்திருக்க வாய்ப்புகள் குறைவு ஆகும். இந்த நோட்டுக்களை பெரிய அளவில் வியாபாரம் செய்து வந்த சிலர் மத்தியிலேயே புழக்கத்தில் இருந்தது.
எனினும், 1946 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரிடிஷ் அரசாங்கம் ரூ. 10,000 நோட்டுக்களை மதிப்பிழக்க செய்து உத்தரவிட்டது. அன்றைய காலக்கட்டத்தில் கருப்பு பணம் அதிகளவில் புழங்கியதை அடுத்து இந்த நடவடிக்கையை அன்றைய பிரிடிஷ் அரசு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு 1954 ஆம் ஆண்டு ரூ. 10,000 நோட்டு மீண்டும் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது. இத்துடன் ரூ. 5000 நோட்டும் கொண்டுவரப்பட்டது. ஆனாலும், 1978 ஆம் ஆண்டு இந்திய அரசு ரூ. 10,000 மற்றும் ரூ. 5000 நோட்டுக்களை மீண்டும் மதிப்பிழக்க செய்தது.
india
முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர் தான் குமாரசாமி மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது என சொல்லியிருந்தார். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பதவியை ராஜினாமா செய்தால் தானும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மூடா நில முறைகேடு தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்த ராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு லோக் ஆயுத்தாவிற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுத்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து சொல்லி வருகிறது.
இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சித்தராமையா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாருக்கு பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நில ஒதுக்கீடு புகாரில் ஜாமீனின் உள்ள மத்திய அமைச்சர் குமாரசாமி ஆகியோர் பதவி விலக வேண்டும். அவர்கள் பதவி விலகினால் தானும் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.
latest news
தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் தமிழகத்தில் காட்டாட்சி தர்பார் நடந்து வருவதாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தின் கடந்த நாற்பது மாதங்களாக நடைபெறும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் காட்டாட்சி தர்பார் ஆட்சியில் அப்பாவி மக்களை வாட்டி வதைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது கொடுமையின் உச்சம் என விமர்சித்துள்ளார். 27.09.2024 அன்று சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஒரு சில தீர்மானங்கள், சென்னை மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து நேரடியாக பணத்தைப் பிடுங்கும் வகையில் அமைந்துள்ளது மிகவும் கண்டனத்திற்குறியது என தனது அறிக்கையின் வாயிலாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
ஆண்டு தோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு அப்படி சொத்து வரி உயர்த்தப்படும் போதெல்லாம் குடிநீர், மற்றும் கழிவு நீர் இணைப்புக் கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வும் மறைமுகமாக உள்ளடங்கியுள்ளது. மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்குவது, “பூமியில் பிறந்த மனிதன் நிம்மதி பெறுவது அவன் அடக்கம் ஆகும் போதுதான், பெரும் துயரம் கொள்வது உடனிருந்தவர்கள் காலமாகும் போது” என்று மேலை நாட்டு அறிஞர் ஒருவர் மனித வாழ்க்கை பற்றி குறிப்பிட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு அளிப்பது வழக்கம், தனியாருக்கு சம்பள உயர்வு என்பது அந்தந்த தனியார் நிறுவனத்தில் லாபம் ஈட்டுதலைப் பொறுத்தது. அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் சம்பள உயர்வு என தெரிவித்துள்ளார்.
latest news
அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது. அன்மையில் அமெரிக்க சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டிருந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அவர் வெளிநாடு செல்லும் முன்னரே மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என தமிழக நாளிதழ் செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களானது நாளை நடைபெறும் என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி முக்கிய அமைச்சர்கள் சிலரின் இலாகா மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
சட்ட விரோத பணப் பறிமாற்ற வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என உறுதி பட சொல்லியிருந்தார்.
பத்து நாட்களுக்குள் இது நடந்தே தீரும் என அமைச்சர் அன்பரசன் சொல்லியிருந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருப்பதற்கான வாய்ப்பு குறித்த செய்தியை அந்நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதனால் திராவிட முன்னேற்றக கழகத்தினரிடையே உதய நிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவாரா? என்ற ஆவல் மேலோங்கியுள்ளதாக தெரிகிறது.அதே போல முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மறுபடியும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எண்ணமும் மேலோங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.
-
Cricket2 days ago
களத்தில் சண்டை.. பவுலருக்கு சோக்-ஸ்லாம் போட்ட பேட்டர்.. வீடியோ வைரல்
-
Cricket1 day ago
நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…
-
latest news2 days ago
தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!
-
Cricket2 days ago
147 ஆண்டுகளில் முதல்முறை.. இலங்கை வீரர் மிரட்டல்.. கவாஸ்கர் கூட இந்த சாதனை படைக்கல
-
latest news2 days ago
வட்டியே இல்ல.. பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கும் வேற லெவல் அரசு திட்டம்
-
Cricket8 hours ago
இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..
-
Cricket9 hours ago
INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது
-
latest news1 day ago
ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…