இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் இன்றியமையாத் தேவையாக மாறிவிட்டது செல்போன்கள். அதிலும் ஆன்டிராய்ட் வகை செல் போன்களின் வருகைக்குப் பிறகு நிலைமை தலை கீழாகவே மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
உணவு உண்பது எப்படி முக்கியமோ, அதற்கு நிகரான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது இந்த செல்போன்கள் மனித வாழ்வில் தற்போது. கையில் மொபைல் போன்கள் இல்லாதவர்களை காணப்து அறிது என்பது தான் ஒத்துக்கொள்ளப்பட வேண்டிய உலகளாவிய உண்மையாகவும் மாறி வருகிறது.
தொலை தூரத்தில் உள்ளவர்களிடம் பேச உதவும் ஒரு தொடர்பு சாதனமாகத்தான் அறிமுகமானது லேண்ட் லைன் போன்கள். அதன் மீதான பரினாம வளர்ச்சியால் அடுத்தடுத்த கண்டுபிடிப்புக்கள் உதயமானது.
அதிலும் செல்போன்களின் வருகைக்கு பிறகு எவர், எங்கு இருந்தாலும் அவரை எளிதில் தொடர்புகொண்டு விடலாம் என்ற நிலை வந்தது. இதில் அடுத்த கட்டமாக ஆன்ட்ராய்ட் செல்போஙன்களின் அறிமுகம்.
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அங்கு செல்போன் டவர் இருந்தால் அவரது முகத்தை நேரடியாக பார்த்து பேசவைக்கும் அளவிற்கு கொண்டு சென்று விட்டது விஞ்ஞான வளர்ச்சி.
ஆரம்பகட்டத்தில் 2ஜி ஸ்பீடில் துவங்கி இப்போது 5ஜி வேகத்திற்கு வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது தொலைத்தொடர்பு.
இந்த வகையான 5ஜி மொபைல்கள் பயன்பாட்டு சந்தையில் இந்தியா தற்போது ஒரு சாதனையை செய்துள்ளது. இது குறித்து “கவுண்டர் பாயின்ட்” நிறுவனம் நடத்திய ஆய்வில் 5ஜி சந்தையில் அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி இந்தியா இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளதாக இந்த ஆய்வின் முடிவுகள் சொல்லியிருக்கிறது.
இந்த 5ஜி வகை மொபைல் பயன்பாட்டில் சீனா முதலிடத்தில் இருந்து வருவதாக சொல்லியுள்ள “கவுண்டர் பாயின்ட்”, நிறுவனம் 5ஜி சேவை விரிவாக்க காரணத்தினால் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது எனவும் சொல்லியிருக்கிறது. பட்ஜெட் விலையில் மொபைல் போன்கள் கிடைப்பது இந்த இடண்டாவது இடம் கிடைக்க காரணமாக இருப்பதாகவும் “கவுண்டர் பாயின்ட்” நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் சொல்லியிருக்கிறது.
ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…
கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…
பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…
இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…